இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீ தந்த காதல்......!

நீ.... ஆயிரம் வலியை..... தந்தாலும்....... காதலை தந்தமைக்கு..... நன்றி......! பயமின்றி என்...... இதயத்திலிருந்து....... ஓடி விளையாடு....... தள்ளிவிடமாட்டேன்.....! இப்போதும்...... இதயம் துடிக்கிறது..... ஒரே ஒரு காரணம்...... நீ தந்த காதல்......! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

துடிக்கும் இதயம்.....

என் கவிதை...... உனக்கு வரிகள்..... எனக்கு வலிகள்....! துடிக்கும் இதயம்..... எல்லோருக்கும்..... இருக்கும்......... வலிக்கும் இதயம்..... என்னிடமே........ இருக்கிறது........! காதல் கண்ணில்.... ஆரம்பித்து...... கல்லறையில்......... முடிகிறது..........! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

என் இதயத்தைகிள்ளி

ஈரகுணத்தை..... என்னில் காட்டு..... தலையணையில்..... காட்டாதே......! காதல் ....... ஒரு சூதாட்டம்....... தலையும் விழும்...... பூவும் விழும்.......! என் இதயத்தை.... கிள்ளி வெளியே..... எடுத்துப்பார் -உன்  முகதோற்றத்தில்.... இருக்கும்.....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

பசியோடு...... வாழகற்றவன்...... காதலில்லாமல்..... வாழ கற்றுகொள்ள..... தவறி விட்டேன்.....! காதல் ஒரு பூச்சியம்..... ஏக்கத்தோடு...... ஆரம்பித்து............ ஏமாற்றத்தோடு...... முடிகிறது..........! அன்பே வா....... இன்பவலியோடு..... இவ் உலகை விட்டு..... பறந்து விடுவோம்.....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ---------------------- காதலிலும்..... கண்ணாம்பூச்சி விளையாட கற்று..... தந்தவள் -நீ.....! இதயத்திலிருந்து.... கவிதை வரும்..... இதயமே கலங்கினால்..... கவிதை எப்படி வரும்...? ஜோடியாக புகைப்படம்.... எடுத்தோம் ...... அதனால் தான்..... காதலே புகைந்துவிட்டதோ...? @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

பிடித்த சொல் - காதல்....!

உன்னை ........ ஒளிரவிட்டு...... என்னை கருக்கும்...... திரி நான்........! காதலில்  தோற்றவனுக்கு........ கண்ணீர்தான் வரும்.... உன்னால் எனக்கு..... கவிதை வருகிறது.....! உனக்கு ........ பிடிக்காத சொல்...... எனக்கு..... எப்போதும் பிடித்த........ சொல் - காதல்....! & காதலுடன் பேசுகிறேன்  கஸல் கவிதை 12 கவிப்புயல் இனியவன்

உன் நினைவால்துடிக்கிறேன்........!

காற்றுக்கு வாசனை இல்லை....  நீ வரும் போது..... உணர்கிறேன் காற்றில்..... வாசனையை ....! நீருக்கு ....... நிறம் இல்லை.... நீ ........ நீராடும் போது..... பார்கிறேன் அதன் நிறத்தை .....! ஒரு...... முறை என்னை..... பார்த்துவிடு.... ஒரு....... வார்த்தை என்னோடு.... பேசிவிடு - உயிரே உன் நினைவால்..... துடிக்கிறேன்........! & கவிநாட்டியரசர், கவிப்புயல் கே இனியவன் இதயம் கவரும் கவிதைகள்

உன் நினைவால்துடிக்கிறேன்.........!

நீ ... ஒருமுறை.... கண் சிமிட்டினால்.... ஓராயிரம் கவிதை.... எழுதுகிறேன்....! ஒரு நொடி ...... பேசாது இருந்தால் ஆயிரம் முறை இறந்து பிறக்கிறேன் ....! உயிரே ...... மௌனத்தால்..... கொல்லாதே ... உன் நினைவால்.... துடிக்கிறேன்.........! & கவிநாட்டியரசர், கவிப்புயல் கே இனியவன் இதயம் கவரும் கவிதைகள்

இதயம் கவரும் கவிதைகள்

தாயே உன்...... நினைவு போதெல்லாம் இதயம் துடிக்கவில்லை..... இதயம் வெடிக்கிறது...... நரம்புகள் இரத்தத்தை..... கடத்தவில்லை ...... உன்  உருவத்தையே இரத்தமாய் கடத்துகிறது ....! இறைவா ........! படைப்பது உன்..... தொழில் என்றால் ....... எனக்காக  படைப்பை...... செய்தருளிவீராக....... மீண்டும் என் தாயை...... எனக்கு தாயாக படைத்தருளுவீராக.....! & கவிநாட்டியரசர், கவிப்புயல் கே இனியவன்

வலிக்கும் இதயத்தின் கவிதை -203

என்னை மன்னித்துவிடு ..... என்று சொல்லும்போதே..... நான் இறந்துவிட்டேன்.......! இறைவா மரணத்தை கொடு...... அப்போதென்றாலும் ...... அருகில் வருகிறாளா .......... பார்ப்போம்...! இதயத்தை ..... உயிரோடு புதைத்தேன்...... நீ எனக்கு இல்லையென்று..... முடிவாகியபின்........! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் பதிவு - 203

நீ ராஜ வாழ்க்கை வாழ்கிறாய்

உன்னை பார்த்து நான்கு பேர் திட்டும் கடன்காரனாக இல்லாமலும்....! நீ நான்கு ..... பேரை பார்த்து திட்டும்.... குடிகாரனகவும் ..... இல்லாமல் இருந்தால்....... நீ ராஜ வாழ்க்கை........ வாழ்கிறாய்.............! & கவிப்புயல், கவிநாடியரசர் ***********இனியவன்.............

