இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் பிரிவுக்கு காரணம்

நாணயத்துக்கு இரு பக்கம் தலை , பூ புத்தகத்துக்கு இரு பண்பு நல்லது, கேட்டது இதயத்துக்கு இரு அறை வலது ,இடது காதலுக்கு இருவர் நானும் நீயும் காதல் பிரிவுக்கு காரணம் அதிக எதிர்பார்க்கை புரிந்துணர்விண்மை....!!!

நான் தோற்றேன் ....!!!

பல சோதனைகள் பல இடர்கள் அத்தனைக்கும் தீர்வு கண்டேன் ....!!! நீ ஏன் என்னை பிரிந்தாய் என்று இன்றுவரை தீர்வு காணவில்லை ...!!! எல்லோரும் வெற்றி பெற்றால் காதல் எப்படி வெல்லும் ...? அதனால் நான் தோற்றேன் ....!!!

புரியுமா என் துடிப்பு ,,,,!!!

வரிகள் கண்ணீர் விட விட காதல் கவிதை தோல்வியடையும்...!!! வரிகள் இனிக்க இனிக்க காதல் கவிதை இனிமையாகும் ...!!! நினைவுகளுக்கு தெரியும் உணர்வு -உன் இதயத்துக்கு புரியுமா என் துடிப்பு ,,,,!!!

காதல் கொண்டதற்கு ....!!!

நேசம் வைத்த உறவுகள் எல்லாம் உன்னை காதலித்த வேளை பிரிந்து செல்ல காதல் என்னும் மாயையில் விழுந்தேன் ....!!! நீயும் பிரிந்தபின் தனிமை என்னும்  சிறையில் தவிக்கிறேன் வேண்டும் எனக்கு மாயையால் காதல் கொண்டதற்கு ....!!!

காதலும் கவிதையும்

நான் உனக்கு தந்த கவிதைகளையெல்லாம் நீ காகித கப்பல் செய்து விளையாடி விட்டாய் ....!!! நீ எனக்கு தந்த கவிதை உன் பெயர் தான் அதை கொண்டே நான் ஒரு அகராதி அமைத்து விட்டேன் ...!!! காதலும் கவிதையும் யார் யாருக்கு என்று புரிந்து கொள்ள வேண்டும் ....!!!

மறக்க நினைக்கிறேன்

மறக்க நினைக்கிறேன் பலவற்றை ...!!! நினைக்க விரும்புகிறேன் சிலவற்றை....!!! மறக்கவே முடியாதவை நினைக்கவே முடிந்தவை ஒன்றே ஒன்றுதான் நட்பு ....!!!

உயிர் தோழன் நீ

தோள் கொடுக்க உயிர் தோழன் நீ இருக்கும் வரை தோல்விகள் ஆயிரம் ஆயிரம் தோன்றினாலும் துவண்டு விழேன் உன் சுட்டு விரல் எனக்கு சுட்டிக்காட்டும் வெற்றியை ....!!!

புரியதெரியவில்லை...!!!

இத்தனை நாள் பழகி விட்டு உன்னை காதலிக்க வில்லை நட்போடுதான் பழகினேன் என்கிறாயே உனக்கு காதலையும் மதிக்க தெரியவில்லை நட்பையும் புரியதெரியவில்லை...!!!

இதுதான் நட்படா ....!!!

அவன் இவனிடம் என்னை பேசியபோதுதான் உணர்ந்தேன் அவன் அவனுக்காக வாழவில்லை எனக்காக வாழுகிறான் வாழ்ந்திருக்கிறான் இதுதான் நட்படா ....!!!

நட்பு நட்பு ...!!!

முகம் பார்ப்பதில்லை முகநூலில் பேசுவோம் ஊர் பேர் தெரியாது உண்மையோ பொய்யோ தெரியாது என்றாலும் ஊற்றெடுக்கும் கிணறுபோல் ஊறிக்கொண்டே இருக்கும் ஒரே விடயம் நட்பு நட்பு ...!!!

வெந்து துடிக்கும் எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!!

வாழ்க்கையில்...  நடந்து வந்தபாதையை   திரும்பி பார்க்கிறேன்  வாழ்ந்த காலத்தில்  வாசமும் இருந்தன  துர் நாற்றமும் இருந்தன  வலிகளும் இருந்தன  துடிப்புகளும் இருந்தன ....!!! பாசத்தோடு உறவாடிய உறவுகள்....  பாசத்தை ஒரு முகமூடியாய்  அணிந்து உறவாடிய உறவுகள்.....  தோள் கொடுக்கும் நண்பர்கள்....  தோன்றியதை சுருட்டிய நண்பர்கள் ...!!! கண்ட இடத்திலே கைகுலுக்கி  இவன் ஏதும் உதவி கேட்டிடகூடாது  என்று எங்கும் உறவுகள் ..... கஷ்டத்தில் கை கொடுக்கும் உண்மை உறவுகள்  இப்படியே ஏராளம்.....! பிறந்த உடன் பிறப்புக்களை  சொல்லாமல் விடுவேனா ..? பேசி திருமணம் செய்த அக்கா  குடும்பம் பாசத்தில் இமயம்  பாசத்தின் இமயத்தில் கொடுத்த  சீர்வரிசை .....!!! ஓடிப்போய் திருமணம் செய்த  தங்கையின் குடும்பத்தில்  பாசத்தை காணோம் ... கொடுத்தால் தானே பாசம் வர ...!!! தான் மட்டும் வாழ்க்கையில் உயர்ந்திட நினைக்கும் தம்பியின்  குடும்பம் ....!!! தங்களை விட உயர்ந்திட  கூடாது  என்பதில் மிக கவனமாக இருக்கும்  அண்ணியின் குடும்பம் .... சற்று உயந்தால் என் மனைவியின்  குறையை குத்திக்காட்டும் அண்ணி  இப்படியே ஏராளம்.......!!! இத்தனையை பார்த்துகொண்டு  பே

துடித்தே இறந்துவிடுவாய்...!!!

இன்று தெரியாது உன் மௌனத்தின் வலி உனக்கு காதல் உணா்த்தும்வரை காத்திருப்பேன் சில வேளை நீ காதலித்தால் என்று முதல் உணர்த்துவேன் என் மௌன மொழி துடித்தே இறந்துவிடுவாய்...!!!

அதுதான் என் துணை ....!!!

உன்னை கண்டவுடன் என்னை மறந்தேன் என்பது பழையவார்த்தை உன்னை கண்டவுடன் என் கடந்த காலத்தை மறந்தேன் என்பது புதிய வார்த்தை ....!!! எவருடன் பேசும் போது மீண்டும் மீண்டும் பேச தூண்டுதோ அவர் எனக்கான -ஞானி எவளை  கண்டவுடன் என் கடந்த காலத்தை மறந்தேனோ அதுதான் என் துணை ....!!!

