காதலில் நீ தந்த கடித்தத்தை திருப்பி தந்துவிட்டேன் ... உன்னோடு இருந்த சின்ன சின்ன புகைப்படத்தை தந்துவிட்டேன் .... என் இதயத்தில் நீ கற் சிற்பமாய் இருக்கிறாய் எப்படி உடைத்து எடுக்க போகிறாய் ....?
அவன் அவள் இல்லாமல் உயிரற்று இருக்கிறான் அவள் அவனில்லாமல் ஊற்றெடுக்கும் கண்ணீரோடு இருக்கிறாள் ....!!! காதல் வாழ்வதால் இருவரும் உயிரோடு இருக்கிறார்கள் ,,,,!!!
காதல் இனிமைதரும் இனிமை நினைவு தரும் காதல் பிரிவு வலிதரும் வலிகள் வரிகள் தரும் வரிகள் கவிதை தரும் கவிதை கற்பனை தரும் கற்பனை புதுமைதரும் புதுமை இளமைதரும் ...!!!