பணம்

பிறந்தவுடன் பாதள அறைக்குள் சிறை பணம் @@@ ஹைகூக்கள் கவிப்புயல் இனியவன்

எப்படிகண்டுபிடிப்பாய்.....?

காணாமல் போனால் ...... கண்டுபிடித்துவிடலாம்...... உனக்குள் காணாமல்...... போன என்னை எப்படி..... கண்டுபிடிப்பாய்.....? காதலை மறைக்க...... முடியாது....... கழுத்தில் உள்ள...... தாலியை சேலையால்.... மறைப்பது போல்....! நீ பலாப்பழம் போல்..... இதயத்தில் அன்பை...... வைத்துக்கொண்டு...... வார்த்தையை முள்ளாய்.... கொட்டுகிறாய்.....! & காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை 11 கவிப்புயல் இனியவன் 

உன் தாலி........!

பாவம் என் காதல்.... புண்ணியமாய்..... கிடைத்த உன்னை ....... இழந்துவிட்டது.....! என்னை ஏமாற்றிய....... அடையாள சின்னம்...... உன் தாலி........! எதுவுமே ....... நிலையில்லை..... அனுபவத்தில் உணர்த்தினாய்......... திருமணத்தில்...........! & காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை 10 கவிப்புயல் இனியவன்

காதலுடன் பேசுகிறேன்

காகித பூவாக இரு ...... அப்போதுதான் ..... வாட  மாட்டாய் .......! உன் ...... கண்ணை விட ...... என் ....... கண்ணீர் அழகானது .....! என் இதயம் ..... மட்டும் தான் ...... இருவருக்காக துடிக்கும் ..... உன்னிடம் இதயம் ..... இல்லாததால் ..........! & காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை 09 கவிப்புயல் இனியவன்

கண்ணீரோடு

இலந்தை முள் மீது ..... தூங்குவதும்..... உன்னை நினைவோடு ..... தூங்குவதும்..... ஒன்றுதான் ..........! உன் ஞாபகங்களை ..... சித்திரமாக்குகிறேன் ....... நீயோ  கிறுக்கும் ...... கிறுக்கன் என்கிறாய் .....! கண்ணீரோடு ....... அலைந்தால் தான் ...... உன் காதலை பெற முடிகிறது .........! & காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்

எல்லாம் உன்னையே எழுதும் ....!

இதயம் நீ இருக்கும் வரை துடிக்கும் .... கண்கள் உன்னையே பார்க்கும் ............ கால்கள் உன் தெருவுக்கே நடக்கும் ...... எண்ணமெல்லாம் உன்னையே சுற்றும் ... வரிகள் எல்லாம் உன்னையே எழுதும் ....! & அன்பே உனக்காக கவிதை கவிப்புயல் இனியவன்

காதலே நீ நீடூடி வாழ்க ...!!!.

கனவு இல்லையேல் ..... இரவு அழகில்லை ..... காதல் இல்லையேல் ....... உயிர்களுக்கு அழகில்லை ..... காதலே நீ நீடூடி வாழ்க ...!!! & அன்பே உனக்காக கவிதை கவிப்புயல் இனியவன்

அன்பே உனக்காக கவிதை

பேச துடிக்கும் என் உதடு ...... தடுக்கிறது  உன் மௌனம் ..... பேசு பேசு என்கிறது மனம் ...... வலி தாங்க தயாராகும் இதயம் ..... பிறக்கிறது ஆயிரம் கவிதை ......! & அன்பே உனக்காக கவிதை கவிப்புயல் இனியவன் 

சென்ரியூ - கமல்

சென்ரியூ ------------- கவிஞனை காவாளியாக்கியது கமல் & கவிப்புயல் இனியவன்

செவ்வாய் கிரகதோஷ.....

செவ்வாய்....... கிரகத்துக்கு...... போக துடிக்கும்....... மனம்......... செவ்வாய் கிரகதோஷ..... பெண்ணோடு வாழ...... மறுக்கிறது.......! & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன்

இரண்டு மனம் வேண்டும்.

இறைவா..... இரண்டு மனம் வேண்டும்..........! உன்மீது பற்றை..... அதிகரிக்க வேண்டும்.... என்மீது பற்றை..... குறைக்கவேண்டும்....! & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன்

வலியையா புரியப்போகிறாய்.......?

நீ .... என்னை விட்டு.... பிரிந்து சென்று.... விட்டாய்....... உனக்கும் சேர்த்து..... என் இதயம் வலிக்கும்... வலியை யார் அறிவர்......? என்னிடம்..... கொட்டிக்கிடந்த..... காதலையே உன்னால்..... புரிந்துகொள்ள முடியவில்லை....... வலியையா ..... புரியப்போகிறாய்.......? & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் பதிவு -202

மனம் குளிர்ந்தேன் ....!