உறவுகளை புரிந்து கொள்....!!!

சிரிக்கும் போது கூட்டத்துடன் சேர்ந்து சிரி அழும்போது தனியாக இருந்து அழு -அய்யா கண்ணதாசன் சொன்ன தத்துவம் இது ....!!! என் சிந்தனை ...!!! சிரித்தபோது கூடி இருந்த உறவுகள் அழும் போது தனிமையாக்கி சென்று விட்டன ...!!! உணர்ந்தேன் இப்போ ....? சிரிக்கும் போது உறவுகளை ரசித்துக்கொள் அழும்போது உறவுகளை புரிந்து கொள்....!!!

நான் வெளிமூச்சானேன் ....!!!

என் முகத்தை தொலைத்தேன் உன் முகம் வருமென்று என் முகமே இருந்தது ....!!! ஞாபகங்களுக்கு ஒரு வீடு கட்டினால் அதில் நீ ஒரு ஒட்டறை தட்டினாலும் வருவாய் ....!!! என் உள் மூச்சு நீ அதனால் தான் வாழுகிறேன் உனக்கு நான் வெளிமூச்சானேன் ....!!! கஸல் 606

இருப்பேன் - காதலோடு

உன்னை கணட நாள் என் இறந்த நாள் உன்னை பிரிந்த நாள் உனக்கு பிறந்தநாள் ....!!! காதல் எல்லோர் மனதில் இருக்கும் அது  போது விதி இதையேன் புரியவில்லை- நீ நான் இயற்கை காற்று நீ இருக்கும் வரை நானும் உன்னோடு இருப்பேன் - காதலோடு கஸல் 607

கண்ணீரைப்போல்

என் பெயரின் ஒவ்வொரு எழுத்தும் நீ எழுத்து பிழை இல்லாமல் இருந்தால் ....!!! கண்ணீரைப்போல் திடீரென வருகிறாய் வழிந்தே போய் விடுகிறாய் ...!!! பகலில் இருக்கும் நட்சத்திரம் போல் இருக்கிறது உன் ஞாபகம் .....!!! கஸல் 608

நீ சொல்வதெல்லாம் தாங்கும் ....!!!

உன்னை கண்டவுடன் நான் களவு போன பொருளானேன் ....!!! காதல் தோல்வியால் விஷம் அருந்தினேன் அதிலும் நீ நிறுத்திவிட்டேன் விஷ குடிப்பை ...!!! இதயம் ஒரு இரும்பென்றால் நீ சொல்வதெல்லாம் தாங்கும் ....!!! கஸல் 609

மருந்தும் நீதான் ...!!!

நீ பிரிந்தாய் காதல் இலைதான் உதிர்ந்ததே தவிர காதல் மரமல்ல ....!!! உன் நினைவுகளை கனவு வலையாய் பின்னி வைத்திருக்கிறேன் நீ சிக்காமலா விடுவாய் ...!!! உன் மௌனம் தான் என் இதயத்தில் காயத்தை ஏற்படுத்தியது மருந்தும் நீதான் ...!!! கஸல் 610

எண்ணத்தால் எரிகிறேன் .....!!!

படம்
என் இதயமும்  மெழுகு திரியும்  ஒன்றுதான் - தனக்காக  வாழாமல் பிறருக்காக  எரிகிறது -நான்  எனக்காக வாழாமல்  உனக்காக உருகுகிறேன்  அது எண்ணையால் எரிகிறது  நான் எண்ணத்தால்  எரிகிறேன் .....!!!

தந்துவிட்டேன் ...

காதலில் நீ தந்த கடித்தத்தை திருப்பி தந்துவிட்டேன் ... உன்னோடு இருந்த சின்ன சின்ன புகைப்படத்தை தந்துவிட்டேன் .... என் இதயத்தில் நீ கற் சிற்பமாய் இருக்கிறாய் எப்படி உடைத்து எடுக்க போகிறாய் ....?  

உயிரோடு இருக்கிறார்கள் ,,,,!!!

அவன் அவள் இல்லாமல் உயிரற்று இருக்கிறான் அவள் அவனில்லாமல் ஊற்றெடுக்கும் கண்ணீரோடு இருக்கிறாள் ....!!! காதல் வாழ்வதால் இருவரும் உயிரோடு இருக்கிறார்கள் ,,,,!!!

உன் ஆறுதலான

ஆனந்தம் என்பது காதலில் ஆரவாரத்தில் இல்லை -உன் ஆறுதலான வார்த்தையில் தான் இருக்கும்

கற்பனை புதுமைதரும்

காதல் இனிமைதரும் இனிமை நினைவு தரும் காதல் பிரிவு வலிதரும் வலிகள் வரிகள் தரும் வரிகள் கவிதை தரும் கவிதை கற்பனை தரும் கற்பனை புதுமைதரும் புதுமை இளமைதரும் ...!!!

எப்போதோ நினைத்துவிட்டேன் ....!!!

இதயம் உருகும் வார்த்தைகள்  ஏக்கம் நிறைந்த பார்வைகள்  நிலையில்லாமல் ஓடித்திரியும்  கால்களும் மனமும்  துடித்து துடித்து சாகும்  உன் இதயம் -போதுமடா  நீ படும் வேதனை  உன்னை நான் எப்போதோ  நினைத்துவிட்டேன் ....!!!

கற்பனை புதுமைதரும்

காதல் இனிமைதரும் இனிமை நினைவு தரும் காதல் பிரிவு வலிதரும் வலிகள் வரிகள் தரும் வரிகள் கவிதை தரும் கவிதை கற்பனை தரும் கற்பனை புதுமைதரும் புதுமை இளமைதரும் ...!!!

உள்ளம் கவர்ந்த கள்வனே

நீ அழகாக ஆணழகன் என் இதயத்தை உடைத்தவன் அரும்பிய மீசையில் காந்த கண்ணில் என்னை தூண்டில் போட்டவன் - நீ பருவத்தில் வரும் காதலில் மயங்கிடாமல் பக்குவத்தால் காதல் வசப்படுத்துபவன்.....!!!

உள்ளம் கவர்ந்த கள்வனே

என்னை திருடியிருந்தால் போனால் போகட்டும் என்று விட்டிருப்பேனடா உள்ளம் கவர்கள்வனே இதயத்தை மட்டுமல்லா திருடிவிடாய் - உயிர் உன்னிடம் வெறும் உடல் என்னிடம் இருந்து என்ன பயனடா ....? வந்து விடு என்னை கொண்டு செல் -இல்லையேல் என் இதயத்தை தந்துவிடு ....!!! 

