இடுகைகள்

ஏப்ரல் 15, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதுக்கவிதை

அகோர மழை ----------------------- சாதாரண  துளியுடன் ஆரம்பித்தது ... கொட்டி தீர்த்த  அகோர மழை ....!!! வீதியோரகடையொன்றில் கூரையில் ... கூட்டத்தோடு கூடமாய் நடப்பதை.... பார்த்துக்கொண்டிருந்தேன் ......!!! வீதியிலிருந்த குழிகள் பள்ளங்கள் ... எவையும் தெரியாமல் நிரம்பிவழிய ..... சிற்றாறொன்று  சிறுவீதியால் திசை ... திரும்பி வந்ததோ என வாயை ..... பிளக்கும் பெருவெள்ளம் .....!!! தள்ளுவண்டியில் காய்கறிகாரன் ..... தள்ளிவந்த வண்டிதான் மிஞ்சியது ... காய்கறிகளைகாணோம்...... பள்ளத்திலா குழிக்குள்ளா....? தேடிப்பார்க்கும் நிலையிலில்லை .....!!! நடைபாதையருகில் பெட்டிக்கடை ... பழவியாபாரி தான் நனைந்தபடி .... பழங்களுக்கு போர்வை போத்து ... இழந்த வருமானத்தை வரண்ட ... மனத்துடன்  காத்திருக்கும் நிலை ...!!! சிரித்தபடி வந்த  காதல் ஜோடியின் ... மோட்டர்சைக்கிள் செயலிழக்க ... உயிரை கொடுத்து உதைக்க .... இயங்கமறுக்கும் சைக்கிளை .... கவலையோடு பார்க்கும் காதலர் நிலை ....!!! என்னருகில் நின்ற சிறுபையன் ... மழையில் நனைய ஆசைப்பட்டு .... தாயின் கையை உதறியபடி கூரை ... தண்ணீரை ஏந்த - அதைமறுத்தார்

என்னை முறைப்பாயா ...?

யாரையும்  எதையும் கேட்காமல் .... செய்வது மகா குற்றம் .... கேட்டால் தரமாட்டாய்.... விடவும் மாட்டாய் ....!! நான்  உன்னைமீறி தந்தால்... என்னை முறைப்பாயா ...? வெறுப்பாயா - ஆனால் .. என் மனசு குற்றமற்றது ... காதலை தவிர வேறொன்றுமில்லை

அதையும் திருடி விட்டாய் ...

களவு  என்பது கையால் தானே .... திருடுவார்கள் - நீ எப்படி ..? இதயத்தை கண்ணால் ... திருடினாய் ....? என்னிடம் இருந்த ஒரே ... சொத்து இதுவரை யாரையும் ... நினைக்காத மாசில்லா மனசு ... அதையும் திருடி விட்டாய் ... இப்போ என்னிடம் ... காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!