மனதில் இருள் .... கருவறையில் ..... இறைவனுக்கு .... காட்டும் ஒளியில் .... மனம் குளிர்ந்தேன் ....! & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன்

இறை காதல் கஸல்கள்

ஐம்புலனை .... அடக்கும் ஆமையின் ... ஆற்றல் எனக்கில்லை ...(-) நான் ..... ஆறறிவு மனிதன் (+) & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன் 

ஆன்மீக கஸல்

நீந்த துடிக்கும் மீன் குஞ்சு போல் .... இறை ஆசை .....(+) வறண்டிருக்கும் குளம் போல் ...... மனம் ......(-) & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன்

சென்ரியூ

சர்க்கரை விலையேற்றம் சந்தோசப்படுகிறார் சர்க்கரை நோயாளி & சென்ரியூ

சிந்திக்க வைக்கும் ஹைக்கூக்கள்

செயற்கை சுவாசத்தில் வாழ் நாள்முழுவதும் வாழ்கிறது தொட்டி மீன் @@@ ஏழை கொடுத்த மனு வரிசைப்படுத்தியிருக்கிறது சவரக்கடை @@@ நன்னீர் விஷக்கிருமியாகியது டெங்கு @@@ அறுவடை செழித்தும் வாழ்க்கை செழிக்கவில்லை விவசாயக்கடன் @@@ காட்டுக்கு ராஜா என்ன தவறு செய்தாரோ மிருக்ககாட்சி கூடத்தில் சிறை @@@ கவிப்புயல் இனியவன் சிந்திக்க வைக்கும் ஹைக்கூக்கள்

பட்டாசு ஹைக்கூக்கள்

பட்டாசு ஹைக்கூக்கள் -------------------------- பணம் கருகிக்கிடக்கிறது பட்டாசு @@@ சந்தோசப்படுத்தி சந்ததியை அழிக்கிறது பட்டாசு @@@ எங்களிலும் பருவமடையாதவர்கள் இருக்கிறார்கள் வெடிக்காத பட்டாசு @@@ ஒவ்வொரு வீடும் ஏவுகணை மையமாகிறது ஈக்குபட்டாசு @@@ மனதுக்குள் பலவர்ணங்களுடன் வெடிக்கிறது ஏழைவீட்டில் பட்டாசு & கவிப்புயல் இனியவன்

இனிய தீபாதிருநாளின்

தீப திரு நாளில்...... தீய எண்ணத்த எரித்துவிடு..... தீய செயலை தூக்கியெறி...... தீய பார்வையை மறைத்துவிடு..... தீய பேச்சை துப்பியெறி...... தீய தொழிலை செய்யாதே......! தீங்கு செய்வாரோடு சேராதே...... தீச்சொல் கூறி திரியாதே....... தீயவை எல்லாம் ஒழித்துவிடு....... தீப காந்திகல்போல் வாழ்........ தீம் சொல்லால் பேசு.......... தீரம் கொண்டசெயல் செய்..... தீர்த்தன் அருளை பெற்றுக்கொள்.....! & இனிய இனிப்பான இனிய தீபாதிருநாளின் இனியவனின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

ஹைக்கூ கவிப்புயல் இனியவன்

பட்டுப்போன எலும்போடு..... தெருத்தெருவாய் சுற்றுகிறது  செத்துப்போன கைப்பிடி @@@ மனிதன் கால்தான் வைத்தான் நிலவுக்குள் குடும்பமே நடார்த்துகிறோம் குளத்துமீன்கள் @@@ அழுகுரல் சத்தம் துடிப்பார் யாருமில்லை பொம்மைகுழந்தை @@@ மின்சார கம்பத்தில் சந்தோசமாய் வாழுகின்றன குருவிகூடு @@@ ஆசைகள் நிறைவேறுகிறது எல்லோருடைய வாழ்க்கையிலும் கனவு @ ஹைக்கூ கவிதைகள் கவிப்புயல் இனியவன்

உன் அழைப்புக்காய்.....!

நீ.... காதலை.... மறுத்த அந்த நொடி..... இதயம் கல்லறை...... சென்றுவிட்டது.....! மூச்சு மட்டும்....... பேச்சுக்காக இயங்குது..... தோற்றுப்போனாலும்..... தேடிக்கொண்டிருக்கிறேன்..... உன் அழைப்புக்காய்.....! எனக்காக ஒருமுறை.... வந்துவிட்டு போ...... இல்லை வந்து என்னை..... கொண்றுவிட்டு போ....! & வலிக்கும் இதயத்தின் கவிதை பதிவு -201 கவிப்புயல் இனியவன்

ஹைக்கூ தொடர்

பிரம்ம முகூர்த்த நேரம் ஒலித்தது ஆலயமணி ஓசை கவலையோடு கோபுர புறா & கவிப்புயல் இனியவன் ஹைக்கூ  தொடர் 

உன் காதல் வேண்டும் .....!

கனவிலும் ......... நினைவாலும் ...... கொல்வது  போதாதென்று ...... மௌனத்தாலும் ...... கொல்கிறாய் .......... தயவு செய்து நிஜமாய்...... கொண்றுவிடு .........! என் குறைந்த பட்ச.... கோரிக்கை நீ வேண்டும் ..... அதிக  பட்சகோரிக்கை ..... நீயே  வேண்டும் ........ முடியாதுபோனால் ........ உன் காதல் வேண்டும் .....! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்  

ஆண் மரங்கள்.....