உள்ளம் கவர்ந்த கள்வனே

என்ன துணிவடா உனக்கு பெண் கேட்டு வீட்டுக்கு வரப்போகிறேன் என்று அடம்பிடிக்கிறாய் ...!!! பெண் கேட்டு வரமுதல் என்னை புரிந்து கொள் காதல் உடனடியாக நிறைவேறினால் இன்பமில்லை -வாடா சிலநாட்கள் காரணமே இல்லாமல் சண்டையிடுவோம் வேண்டுமென்றே கோபிப்போம் காதலில் ஊடல் இல்லாவிட்டால் இரண்டு சடப்பொருள் காதலிப்பதுபோல் ஆகிவிடும்

காதல் இன்றேல் ...?

உன்னுடன் பேசும் போது.... என் தாய்மொழியின் .... இன்பம் தெரிகிறது .....!!! எடுத்த வார்த்தைகளை உன்னையும் காதலையும் வர்ணிக்கும் போதுதான் காதலில் ஆழமும் -என் தாய் தமிழின் ஆழமும் எல்லை யற்றிருப்பதை உணர்ந்தேன் கண்ணே

கண்ணீர் தருகிறாய் ...?

கண்ணில் தூசு விழுந்தால் கண்ணீர் வருவது இயல்பு இதயத்தில் விழுந்த நீ ஏன் கண்ணீர் தருகிறாய் ...?

வேறொன்றும் பிடிக்காது

நீ எனக்கு கொடுத்தவலிகளை நீயே ஜோசித்துப்பார் உனக்கே பிடிக்காது ஆனால் நீ என்னதான் வலிகள் கொடுத்தாலும் வலிகளை தவிர வேறொன்றும் பிடிக்காது

உன் சிரிப்பால்

உன் சிரிப்பால் சிதறு தேங்காய் ஆனது இதயம்

நித்திரை செய்ய துடிக்கிறேன்

உன்னை காதலிக்கமுன் நித்திரை இன்றி தவித்தேன் உன்னை காதலித்தபின் உன் மடியில் நித்திரை செய்ய துடிக்கிறேன்

உடல்கள் தான் இரண்டு ...!!!

படம்
மறக்க நினைக்கிறேன். உன்னை அல்ல.. உன் அழகை உன்னோடு சண்டையிட்ட நிமிடத்தை மறக்க நினைக்கும் பொழுதெல்லாம் என்னை நீ மறக்க விடுகிறாயில்லை

கொன்றவள் நீ

படம்
அறிவான ஒருவனை  அறிவிலியாக்கியது  உன் அழகும் சிரிப்பும்  அதனால் தான்  எல்லாவற்றையும்  இழந்து உன்னை  காதலிக்கிறேன்  மனதை மட்டும் அல்ல  என் வாழ்க்கையையும்  கொன்றவள் நீ 

எனக்கு தீபாவளி ....!!!

படம்
எல்லோரும் தீபாவளியை நரகாசுரனை கொன்றதற்காக கொண்டாடினார்கள் ....!!! நானோ நீ என்னை பார்வையால் கொன்ற நாளையே என்றும் எனக்கு தீபாவளி ....!!!

வணக்கம்

வணக்கம் *********** நட்புகளே எல்லா வகை கவிதையும் கேட்பதற்கேற்ப என்னால் முடிந்த வரை எழுதுகிறேன் -உங்கள் ரசனைக்கும் ஆர்வத்துக்கும் என்று நாம் தலைவணங்குகிறேன் கவிதை எனது துணைப்பணியே நன்றி ;மீண்டும் சந்திப்போம்

சஞ்சலப்படுத்துதே

 உன் தலைகுனிவு என்னை சஞ்சலப்படுத்துதே

எனக்கு உன் வலிகள்

எனக்கு உன் வலிகள் வலிப்பதில்லை இதயம் புண்ணாகி போனதால்

நீயும்தான் காதல்

உன் கண்ணில் நானும் என்கண்ணில் நீயும்தான் காதல்

உன் அழகுதான்

உன் அழகுதான் எனக்கு மரண தண்டனை

நெருப்பாய் பார்க்கிறாய்

பூக்களால் கவிதை எழுதுகிறேன் நெருப்பாய் பார்க்கிறாய்

காதலின் பெறுபேறு

நான் விடுவது கண்ணீர் அல்ல காதலின் பெறுபேறு

என்னை திண்டேன்

உன்னை கண்டேன் என்னை திண்டேன்

என் ஆயுள் ரேகை

நீ சொல்லும் வார்த்தை என் ஆயுள் ரேகை

மரணத்தில் வா

நியத்திலும் கனவிலும் வராமல் மரணத்தில் வா

அவள் மௌனம்

அவள் மௌனம்தான் மௌன அஞ்சலியாக்கியது

பெரும் பாக்கியம்

காதலி கிடைத்தது பாக்கியம் இல்லை நீ கிடைத்தது தான் பெரும் பாக்கியம்

இதயத்தில் பதிகிறது

நீ அருகில் சென்றாலே -உன் பாதசுவடு என்னில் இதயத்தில் பதிகிறது

கைது செய்யுங்கள்

என் இதயத்துடிப்பு அதிகரித்தத்தற்கு காரணமான அவளை கைது செய்யுங்கள்

இரு வரி கவிதைகள்

என்னை புரியும் படி உன்னை - அனுப்பிய கடவுளுக்கு நன்றி

இரு வரி கவிதைகள்

சூரியனும் நீயும் ஒன்றுதான் இருந்தால் இன்பம் மறைந்தால் மௌனம் ...!!!

நீ முழுமனிதனாவாய்....!!!

காதலித்துப்பார் நீ காதலில் தோற்றுப்பார் நீ இரண்டும் செய்தால் நீ முழுமனிதனாவாய்....!!! நீ என்னை விரும்பவில்லை உன் நிழல் என்னை விரும்புகிறது தொடக்கத்துக்கு இது போதும் காதலில் கல்லெறியும் சொல்லெறியும் காதலரின் உரம்தான் செடியாக நாம் இருந்தால் ....!!! கஸல் ;561

காதல் அழுதால் தான் வரும்

நிலவோடு உன்னை ஒப்பிட்டேன் அமாவாசை ஆகிவிட்டாய் நெருப்புக்குதான் சுடும் பண்பு -நீ நீர் என் சுட்டெரிக்கிறாய் காதல் எல்லாவற்றையும் மாற்றும் ....!!! அழுது புரண்டாலும் மாண்டார் திரும்பி   வரார் காதல் அழுதால் தான் வரும் கஸல் ;562

இரட்டை உடலோடும்

ஒற்றையடி பாதையால் உன் நினைப்பில் சென்றேன் ஒற்றை இதயத்தோடு அல்ல இரட்டை உடலோடும் உன்னை கண்டால் ஏங்கிய மனம் உன்னை கண்டு ஒழிக்கிறது ....!!! காதல் சிலந்தி வலையில் அகப்பட்ட பூச்சிபோல் பூச்சியும் பாவம் சிலந்தியும் பாவம் ....!!! கஸல் 563

கூட வரவில்லையே ....!!!

