இடுகைகள்

அக்டோபர் 20, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எல்லாமே நட்புதான்

மழலைப் பருவத்தில் நட்பு : ------------- உனக்கு என்னைத்தெரியாது ....... என்னை உனக்கு தெரியாது........... நீயும் கையசைத்தாய் நானும் ...... கையசைத்தேன் ....... அதில் புரியாத சுகம்.........!!! குழந்தைப் பருவத்தில் நட்பு : ------------ நீயும் நானும் விளையாடுவோம் ..... கிடைத்தவற்றால் அடிபடுவோம்.... மீண்டும் சந்திப்போம் ...... பகமையென்றால் .... என்ன என்றே தெரியாத நட்பு ..!!! காளைப் பருவத்தில் நட்பு : ---------- சுற்றுவதற்கு நட்புத்தேவை ..... வீண் சண்டைக்கு நட்புத்தேவை .. இளங்கன்று பயமறியாத நட்பு ...!!! வாலிபப் பருவத்தில் நட்பு : _________ என் வலியையும் சுகத்தையும் .... சொல்லவும் கேட்கவும் ஆறுதல் .... தரவும் நட்புத்தேவை ....!!! முதிர்ந்த பின் நட்பு : ------------ வாழ்க்கையின் துன்பங்கள் ... துயரங்கள் இழப்புக்களை ... அனுபவங்களைப்பகிர்ந்து .... கொள்ளஒரு நட்பு தேவை ..! & நட்புடன் உங்கள் கவிப்புயல் இனியவன் 

காதலில்லாமல் வாழ்ந்திடாதே

காதல் ஒரு காவியம்....... காவியகதைகளில்......... சோகங்கள் உண்டு........ சோகத்தை தாங்க ......... தயாராக இரு .............!!! காதல் ஒரு சமுத்திரம்...... விழுந்தால் மூழ்குவாய்....... மூழ்காமல் இருக்க......... கற்றுக்கொள் .............!!! காதல் ஒரு கத்தரிக்காய்....... சிலவேளை புரியும் ............... சில வேளை ருசிக்கும் ........... சில வேளை கருகும் ............!!! காதல் ஒரு கானல் நீர்.... உண்மைபோல் ..... சில விடையங்கள் தெரியும் ........ ஆனால் அது முழுப்பொய்..........!!! காதல் ஒரு கண்ணாடி ........ உன்னையே நீ பார்த்து........ சிரிப்பாய் அழுவாய் ........!!! காதல் ஒரு கற்பூரம்............ காதல் வெற்றியோ தோல்வியோ............ அடைந்தால் இறுதியில் ................ ஒன்றுமே இல்லை என்று ............... உணரப்பண்ணும்.........!!! காதல் ஒரு காற்று.............. தென்றலும் உண்டு .............. புயலும் உண்டு ...............!!! காதல் ஒரு நட்பு ........... தியாகம் செய்யத்தயாராக ............ இரு நட்புதான் கலங்காமல்.......... தியாகம் செய்யும்..............!!! காதல் ஒரு கற

நண்பா அறிவுரை கேட்பாயா ...?

நண்பா .... அறிவுரை கேட்பாயா ...? மனம் திறந்து பேசு .... மனதில் பட்டதெல்லாம் .. பேசாதே .... சிலர் புரிந்து கொள்வார்கள் ... சிலர் பிரிந்து செல்வார்கள் .... இரண்டிலும் நன்மைகளும் ..... தீமைகளும் உண்டு ..... & கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

வலிக்கிறதா

இதயத்தை ..... கிள்ளிப்பார்த்துவிட்டு ...... வலிக்கிறதா என்று கேட்டால் ... காதல் ...!!! இதயத்தை ...... கிள்ளிப்பார்காமலே ... வலிக்கிறதா என்று கேட்டால் ... நட்பு ...!!! இதயத்தில் .... இருந்துகொண்டு .... கிள்ளிக்கொண்டே .... இருந்தால் ....... மனைவி ..........!!! & கவிப்புயல் இனியவன்

முன்னோர் சொன்னது ..!!!

இயந்திர உலகில் ......... ஓடிக்கொண்டிருப்பது .. கடிகாரமில்லை ...! நீதான் பெரியமுள் - உன் ஆயுள்... சிறியமுள் -உன் உயர்வு... வினாடி முள் -உன் முயற்சி... வேக வேகமாக முயற்சி செய் .. நேரம் பொன்னானது ..... முன்னோர் சொன்னது ..!!! & சமுதாய கவிதை கவிப்புயல் இனியவன் 

அழகான வீடு கட்டும் மனிதா ..

கருங்கல் மலையை உடைத்து .... கற்துகள் கொண்டு கட்டுகிறாய் .. அழகான வீடு - அப்பாப்பா என்ன ..? வலிமை மனிதா உனக்கு ...? கருங்காலி மரத்தை வெட்டி ... அழகழகான கதவு ஜன்னல் செய்து ... அழகான வீடு கட்டும் மனிதா .. என்ன வலிமையப்பா உனக்கு ...? நதிகொண்டு நீர் வந்து .... நயனங்கள் பலகொண்டு... கலைனயங்களோடு.... அழகான வீடு கட்டும் மனிதா .. என்ன கலைநயமப்பா உனக்கு ...? குடியிருக்காப்போகும் ... குடியிருப்பில் நிம்மதியை எங்கிருந்து கொண்டுவரப்போகிறாய் ...? & வாழ்க்கை கவிதை கவிப்புயல் இனியவன்