ஒரு...... முறை கண்.... சிமிட்டி விடு..... பூக்காமல் இருக்கும்..... ஆண் மரங்கள்..... பூக்கட்டும்.....! கண் ஓரத்தில்.... சிறு கண்ணீர் சிந்து.... பாலவனத்தில்...... நீர் ஊற்று வரட்டும்........! & சின்ன சின்ன காதல் வரி கவிப்புயல் இனியவன்

ஹைக்கூக்கள்

பட்டாசு வெடித்தது துர்நாற்றம் வயிற்றை குமட்டியது தீ விபத்தில் கருகிய உடல் ^ கவிப்புயல் இனியவன் ஹைக்கூக்கள்

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம் -------------------------------------------------- மூன்று அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். - ( இந்த விளக்கத்தை சிறப்பாக கூறியவர் முனைவர் ம.ரமேஷ்) கவிப்புயலின் ஹைக்கூக்கள் -------------------------------------------- இட்ட முட்டை சுடுகிறது எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் ஏக்கத்தோடு பார்த்தது கோழி ^^^ இந்த ஹைக்கூவில் " இட்ட முட்டை சுடுகிறது  " எனவே அப்போதுதான் கோழி முட்டையிட்டு இருக்கிறது. " எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் " தன் இனத்தை பெருக்க தயாராக இருக்கும் பெண்........" ஏக்கத்தோடு பார்த்தது கோழி " உன்னைப்போலவே நானும் என் இனத்தை பெருக்கும் பெண். என் இனத்தை கொல்கிறாயே என்ற ஆதங்கம் கோழிக்கு........ எனவே மூன்றாவது அடி எதிர்பாராத திருப்பமாக இருக்கவேண்டும். தெரிந்த முடிவாக

தகவல் அறியும் சட்டத்தின்......

தகவல் அறியும் சட்டத்தின்...... மூலம்  கேட்கப்போகிறேன்...... நீ என்னை காதலிக்கிறாயா....? தேச வழமை சட்டத்தில்... உன்னை கைது செய்ய முடியது..... தேக வழமை சட்டம் இருந்தால்..... உன்னை கைதுசெய்யனும்...... இதயத்தை திருடிய குற்றத்துக்கு.....! & வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

தமிழோடு விளையாடு - கொ

கொ க்கரிப்பவனிடம் வீரமில்லை..... கொ ச்சைப்படுத்துபவனிடம் பண்பில்லை..... கொ டுமைப்படுத்துபவனிடம் மனிதமில்லை..... கொ டூரம் கொண்டவனிடம் புத்தியில்லை.....! கொ டிவழிவாழ தர்மம் காக்கும்....... கொ ட்டம்போட்டால் தண்டனைவரும்....... கொ ண்டாட்டம் கலாச்சாரமாகும்....... கொ டுங்கோல் ஆட்சி நாட்டைக்கெடுக்கும்.....! கொ ப்புபாயும் குரங்கு மன உறுதியானது........ கொ டும்புலி கொள்கையானது....... கொ க்கின் பொறுமை விசித்திரமானது....... கொ ம்புமானுக்கு அழகு மயக்கத்தக்கது.....! & தமிழோடு விளையாடு கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்

கையசைத்தேன் கண்ணசைத்தாள் (கை)

கை யசைத்தேன் கண்ணசைத்தாள்...... கை விலங்கிட்ட கைதியானேன்........ கை கோர்த்து பேசக்கேட்டேன்........! கை யோடு கை இணையக்கேட்டேன்..... கை  சாத்திட்டு என் கையைப்பிடி....... கை தியாகிறேன் உனக்காகவென்றாள்.....! கை நழுவி போகாமல் இருக்க........ கை சாத்திட சம்மதித்தேன்........ கை ப்பிடி விழாவும் முடிந்தது.........! கை வழி இசைபோல் அவள்பேச....... கை ஞ்ஞானமாகியது என் புத்தி....... கை யோடு கைசேர்த்தாள் என்னவள்.....! & தமிழோடு விளையாடு கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்

மறக்க முடியாத ஞாபகம் நீ

ஆயிரம் காதல்..... கவிதைகளை ..... எழுதிவிட்டேன்..... எனக்குள் காதல் ஆலமரமாய்..... விழுதுவிட்டு படர்ந்திருக்கிறது.....! என் மூச்சு காற்று நிற்பதற்குள்...... என் காதலியை கண்டுவிடவேண்டும்..... அவள் விரும்பும் காதல்...... கவிதையொன்றை....... அவளுக்காக எழுத வேண்டும்.....! & கவிப்புயல் இனியவன் கவி நாட்டியரசர் இனியவன்

சமுதாய விழிப்புணர்வு கவிதை

எத்தனையோ...... கடவுளின் உருவங்கள்..... அத்தனையையும் அழகாக..... சிலையாக வடித்துவிட்டான்..... மனிதன்..........! இத்தனை கடவுளை வடித்த....... மனிதனால் ஒரு மனிதனை...... இனங்கான முடியவில்லை....... அவனுக்கொரு சிலையை....... வடிக்க முடியவில்லை.......? & கவிநாட்டியரசர், கவிப்புயல் ^^^^^^^^^^இனியவன்^^^^^^^^^ சமுதாய விழிப்புணர்வு கவிதை

என்னவளை கண்டுபிடி.....!