பகலில் சந்தித்தால் மறைந்து விடுகிறாய் இரவில் சந்தித்தால் பயப்பிடுகிறாய் காதலின் நேரம் நீ சொல் ....!!! உருட்டு கட்டையால் உனக்காக அடிவாங்கினாலும் நான் கட்டையில் போகும் வரை நீ தான் கண்கண்ட காதலி காதலில் பூ வரவேண்டும் பிஞ்சு வரவேண்டும் காய் வந்து கனிய வேண்டும் நீ இன்னும் மரமாக கூட வரவில்லையே ....!!!

எனக்காகவும் இல்லை

பார்த்தேன் காதலித்தாய் பழகினேன் பேசினாய் பார்க்கிறேன் -ஏன் திரும்பி போகிறாய் ....!!! நிலவில் கால் வைக்கலாம் உன் நினைவில் கால் வைத்தால் சுடுகிறது ....!!! உனக்காக இல்லை எனக்காகவும் இல்லை காதலுக்காக காதலிப்போம் வா அன்பே .....!!! கஸல் ;565

ஏங்குகிறேன் ....!!!

இதயம் தானடி விட்டு விட்டு துடிக்கும் உன் நினைவு நினைப்பது விடாமலே துடிக்குது ....!!! முதல் நாள் உன்னை சந்தித்தேன் இரண்டாம் நாள் உன்னோடு கதைத்தேன் வாழ் நாள் முழுவதும் ஏங்குகிறேன் ....!!!

ஆறுதல் சொல்ல நீ எங்கே...?

வெள்ளை மனமாக இருந்த என்னை வான் வில்லாக மாற்றினாய் சந்தோசப்பட்டேன் நிலைக்க வில்லை சந்தோசம் வானவில்லில் அம்பை சொறுவியவள் நீ பலர் அழும்போது ஆறுதல் சொன்ன நீ இப்போ நான் அழுகிறேன் ஆறுதல் சொல்ல நீ எங்கே...?

வலியை துடைப்பாய் ....!!!

என் இதயத்தை உன்னிடம் தந்துவிட்டேன் விளையாட்டுப்பொருளாகவும் இதய வீட்டுப்போருளாகவும் பாவிப்பது உன்னை பொறுத்தது காதல் எதிர் பார்ப்பற்ற இதயங்களின் இணைப்பு இறைவனின் பிணைப்பு நீ விளையாட்டு பொருளாக பயன் படுத்தினால் வலியை தருவாய் ..... இதயவீட்டு பொருளாக பயன்படுத்தினால் -வலியை துடைப்பாய் ....!!!

கவலையில்லை

தேவையான எல்லா விடயங்களையும் உனக்காக மறந்தேன் கடவுளின் தண்டனை நீ என்னை மறந்து விட்டாய் ...!!! உனக்கு பூ தந்தேன் அன்புக்கு அடையாளமாய் நீ சூடுவதற்கு தந்ததாக நினைத்து விட்டாய் ....!!! நீ பிரிந்து செல் கவலையில்லை உன் நினைவுகள் என்னிடம் இருக்கும் வரை கவலையில்லை

உன்னிடம் என் இதயம் ....!!!

நினைவுகளுடன் என்னை போராடவிட்டு -நீ எப்படி நிம்மதியாய் இருக்கிறாய் ...? நான் உயிரோடு இருக்கும் காலம் வரை உன் உயிராக இருக்கும் காதல் வரத்தை தந்துவிடுவாயா அன்பே ...? உன்னை எல்லோருக்கும் பிடிக்கிறது அதுதான் எனக்கு பயமாக இருக்கிறது -என்றாலும் நான் கொடுத்து வைத்தவன் உன்னிடம் என் இதயம் ....!!!

உயிர் பெறுகின்றன அன்பே ....!!!

உன் நினைவோடு வாழ்வது போதாது என்று நினைவு பொருளையும் தந்து கொல்லுகிறாய் .... வீட்டார் யாரும் இல்லை என்று நினைத்து எத்தனை முறை -உன் நினைவு பொருட்களுடன் கதைத்து தம்பி தங்கையுடன் கிண்டல் வாங்கினேன் தெரியுமா ....? நீ நினைவு பொருளாக தருகிறாய் என்னிடம் வந்து அவை உயிர் பெறுகின்றன அன்பே ....!!!

சிற்பமாய் இருக்குதடி

எந்த விலை கொடுத்தாலும் பெறமுடியாது -உன் சிரிப்பு எந்த விலை கொடுத்தாலும் பெறமுடியாது - உன் வெட்கம் மலர்மேல் உள்ல காதல் பனிக்குத்தான் தெரியும் உன் மீதுள்ள காதல் என் இதயத்துக்குத்தான் த்தெரியும் ...!!! நீ சிரித்த அத்தனை சிரிப்பும் சிற்பமாய் இருக்குதடி நெஞ்சில் ...!!!

-நீ அசையும் திசையெல்லாம்

காதல் ஒன்றுதான் புரிந்து கொண்டாலும் அழகு -பிரிந்து சென்றாலும் அழகு -வலிகள் தான் வேறுபடும் காதல் வேறுபடாது ....!!! உன்னை என்று பார்த்தேனோ அன்று நான் இறைவனிடம் கேட்ட வரம் உன்னை எனக்கு தா என்று அல்ல ...? உன்னை தவிர யாரையும் தந்துவிடாதே என்று ....!!! உன் காந்த கண்ணில் பட்டு துடிக்கும் இரும்பு கண் நான் -நீ அசையும் திசையெல்லாம் அசைகிறேன்....!!!

உயிராகிவிட்டாய் ....!!!

நீ வரும் வழியையே என் விழி பார்க்கும் -உன் விழிக்கு அப்பால் சென்று என் உயிர் உன்னை தேடும் ....!!! தேடிக்களைத்த என் உயிர் துடிப்பதை நிறுத்த ஜோசிக்கும் உன்னை தேடுவதை நிறுத்த ஜோசிக்காது ....!!! என் உயிர் என்னக்காக துடித்ததை விட உனக்காக துடிப்பதே பாக்கியம் என்கிறது அந்தளவுக்கு நீ உயிராகிவிட்டாய் ....!!!

