கவிப்புயலின் மரபுவழிக்கவிதை
தலைப்பு : புரிதல் இல்லா நட்பு என்றும் புரிதல் இல்லா நட்பு// துன்பமே தரும் தோழனே அதுதப்பு// இன்றும் மெளனமேன் இதயத்தால் நீசெப்பு // என்னில் தவறிருப்பின் என்னைநீ காறித்துப்பு// தீண்டத்தகா வார்த்தைகளால் தெறித்தது வன்மை// தூண்டில் மீன்போல் துடிக்கிறது தனிமை// நீண்டநற் பயணத்தில் நினைவுகளே இனிமை// வேண்டுமுன் உறவேயென் வெற்றிக்கு மேன்மை// @ கவிப்புயல் இனியவன்