என் மூச்சோடு மூச்சாய்...... இருந்தவளை காணவில்லை.... என் மூச்சு காற்றே..... என்னவளை கண்டுபிடி.....! எப்படி அவளை கண்டுபிடிப்பேன்..... என்று அஞ்சாதே மூச்சே...... இந்த பிரபஞ்சத்தில்....... என்னவளின் மூச்சு கண்ணீரோடு....... கண்ணீரோடு கலந்திருக்கும்....! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் 

என் மூச்சு நிற்கவேண்டும் ....!!!

உன் அருகில் நானிருந்து .. என் மூச்சை நீ வாங்கி ... என் மூச்சு நிற்கவேண்டும் ....!!! @@@@@ உன்னை தவிர எதையும் நினைக்காத ஞான நிலையை என் இதயம் பெறவேண்டும் ....!!! @@@@@ என்னில் இருக்கும் கண்ணீர் உனக்கே உரியது -நீயே வலியை தந்து நீயே எடுத்து விடு .....!!! @@@@@ நானும் ஒரு இயந்திர மனிதன் உன் நினைவுகளாலும் -உன் இயக்கத்தாலும் இயங்குகிறேன் ...!!! @@@@@ காற்றில்லாமல் வாழ முயற்சிப்பேன் உன் காதல் இல்லாமல் ஓர் நொடி கூட வாழ விரும்பமாடேன் ...!!! @@@@@ கவிப்புயல்  இனியவன் எஸ் ம் எஸ் கவிதைகள்

கவிப்புயல் இனியவனின் 7000 கவிதைகளின் தலைப்புகள்

------------------------------------------------------------------ கவிப்புயல் இனியவன் கவிதைகள் ------------------------------------------------------------------ 01) உன் ஞாபங்கள் வலிக்கிறது 02) பழமொழியும் காதல் கவிதையும் 03)  தத்துவ கவிதைகள் 04) கஸலால் காதலுடன் பேசுகிறேன் 05)  கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள் 06)  சின்ன சின்ன கவிதைகள் 07) முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை 08) இறந்தும் துடிக்கும் இதயம் 09) வலிக்கும் இதயத்தின் கவிதைகள் 10) ஆன்மீகம்- காதல் -கவிதைகள் 11) கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 12) தந்தை....! அப்பா...! தந்தை.....! 13) அன்புள்ள ரசிகனுக்கு கவிப்புயல் எழுதும் கவிதை 14) சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் 15) நான் எழுதுவது கவிதை இல்லை 16) அகராதியில் காதல் செய்கிறேன் 17) தாய் தந்தை கவிதைகள் 18)  ஏனடி காதலால் கொல்லுகிறாய் 19)  நீ இல்லையேல் கவிதையில்லை 20) இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து 21) தொழிலாளர் தினக் கவிதை 22) காதல் சோகத்திலும் சுகம் தரும் 23) கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள் 24) என் இதயம் பேசுகிறது 25) இனிய தமிழ் கவிதைகள் 26) அவள் மனித தேவதை

கவிப்புயல் இனியவன் கவிதைகள் 05

201)  மரணம் -கவிதை 202) தகவல் தொழில்நுட்ப கவிதைகள் ....!!! 203) முயற்சித்து பாருங்கள் வெற்றி நிச்சயம் .....!!! 204)  கானா கவிதை 205) காதலின் இன்பமும் துன்பமும் ...!!! 206)  காதல் அணுக்கவிதைகள்..!!! 207)  காதல் சிதறல்கள் 208) கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை 209) போராட்ட கவிதை 210) வலம்புரி நாளிதழில் என் கவிதை 211) கே இனியவனின் பல்வகை கவிதைகள் 212)  ஒரு தலைக்காதல் கவிதை 213)  கே இனியவன் ஹைக்கூகள் 214) கே இனிவனின் குமுறல் 215) கவிதையும் வினாவும் - விடை தாருங்கள் 216) கே இனியவனின் புதுக்கவிதைகள் 217)  கவிப்புயல் இனியவன் புதிய  கவிதைகள் ............!!!! கவிப்புயல் இனியவன் கவிதைகள் 05 மேலும் எழுதும் போது தொடரும் இவை இதுவரை வந்த தலைப்புக்கள்

கவிப்புயல் இனியவன் கவிதைகள் 04

151) கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள் 152)  பேச்சுத்தமிழ் கவிதைகள் 153) அடுக்கு தொடர் கவிதைகள் 154) சொல்லாடல் கவிதைகள் 155) கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள் 156) நெஞ்சத்தை கிள்ளாதே ராசா 157) காதல் பூ போன்றது 158) இன்றைய ச்ம்ச் கவிதை 159) கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை 160) கே இனியவன் நட்பு கவிதை 161) அகராதி என் காதல் அகராதி 162) முயற்சிசெய் - பயிற்சிசெய் 163) என் கவிதை 164) கவிப்புயல் இனியவன் புதுக்கவிதைகள் 165)  தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் 166) ஒரு சொல் கவிதைகள் 167) எப்போதும் நீ - எல்லாம் நீ 168) காதல் மன முறிவு கவிதைகள் 169) குழந்தைகள் கவிதைகள் 170) நீ எதை செய்தாலும் அது காதல் 171) காதல் கவிதையும் தத்துவமும் 172) முகநூல் காதலருக்காக கே இனியவன் 173) உணவு உணர்வை பாதிக்கும் ...!!! 174) கே இனியவன் ஹைக்கூகள் 175) நட்பு மலர்களே மலருங்கள் 176) காதலில் எதுவும் நடக்கும் 177) கேள்வி..? பதில்..!!! கவிதை 178) கல்லறை இதயத்தின் கதறல் 179) கவிதையால் அடிக்கிறேன் ......!!! 180) கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள் 181) கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதை 182) கவிப