ஒருவரி நட்புவரி -01

நண்பா கர்ணனாக இருக்கவேண்டியதில்லை கருணையோடு இருந்தால் போதும்

ஒருவரி நட்புவரி -03

ஒருவரி நட்புவரி -03 நட்பு சூரியனுமில்லை சந்திரனுமில்லை வானம்

ஒருவரி நட்புவரி -

ஒருவரி நட்புவரி -04 தடையில்லாமல் வரும் தடுத்தாலும் வரும் -நட்பு

ஒருவரி நட்புவரி

ஒருவரி நட்புவரி -05 இதயத்தில் இருந்தால் காதல் இதயமாக இருப்பது நட்பு

ஹைக்கூக்கள்

ஹைக்கூக்கள் இனிக்கும் நீரையும் (அன்பு ) தரும் வெறிக்கும் நீரையும் ( சோகம் ) தரும் ---தென்னை --

ஹைக்கூ 02

ஹைக்கூ 02 பலத்தாலும் மேன்மை குணத்தாலும் மேன்மை --யானை --

ஹைக்கூ 03

ஹைக்கூ 03 வடிந்தால் அழகு பாய்ந்தால் பயம் --நீர் --

ஹைக்கூ 04

ஹைக்கூ 04 ஆரோக்கியனுக்கு சங்கடம் நோயாளிக்கு அன்பளிப்பு --மரணம்--

ஹைக்கூ 05

ஹைக்கூ 05 பத்தும் பலதாய் வரும் பத்திரமாத தங்கம் -பத்திரிக்கை -

கல் எறிந்து கண்ணாடியை

உன்னை நானும் என்னை நீயும் கைது செய்துவிட்டோம் காதல் ஆயுள் கைதி காதல் இன்பம் மட்டும் வாழ்க்கையில்லை காதலில் துன்பமும் வாழ்க்கைதான் நான் காதல் கண்ணாடியால் உன்னை ரசிக்கிறேன் -நீ கல் எறிந்து கண்ணாடியை உடைக்கிறாய் ....!!! கஸல் 556

வாட வைக்கிறாயே ...!!!

காற்று மூச்சு விடத்தான் அவசியம் -நீ காற்றை பேச்சுக்கு பயன்படுத்துகிறாய் மழை காலத்தில் வரும் வண்டுகள் போல் அப்பாப்போ வந்து போகிறாய் என் காதல் அழுகிறது வெயிலில் பூ வாடலாம் காதல் மரத்தை வாட வைக்கிறாயே ...!!! கஸல் ;557

காதல் வானவில்லை

காதலின் தோல்வியின் அடையாள சின்னத்தை தந்து விட்டாய் -நன்றி என் கண்ணுக்கும் புரியும் நீ காதல் சூரியனா ..? காதல் சூரிய ஒளியா ..? புரியாமல் தவிர்க்கிறேன் வார்த்தை சுடுகிறது காதல் வானவில்லை கடலில் வரைய சொல்லுகிறாய் மிக விரைவாக அழிப்பதற்காக கஸல் 558

கல்லறை

காதலித்த பின் நான் துடித்து கொண்டு இருக்கிறேன் - நீ சாதாரணமாக இருக்கிறாய் என் முத்தங்களை தந்துவிடு நினைவுகளை வைத்துக்கொள் ....!!! உனக்காக எழுதிய கவிதை எல்லாம் கல்லறை வாசகங்களாக மாறி வருகின்றன ....!!! கஸல் 559

வாழ்க்கைக்கு

உனக்காக நான் காத்திருப்பேன் நேரம் காத்திருக்குமா..? உன்னைப்போல் அதுவும் ஓடுகிறது ....!!! உன்னை சுவாமியாக கண்டேன் -இப்போது சாமியாராக போலி வார்த்தை கூறுகிறாய் வாழ்க்கைக்கு வளம் காதல் -அதை வாள் ஆக்கிவிட்டாய் -நீ கஸல் 560

நீ - படும் பாடு

நீ - படும் பாடு என்பாட்டில் தனியே இருந்தேன் என்னை செத்தவன் போல் ஆக்கிவிட்டாய் யார் நீ ************** என்னை மட்டும் நினைத்த மனதில் உன்னையும் நினைக்க வைத்தாயே ஏன் நீ *************** யாரையும் காதலிக்க மாட்டேன் என்றிருந்தேன் உன்னை கண்டேன் -எல்லாம் மாறிவிட்டது எப்படி நீ ..? *************** தினமும் வருயாய் புதினம் தருவாய் இப்போது எல்லாம் நிறுத்தி விட்டாயே எதற்காக நீ *************** இருவராய் இருந்தோம் ஒருவராய் மாறி விட்டாய் எப்போது நீ *************** இதயத்தில் இருந்து உடல் முழுதும் ஓடித்திரிந்த நீ -இப்போ மனதில் கூட இல்லையே எங்கு நீ *************** ஏன் சந்தேகப்பட்டாய் எதற்காக பிரிந்தாய் எவர் தூண்டியது எவரால் நீ *************** எனக்காக வாழவில்லை உனாக்காகவும் வாழவில்லை அப்படிஎன்றால் ..? யாருக்காக நீ *************** பார்க்கும் இடமெல்லாம் பார்க்கும் பொருள் எல்லாம் தொடும் இடமெல்லாம் எங்கும் நீ **************** யாரெல்லாம் என்னை காதலிக்கலாம் எவருக்கெல்லாம் என்னை திருமணம் பேசலாம் ஆனால் என் மனதில் எப்போதும் நீ

மனம் இருளவில்லை .....!!!

உனக்காக காத்திருக்கிறேன் வானம் இருண்டுவிட்டது கவலைப்படாதே -மனம் இருளவில்லை .....!!! எத்தனையோ சாலைகளில் இத்தனை வயது வரை விபத்தில் சிக்கவில்லை உன்னிடம் சிக்கிவிட்டேன் ....!!! உன் நினைவோடு இடறி விழுந்தேன் - என் இதயம் அழுகிறது -உன் இதயத்தை காப்பாற்றி விட்டேன் .....!!!

உன் புன்னகையின்

கண் பட்டு காயப்பட்ட முதல் மனிதன் நானாக தான் இருக்கமுடியும் ... உன் புன்னகையின் வெளிச்சத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டவனும் நானாகத்தான் இருக்க முடியும் ....!!!