கவிப்புயல் இனியவன் கவிதைகள் 03

 101) விடுகதைக்கவிதைகள் 102)  எனக்குள் காதல் மழை 103) காதல் சோகக்கவிதை 104) கே இனியவனின் 1000 வது கஸல் 105) கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் 106) ஒரு நிமிட உலகம் 107) நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 108)  பெண்ணியம் கவிதை 109) எழுந்திரு போராடு வெற்றி 110) உருக்கமான காதல் கவிதைகள் 111) முள்ளும் ஒரு நாள் மலரும் 112) என் காதல் பைங்கிளியே 113)  கே இனியவன் ஹைபுன் 114) ஒருகதை ஒரு குறள் ஒரு ஹைகூ 115) என்னவளின் காதல் டயறியிலிருந்து 116) கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை 117)  உண்மையின் மறு பக்கம் பார்கிறேன் 118) ஒரு வார்த்தை கவிதைகள் 119) கவிதையால் காதல் செய்கிறேன் 120) என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் ....!!! 121) நினைத்தால் மனசு கொஞ்சம் வலிக்குது .....!!! 122) பழமொன்ரியு 123) நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 124) கனவாய் கலைந்த காதல் 125) பூக்களால் காதல் செய்கிறேன் 126) மின் மினிக் கவிதைகள் 127) எனக்குள் இருவர் 128) சிந்தித்து சிரிக்க சென்ரியூ 129) உடலும் நீயே...! உயிரும் நீயே...! 130) தாயே.. அம்மா... அன்னையே ..!!! 131)  வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை 132)

கவிப்புயல் இனியவன் கவிதைகள் 02

51) வார்தா புயலே இனி வராதே.... 52) நினைவுகள் இல்லாத காதலே தோற்கும் 53)  " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!! 54) இயற்கை வள கவிதை 55) அம்மாவுக்கு கண்ணீர் அஞ்சலி 56) தன்மானமே தமிழ் மானம் 57) நகைச்சுவைக்காக ஒரு கவிதை 58) சமூக சிந்தனை கவிதைகள் 59) நட்பும் காதலும் கவிதை 60) தேனிலும் இனியது காதலே 61) முக நூல்பற்றிய கவிதைகள் 62) ஒரு ஜீவாத்மாவின் கவிதை 63) என்னவளே என் கவிதை 64)  காதல் வெறுப்பு கவிதைகள் 65) என் பிரியமான மகராசி 66) கவிப்புயலின் குடும்ப கவிதைகள் 67) என்னை உன்னுடனேயே வைத்திரு 68) அர்த்தமுள்ள கவிதைகள் ....!!! 69) பஞ்ச வர்ண கவிதைகள் 70)  திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 71)  நீ காதலியில்லை என் தோழி 72) கதைக்கும் கவிதைக்கும் காதல் 73) கடந்த காதல் - குறுங்கவிதை 74)  ஒருவரியில் கவிதை வரி 75) இவை எனக்கு சிறந்தவை 76) திருமண வாழ்த்து மடல்கள் 77) முதல் காதல் அழிவதில்லை 78) கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை 79) மனைவிக்கு ஒரு கவிதை 80) கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை 81) கவிப்புயல் வெண்பா கவிதை 82)  கவிதைமூன்றுவரி - இரண்டுகவிதை 83) நினைத்து

கவிப்புயல் இனியவனின் கவிதைகள் 01

01) உன் ஞாபங்கள் வலிக்கிறது 02) பழமொழியும் காதல் கவிதையும் 03)  தத்துவ கவிதைகள் 04) கஸலால் காதலுடன் பேசுகிறேன் 05)  கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள் 06)  சின்ன சின்ன கவிதைகள் 07) முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை 08) இறந்தும் துடிக்கும் இதயம் 09) வலிக்கும் இதயத்தின் கவிதைகள் 10) ஆன்மீகம்- காதல் -கவிதைகள் 11) கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 12) தந்தை....! அப்பா...! தந்தை.....! 13) அன்புள்ள ரசிகனுக்கு கவிப்புயல் எழுதும் கவிதை 14) சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் 15) நான் எழுதுவது கவிதை இல்லை 16) அகராதியில் காதல் செய்கிறேன் 17) தாய் தந்தை கவிதைகள் 18)  ஏனடி காதலால் கொல்லுகிறாய் 19)  நீ இல்லையேல் கவிதையில்லை 20) இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து 21) தொழிலாளர் தினக் கவிதை 22) காதல் சோகத்திலும் சுகம் தரும் 23) கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள் 24) என் இதயம் பேசுகிறது 25) இனிய தமிழ் கவிதைகள் 26) அவள் மனித தேவதை 27) அதிசயக்குழந்தை 28) பஞ்ச வர்ணக்காதல் கவிதை 29)  திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 30) உயிர் காக்கும் விவசாயின் உயிர் 31) ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 32

என்னைவிட உன்னை

நீ எனக்காக அழுகிறாய் என்றால் என்னை நீ நேசிக்கிறாய் என்று அர்த்தம்...! நீ உனக்காக  அழுகிறாய் என்றால் உன் தப்பை உணர்ந்து அழுகிறாய் என்று அர்த்தம் ...! நிச்சயம்......... என்னைவிட உன்னை..... விரும்பும் உறவு உன்னில்.... இல்லவே இல்லை என்பேன்....! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 11

கவிப்புயல் இனியவனின் கவிதை படைப்புகள்

கவிப்புயல் இனியவனின் கவிதை படைப்புகள் ---------------- 1) வலிக்கும் இதயத்தின் கவிதைகள் 2) தேனிலும் இனியது காதலே 3) அகராதி நீ என் அகராதி 4) கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 5) கதைக்கும் கவிதைக்கும் காதல் 6) கவிப்புயலின் பல இரசனை கவிதை 7) முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை 8) என்னவளே என் கவிதை 9) நீ காதலியில்லை என் தோழி 10) என் பிரியமான மகராசி 11) கடந்த காதல் - குறுங்கவிதை 12) ஒருவரியில் கவிதை வரி 13) சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் 14) இவை எனக்கு சிறந்தவை 15) பஞ்ச வர்ண கவிதைகள் 16) திருமண வாழ்த்து மடல்கள் 17) முதல் காதல் அழிவதில்லை 18) கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை 19) மனைவிக்கு ஒரு கவிதை 20) கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை 21) கவிப்புயல் வெண்பா கவிதை 22) கவிதைமூன்றுவரி - இரண்டுகவிதை 23) நினைத்து பார்த்தால் வலிக்கிறது 24) கே இனியவன் கஸல் கவிதை 25) கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை 26) சமுதாய கஸல் கவிதை 27) உனக்காகவே உயிர் வாழ்கிறேன் 28) கடல் வழிக்கால்வாய் 29) என் காதல் நேற்றும் இன்றும் ....!!! 30) விழிகளால் வலிதந்தாய் 31) ஒரு வழிப்போக்கனின் கவிதை 32) K இனிய

மதியாதார் தலைவாசல்.....

மதியாதார் தலைவாசல்..... மிதிக்காதே.........! என் இதயத்தை...... என்னசெய்வது......? நீ என்னை விலகி........ போனாலும் வெட்கம்..... கெட்ட என்  இதயம் - உன் வீட்டினருகே வரும்போது..... உன்னை ஒருமுறை....... பார்க்க சொல்லி ............... சுரண்டுகிறது....! ^^^ பழமொழியும் காதல் கவிதையும் கவிப்புயல் இனியவன் 

பழமொழியும் காதல் கவிதையும் 02

ஆற்றில் போட்டாலும்...... அளந்து போடு.........! அளவில்லாமல்........ காதல் கொண்டேன்....... அவஸ்தையையே..... வாழ்க்கையாக...... பெற்றுக்கொண்டேன்......! ஆற்றின் ஆழத்தை........ கண்டுவிடலாம்...... காதலின்  அழத்தை..... படைத்தவன் கூட...... அழக்க முடியாதே........! ^^^ பழமொழியும் காதல் கவிதையும் கவிப்புயல் இனியவன் 

பழமொழியும் காதல் கவிதையும்

காக்கை அன்னநடை...... நடக்க போய் தன்நடையை..... கெடுத்ததுபோல்.....! உன் உறவை...... நம்பி -என் உறவுகள்...... எல்லாவற்றையும்....... இழந்து தவிக்கிறேன்.....! ^^^ பழமொழியும் காதல் கவிதையும் கவிப்புயல் இனியவன் 

கவிதை வெறும் கருத்தல்ல

கவிதை வெறும் கருத்தல்ல..... காயத்தின் வடுவுமல்ல.... மறந்த நினைவை....... மீட்கும் வீணையுமில்லை..... நிகழ்கால நிகழ்வின்...... புல்லாங்குழலூமல்ல...... ஆத்தாமாவுக்கு யாரால்...? விளக்கம் கூறமுடியும்...? கவிதையும் அதேபோல்.......! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன்

ஒருவனது மரணத்தில்.....

ஒருவனது மரணத்தில்..... இத்தனை குதூகலமா..? பாடைக்கு முன்னால்..... குத்தாட்டமும் ...... பட்டாசுகளும்.........! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன் 

கவிநாட்டியரசர் தத்துவ கவிதைகள்

வலிகளையும்...... துன்பங்களையும்...... மறக்க உதவும் மருந்து...... புன்னகை........ இறப்புக்கு நிகரான....... பிரசவவலியை  அனுபவித்த..... தாயின் வலி....... குழந்தையை பார்த்து..... புன்னகைத்ததும்...... மறைந்து போகிறது......! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன் 

இரட்டை குழந்தைகள்....!