மயங்கியது கண் தானே ....!!!

என் இதயத்துக்கு உன்னை பார்க்கும் சக்தி இருந்திருந்தால் அன்றே உன்னை வெறுத்திருக்கும் என் கண்ணை நானே குத்தவேண்டும் உன்னை கண்டு மயங்கியது கண் தானே ....!!!

ஹைக்கூ கவிதை

ஹைக்கூ கவிதை பிள்ளையாருக்கு பால் அபிசேகம் ஏக்கத்துடன் பார்க்கிறாள் - பால் வற்றிய தாய் -

கொடுக்கும் நட்பு ....!!!

எனக்கு வேண்டியதை நான் விரும்பும் போது எதிர்பாராமல் கொடுக்கும் நட்பு ....!!! தனக்கு வேண்டியதை என்நிலையை பொறுத்து தீர்மானிக்கும் நட்பு .....!!! தனக்காக இருந்த ஒன்றையும் சற்றும் ஜோசிக்காமல் தரும் நட்பு ....!!!

உனக்கான கவிதை

உன்னை கண்டவுடன் பொய் சொல்ல முடியாமல் தவிர்க்கும் போது வருவதே உனக்கான கவிதை

சிற்பமாக வடிக்கிறேன் ....!!!

நீ கருங்கல்லாக இரு நான் சிற்பமாக வடிக்கிறேன் இரும்பாக இரு அதிலும் சிற்பமாக வடிக்கிறேன் ....!!!

முத்தம் கிடைக்கும் ....!!!

பலமுறை பார்த்தால் ஒருமுறை காதல் வரும் -காதலின் பின் பலமுறை ஏங்கினால் -ஒருமுறை முத்தம்  கிடைக்கும் ....!!!

எப்போதும் மறக்காமல்

எப்போதும் மறக்காமல் இருப்பது காதல் என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பது நட்பு

நீ என்னை வெறுத்து

நீ என்னை வெறுத்து பலமாதங்கள் ஆகிவிட்டது -என்றாலும் நாம் முதல் நாளில் பெற்ற இன்பத்துடன் வாழ்ந்துகொண்டே இருக்கிறேன் ....!!!

எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?

எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?   காற்சட்டை போட்ட வயதில் .... கைகோற்றுக்கொண்டு ஒட்டிபிறந்த உடன் பிறப்புப்போல் ஊர் முழுவதும் சுற்றி திரிவோம் வெய்யில் மழை பாராமல் - உன் பெயரை எனக்கும் என் பெயரை உனக்கும் மாற்றி கூப்பிடும் தாத்தாவின் தர்மசங்கடத்தை இன்று நினைத்தாலும் சிரிப்புவரும் .. சொல்லி சிரிக்க வேண்டும்போல் இருக்கடா எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...? லுங்கி கட்டியவயத்தில் ..... எனக்கு வருத்தமென்றால் -உன் உடல் சோரும் -உனக்கு வருத்தம் என்றால் எனக்கு உடல் சோரும் ஊரிலுள்ள மூலிகை எல்லாம் கொண்டுவந்து தந்து குடியடா .. குடியடா என்று நச்சரித்து நச்சரித்து மூலிகையால் வருத்தம் மாறுதோ தெரியாது உன் அன்பு மூலிகையால் மாறிவிடும் வருத்தம் -இதையெலாம் சொல்லி சிரிக்கணும் போல இருக்கடா எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...? ஜீன்ஸ் போட்ட வயதில் ..... எனக்கு தான் காதல் வலி எனக்கு தான் வாழ்க்கை வலி உனக்கு நான் சொல்லி அழும்போது உன் ஓரக்கண்ணால் வடியுமடா ஒரு துளி கண்ணீர் - நான் குடம் குடமாய் வடித்த கண்ணீருக்கு ஈடாகுமடா உன் ஒரு துளி கண்ணீர் -இப்போ நினைத்தாலும்

அழைக்க மாட்டாயா ...?

ஞாயிறு- முகமுடையாள் திங்கள்- உடல் அழகுடையாள் செவ்வாயால்- மெல்ல சிரித்தாள் மாதுருபாகன்- மயங்கினான் காதலில் வியாக்கியானம் செய்கிறாள் எனக்கு குரு- போல் ... நான் துடிக்கிறேன் தூரத்து வெள்ளி- போல் சனியனே- வந்து விடு என்றாவது அழைக்க மாட்டாயா ...?

பிரிவும் காதலில்

பிரிவின் வலியை நீ தாங்குவாய் என்றால் பிரிவை நான் ஏற்கிறேன் நீ இல்லாத ஒரு வறண்ட வாழ்கை கொடூரம் தான் .. என்ன செய்வது பிரிவும் காதலில் ஒரு அங்கம் தானே ....!!!

Haikoo -05

மரம் பரவசப்பட்டது கிளையெல்லாம் ஜோடிக்கிளிகள்

Haikoo 04

எனக்கும் உனக்கும் தெரியாமல் அழுதேன் கனவில்

Haikoo-03

நிமிடத்துக்கு மாறும் சிரிப்பு அழுகை காரணம் வேறென்ன..? காதல்...!

Haikoo -02

உடல் உயிர் கொல்லி எயிற்ஸ் உள உயிர் கொல்லி காதல்

Haikoo-01

அப்பா மின்னல் அம்மா மழை குடும்பசண்டை

யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....?

கண்டதையும் கேட்டதையும் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? பயணம் பல செல்கிறேன் பயணத்தில் பல பார்க்கிறேன் பட்ட பார்த்த அனுபவத்தை வாழ்க்கை கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? மரம் வெட்டும் போது என் மனதில் இரத்தம் வடியும் எழும் என் உணர்வை சமுதாய கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? அடிமாடாக அடித்து அடுத்த வேளை உணவுக்கு அல்லல் படும் குடும்பங்களை பார்ப்பேன் மனம் வருந்தும் பொருளாதார கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? காதோரம் கைபேசியை வைத்து கண்ணாலும் சைகையாலும் தன்னை மறந்து கதைக்கும் காதலரை பார்க்கிறேன் காதல் கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? சின்ன வயதில் எல்லோருக்கும் காதல் தோல்வி வரும் -அதை மீட்டு பார்க்கும் போது உயிரே வலிக்கும் .வந்த வலியை கொண்டு காதல் தோல்வி கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன்

கண்ணீர் ஆக்கியது நீ ....!!!

நிலா உன்னை கண்டதால் வருத்தபடுகிறது -என்னை காத்திருப்பதை நினைத்து ...!!! நான் பாதை நீ தூரம் காதல் தான் கால் பயணம்தான் முடியவில்லை ...!!! இது கண்ணீர்  கதை இல்லை நம் காதல் கதை கண்ணீர் ஆக்கியது நீ ....!!! கஸல் 501

காதல் மிரட்டி வரகூடாது ...!!!

காத்திருக்கிறேன் காதல் வந்தது நீ வந்தாய் இருந்த காதலும் போனது ....!!! உன்னை விட்டால் என்னை காதலிக்க யாரும் - என்று நினைக்கிறாய் அது காதல் இல்லை ...!!! உனக்கு பயந்து என் வீட்டாரே வந்து விடார்கள் உன்னை பெண் பார்க்க ... காதல் மிரட்டி வரகூடாது ...!!! கஸல் 502

ஜோடிக்கிளிகள்

மரம் பரவசப்பட்டது கிளையெல்லாம் ஜோடிக்கிளிகள்

கனவில்

எனக்கும் உனக்கும் தெரியாமல் அழுதேன் கனவில்

காரணம் வேறென்ன..?

நிமிடத்துக்கு மாறும் சிரிப்பு அழுகை காரணம் வேறென்ன..? காதல்...!

காதல்

உடல் உயிர் கொல்லி எயிற்ஸ் உள உயிர் கொல்லி காதல்

குடும்பசண்டை

அப்பா மின்னல் அம்மா மழை குடும்பசண்டை

அதிகமுறை உண்ணா நோன்பு இருந்தவர்கள்

நித்தம் நித்தம் வேலை செய்து  அடுப்பு மூட்டும் அங்காடிகள் நாம்  நிலையற்ற தொழிலில் நிச்சயமற்ற  வருவாயில் வயிறு காக்கும் தினக்கூலி  அங்காடி குடும்பம் நாங்கள் .....!!! மழை பெய்தால் வேலையில்லை  கடும் காற்றாடித்தால் வேலையில்லை  முதலாளி வராவிட்டால் வேலையில்லை  வேலையில்லாவிட்டால் வேலையில்லை  நிச்சய தொழிலில்லாத தினமும் அலையும்  தினக்கூலி குடும்பங்கள் நாம் ....!!! ஆலயம் செல்வதில்லை -ஆனாலும்  ஆண்டவனிடம் மன்றாடுவோம்  இன்று மழைவரக்கூடாது  கடும் காற்று அடிக்க கூடாது  முதலாளி சுகநலத்தோடு வாழனும்  ஆகாயத்தை நம்பி ஆயுளை நடார்த்துகிறோம்  நோய் என்று இருக்க மாட்டோம்  வந்தாலும் சோரமாட்டோம்  ஒரு வேளை சோறு நாம் உருண்டால் தானே உண்டதுண்டு -உலகிலேயே  அதிகமுறை உண்ணா நோன்பு இருந்தவர்கள்  நாமாகத்தான் இருக்கமுடியும் ....!!! எங்களுக்கும் காலம் வரும்  தேர்தல் வரும் காலம் பொற்காலம்  இலவச உணவு உடுக்க உடை  படுக்க பாய் குடிக்க நீர் -அடிக்க தண்ணீர்  எங்களின் இயலாமையை நன்றாக பயன்  படுத்தும் அரசியல் வாதிகள் .....!!! ஆயிரம் சட்டங்கள் அடுக்கடுக்காய் வரும்  ஒருசட்டம் கூட தினக்கூலியை  காப்பாற்றவில்லை  தினகூலியை காப்பாற்ற அரசிய

காதலை விட்டால் எங்கே உண்டு ....?

உன்னோடு சண்டையிடும் போது அந்த நொடியில் என் மனமே என்னிடம் கேட்கும் -ஏனடா ..? இப்படியேல்லாம் சித்திரவதை செய்கிறாய் ...? வீடு  வந்து சிந்திப்பேன் -இனிமேல் சண்டையிட கூடாது கூடாது ...!!! அடுத்தமுறையும் ஏதோ சண்டை ....!!! நீ மௌனம் நான் கெஞ்சல் நான் மௌனம் நீ கெஞ்சல் -இந்தசுகம் காதலை விட்டால் எங்கே உண்டு ....?

காதலித்துப்பார் வெற்றி

ஒவ்வொரு இளவயதினரதும் முதல் உணர்வு காதல்  முதல் வெற்றியும் காதல்  காதலில் வெற்றிதான்  வாழ்க்கையை வசந்தமாக்கிறது காதலித்துப்பார் வெற்றியின்  இன்பம் தெரியும் ....!!!

இருமுறை பிறக்கிறான்

ஒவ்வொருவனும் வாழ்க்கையில் இருமுறை பிறக்கிறான் தாயின் மடியில் காதலியின் மடியில் இரண்டாவது பிறப்பு மனிதனாக்குகிறது முதல் பிறப்பு மனிதனாக பிறக்கிறான் ....!!!

காதலின் இரட்டை குழந்தைகள்

எப்போது விடியும் -அவளை எப்போது பார்ப்பேன் ...? எப்போது வருவாள் ..? பார்ப்பாளா ...? பார்த்தும் பார்க்காமல் போவாளா ...? சிரிப்பாளா .....? கடைக்கணால் கூட பார்ப்பாளா ....? பேசுவாளா ...? நான் பேசினால் பேசுவாளா ...? என்றோ ஒருநாள் காதலிப்பாளா ..? காதலித்தால் பெற்றொர் சம்மதிப்பார்களா ...? இப்படிதான் காதலில் .... காதலின் இரட்டை குழந்தைகள் ஏக்கமும் வலியும்.....!!!

சின்ன சின்ன ஆசைதான் ....!!!

தினமும் குடையோடு வருகிறேன் கண்ணே மழை வராது என்று தெரிந்தாலும் குடையோடு வருகிறேன் -திடீரென மழைவந்தால் அப்போது என்றாலும்  நாம் இணைந்து செல்வோமோ என்ற சின்ன சின்ன ஆசைதான் ....!!!

நான் ஏமாறுவது...?

எத்தனை முறை நான் ஏமாறுவது...? நீ இன்று பதில் சொல்வாய் நாளை பதில் சொல்வாய் என்று ....!!! எத்தனை முறை மீண்டும் மீண்டும் ஏமாறுவது ....? உன்னை போல் உடை அணிந்து வந்தவர்களை நீதான் என்று எத்தனைமுறை ஏமாறுவேன் .....!!!

கற்று தந்துவிடாதே ...!!!

காதல் பாடம் சொல்லி தந்தவளே முதலில் நட்பை கற்று கொடுத்தாய் காதல் உணர்வை கற்று கொடுத்தாய் காத்திருக்க கற்று கொடுத்தாய் கோபப்பட கற்று கொடுத்தாய் இன்னும் என்ன கற்றுத்தர போகிறாய் தயவு செய்து எப்படி மறப்பது என்று மட்டும் கற்று தந்துவிடாதே ...!!!

கருணை இருந்தால் நட்பு ....!!!

கண்ணில் ஒரு கவர்ச்சி இருந்தால் காதல் ...!!! கண்ணில் ஒரு கருணை இருந்தால் நட்பு ....!!! முகத்தில் ஒரு அழகு இருந்தால் காதல் ....!!! முகத்தில் ஒரு அடக்கம் இருந்தால் நட்பு .....!!! சிரிப்பில் ஒரு பாசம் இருந்தால் காதல் ...!!! பாசமே சிரிப்பெல்லாம் இருந்தால் நட்பு ....!!!

எல்லையற்றது நட்பு ....!!!

காதலியாக உன்னை நினைத்து துரிகையை எடுத்தேன் ரோஜாவாக நீ தெரிந்தாய்.....!!! நண்பியாக உன்னை நினைத்து துரிகையை எடுத்தேன் பூவின் வாசனைதான் வந்தது ....!!! எல்லையுள்ளது காதல் எல்லையற்றது நட்பு ....!!!

அதிர்ந்தே போனார்கள் ....!!!

உலகிலேயே மிகவும் மோசமான துன்பத்துக்கும் அதை சொல்பவருக்கும் உலக பரிசு என்றார்கள் நம் காதல் கதையை சொன்னேன் முதல் அதிர்ந்தே போனார்கள் ....!!!

உன் நினைவில்லாமல்

நிலவெல்லாம் செல்ல முடியுமோ ..? தெரியாது உன் நினைவில்லாமல் நான் எங்கும் செல்ல முடியாது ....!!!

காதலிக்க தெரியவில்லை ...!!!

மனதைக் கலைக்கத் தெரிந்த உனக்கு என் மனதில் வர தெரியவில்லை ....!!! காதலை தூண்ட தெரிந்த உனக்கு காதலிக்க தெரியவில்லை ...!!!

உவமைகளையே பொயாக்கியவள் நீ

உன்னை அழகி என்பேன் ....? பூப் போன்ற முகமுடையவள் பால் போன்ற பல் அழகி நிலா போன்ற நெற்றி யழகி நதி போன்ற கண்ணழகி உனக்கு மட்டும் தான் உலக அழகி என்பேன் ....!!!! மான் போன்ற நடையழகி அன்னம் போன்ற பேச்சழகி கிளிபோன்ற பாட்டழகி உவமைகளையே பொயாக்கியவள் நீ உலக பேரழகி .....!!!

இதயத்தை விட்டு சென்று -விடாதே ....!!!

பூப் போன்ற என் இதயத்தை மரம் வெட்டும் வாளால் வெட்டுகிறாய் -இந்த துணிவு இங்கு யாருக்குவரும் சொல்..? வெட்டுவதற்கு உனக்கு அனுமதிக்காமல் விட்டு எனக்கேன் .? என் இதயம் ...? இதயத்தை வெட்டு இதயத்தை விட்டு சென்று -விடாதே ....!!!

உன்னை எனக்கு பிடித்தது

என்னவளே உன்னை எனக்கு பிடித்தது உனக்கும் என்னை பிடித்தது .-இதற்கு மேலாக காதலுக்கு நம்மை பிடித்தது காதலித்தோம் ....!!! கவிதை பிடிக்குமென்றாய் கவிதை எழுதினேன் திருமணம் பிடிக்கும் என்று எப்போது சொல்வாய் ....?

எப்படி தாங்கும் என் இதயம் ....?

தனிமையில் இருக்கும் போதெல்லாம் நீ தந்த வலிதான் நெஞ்சில் ஊசியாய் குத்துகிறது உன் வலி மட்டுமல்ல -உன்னால் கடவுளை தரிசிக்க மறந்தேன் உறவுகளை மறந்தேன் உற்ற நண்பனை மறந்தேன் காதல் வலி என்றால் தாங்கி இருப்பேன்  மொத்தவலியை எப்படி தாங்கும் என் இதயம் ....?

காதல் தான் மறந்து விடாதீர் ....!!!

இதயத்துக்கு உச்ச மகிழ்ச்சி காதல் என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன் அதே இதயத்துக்கு உச்ச வலியும் காதல் தான் மறந்து விடாதீர் ....!!!

தப்பிக்கொள்ளுகிறான்....!!!

ஒவ்வொரு காதல் சொல்லிலும் ரோஜாவும் முள்ளும் இருக்கும் ...!!! கவனித்தவர் தப்பிக்கொள்ளுகிறான்....!!!

காதல் உடல் உள பயிற்சி நிலையம் .....!!!

உடல் கட்டழகுக்கு உடற்பயிற்சிக்கு சென்றேன் உள பயிற்சிக்கு ஆன்மீக நிலையம் சென்றேன் உன்னை சந்தித்திருந்தால் எங்குமே சென்றிருக்க மாட்டேன் காதல் உடல் உள பயிற்சி நிலையம் .....!!!

அழுதுகொண்டிருக்கிறது என் இதயம் ....!!!

திருடிய இதயத்துக்கு என் இதயத்தை கொடுத்தேன் என் சந்தேகம் அவளின் இதயத்தை கருக்கியது ....!!! இப்போ யாருக்குமே கொடுக்க முடியாத இதயமாகி விட்டது என் இதயம் ....!!! ஓரத்தின் ஒரு மூலையில் தனியே அழுதுகொண்டிருக்கிறது என் இதயம் ....!!!

நினைவுகள் முள்ளாய்

கவலைப்படாமல் -அவள் இதயத்தை திருடினேன் திருடிய குற்றத்துக்காக காதல் தோல்வி-என்னும் சிறையில் வாழுகிறேன் நினைவுகள் முள்ளாய் குற்றுகிறது ....!!!

வரி

குதிரைக்கு அழகு   மக்களுக்கு சுமை   வரி

காதல் நம்மை மீட்கும் ...!!!

படம்
காதலை கம்பி எல்லையால்   தடுத்து விட முடியாது   கலங்க்காதே கண்ணே ... காதல் நம்மை மீட்கும் ...!!!

பனிக்கட்டியாவேன் ....!!!

படம்
பனிக்கட்டியையே உருகவைக்கும்   காதல் - என்னை விட்டுவைக்குமோ ..? எத்தனை முறையும் அவளுக்காக   பனிக்கட்டியாவேன் ....!!!