முயற்சி என்பது..... வெற்றியல்ல........ வெற்றி பெறவைப்பது........ பயிற்சியில்லாத முயற்சி...... தோற்றுப்போகும்........ முயற்சியும் பயிற்சியும்..... இரட்டை குழந்தைகள்....! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன்

தத்துவ கவிதைகள் 02

மறதி வாழ்க்கையில்...... ஒரு இன்பம்........ மரணம் வாழ்க்கையில்...... பேரின்பம்............ மரணத்துக்காக ஏங்கும்..... ஆத்தாவுக்கு புரியும்...... மரணத்தின் இன்பம்........! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன்

தத்துவ கவிதைகள்

 தத்துவ கவிதைகள் ---------------------------------- இறப்பு வீட்டுக்கு சென்ற........ பல அனுபவங்களை.......... பார்த்தபோதுகேட்ட போது..... ஒரு உண்மை புலப்பட்டது...... இறந்த பின் எல்லோரும்........ புனிதராகிவிடுகிறார்கள்....... இப்போதுதான் எனக்கும்...... இறப்பில் ஒரு ஈர்ப்பு வருகிறது.......! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன்

உயிரே வந்துவிடு.......!

எனக்கு ஒரே ஒரு வலி...... உன் மீது அளவில்லாத....... காதலை என்னைவிட....... உன்னை விரும்புபவர்கள்....... யாரும் இருக்க போவதில்லை....! என்னை விட்டு உன்னால்...... காதலோடு யாருடனும்..... வாழவும் முடியாது......... காதலோடு வாழவேண்டும்..... காதலாய் வாழவேண்டும்..... உயிரே வந்துவிடு.......! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 

அது போதும் என் காதலை

என் கவிதையை....... ஒவ்வொன்றாக படித்துபார்..... காதலின் மறுபக்கம்....... உனக்கு தெரியும்......... படித்தவுடன் உன் கண்ணில்...... ஒரு துளி கண்ணீர் நிச்சயம்....... வடியும்................. அது போதும் என் காதலை....... நீ புரிந்ததற்கு..................! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 

உன் ஞாபங்கள் வலிக்கிறது

பொல்லாதவன்..... ஆக்கியவளே............. உன் ஒவ்வொரு அசைவையும்...... திருட மனசை தூண்டியவளே...... உன் கொலுசைகூட........ திருடவைத்துவிட்டாய்......... இத்தனை தவறுகளையும்...... செய்யவைத்துவிட்டு....... எதுவுமே செய்யாதவள்........ போல் உன்னால் எப்படி....... இருக்க முடிகிறது....................? & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 

விலகவில்லை உன் நினைவுகள்...!

நீ கலைந்தே போனாலும் கலையவில்லை.... உன் கனவுகள். . ! நீ பிரிந்தே போனாலும் விலகவில்லை உன் நினைவுகள்...! நீ மறந்தே போனாலும்..... மறக்க வைக்கவில்லை..... உன் நினைவு பரிசுகள்....! நீ சேர்ந்தே போனாலும்.... சேதமாகவில்லை.... என் காதல்.......! & கவிப்புயல் இனியவன்

நீ ஒன்றுமேசெய்ய வேண்டாம்

தமிழ் முதல் மொழி .... சீனத்திலும் உண்டு .... சீமையெல்லாம் உண்டு..... உன் விழிகள் பேசும் .... வார்த்தை மட்டும் ...... என்னிடம்  தான் உண்டு ...! போதும் போதும் ....... நீ விழியால் பேசியது..... வலிமேல் வலி தந்து...... விளையாடுவது போதும்....! நீ ஒன்றுமே ..... செய்ய வேண்டாம்... காதலிக்கிறேன் என்று..... மட்டும்சொல்.......... அந்த வார்த்தையை...... வைத்துக்கொண்டே.......... அகராதி எழுதிவிடுகிறேன்...! & கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்

தேன் நாவுக்கு இனிப்பு......

தேன் நாவுக்கு இனிப்பு...... உடலுக்கு கசப்பு சுவை.......! போலி ஆன்மீக வாதிகள்..... நாவிலே இனிமையான பேச்சு...... செயல்களோ கசப்பானவை....! இறைவா...... உன் நினைவோடு தூங்கி..... உன் நினைவோடு எழும்..... அற்புத சக்தியை தா........! உன்னை நினைக்காத..... நொடிப்பொழுதெல்லாம்..... என் உடலை முள்ளினால்...... தைக்கும்  உணர்வை தா......! & கவிப்புயல் இனியவன்

ஆன்மீகம்கவிதை

தேன் நாவுக்கு இனிப்பு...... உடலுக்கு கசப்பு சுவை.......! போலி ஆன்மீக வாதிகள்..... நாவிலே இனிமையான பேச்சு...... செயல்களோ கசப்பானவை....! & கவிப்புயல் இனியவன்

உன் ஞாபங்கள் வலிக்கிறது

இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன்....... உன் இதயத்தை கவரும்..... கவிதை எழுத்தும் வார்தைகளை.... முடியாமல் தவிக்கிறேன்.... உன் காதலுக்காய்.....! உன் நிவைவுகளை...... தொகுத்து ஒரு அகராதி...... எழுத முடியும் ஆனால்........ உனக்கு என் கவிதை பிடிக்கவேண்டுமே.......... தவிக்கிறேன் உனக்காக..... ஒரு கவிதை எழுத உயிரே....! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 05

தோற்றுவிடுகிறேன்.....!

உன்னை ...... பார்க்கமுன்னர்..... நான்கு வார்த்தை திட்டனும்..... நாக்கு புடுங்கும் வகையில்.... கேள்வி கேட்கனும்...... என்றெல்லாம் ஜோசிப்பேன்...... உன்னை கண்ட நொடியில்.... இரக்கத்தோடு பார்க்கும்..... கண்களாளும்...... படபடக்கும் இதயத்தாலும்.... தோற்றுவிடுகிறேன்.....! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது