இடுகைகள்

நவம்பர் 5, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உள்ளம் கவர்ந்த கள்வனே

நீ அழகாக ஆணழகன் என் இதயத்தை உடைத்தவன் அரும்பிய மீசையில் காந்த கண்ணில் என்னை தூண்டில் போட்டவன் - நீ பருவத்தில் வரும் காதலில் மயங்கிடாமல் பக்குவத்தால் காதல் வசப்படுத்துபவன்.....!!!

உள்ளம் கவர்ந்த கள்வனே

என்னை திருடியிருந்தால் போனால் போகட்டும் என்று விட்டிருப்பேனடா உள்ளம் கவர்கள்வனே இதயத்தை மட்டுமல்லா திருடிவிடாய் - உயிர் உன்னிடம் வெறும் உடல் என்னிடம் இருந்து என்ன பயனடா ....? வந்து விடு என்னை கொண்டு செல் -இல்லையேல் என் இதயத்தை தந்துவிடு ....!!! 

உள்ளம் கவர்ந்த கள்வனே

என்ன துணிவடா உனக்கு பெண் கேட்டு வீட்டுக்கு வரப்போகிறேன் என்று அடம்பிடிக்கிறாய் ...!!! பெண் கேட்டு வரமுதல் என்னை புரிந்து கொள் காதல் உடனடியாக நிறைவேறினால் இன்பமில்லை -வாடா சிலநாட்கள் காரணமே இல்லாமல் சண்டையிடுவோம் வேண்டுமென்றே கோபிப்போம் காதலில் ஊடல் இல்லாவிட்டால் இரண்டு சடப்பொருள் காதலிப்பதுபோல் ஆகிவிடும்

காதல் இன்றேல் ...?

உன்னுடன் பேசும் போது.... என் தாய்மொழியின் .... இன்பம் தெரிகிறது .....!!! எடுத்த வார்த்தைகளை உன்னையும் காதலையும் வர்ணிக்கும் போதுதான் காதலில் ஆழமும் -என் தாய் தமிழின் ஆழமும் எல்லை யற்றிருப்பதை உணர்ந்தேன் கண்ணே

கண்ணீர் தருகிறாய் ...?

கண்ணில் தூசு விழுந்தால் கண்ணீர் வருவது இயல்பு இதயத்தில் விழுந்த நீ ஏன் கண்ணீர் தருகிறாய் ...?

வேறொன்றும் பிடிக்காது

நீ எனக்கு கொடுத்தவலிகளை நீயே ஜோசித்துப்பார் உனக்கே பிடிக்காது ஆனால் நீ என்னதான் வலிகள் கொடுத்தாலும் வலிகளை தவிர வேறொன்றும் பிடிக்காது

உன் சிரிப்பால்

உன் சிரிப்பால் சிதறு தேங்காய் ஆனது இதயம்

நித்திரை செய்ய துடிக்கிறேன்

உன்னை காதலிக்கமுன் நித்திரை இன்றி தவித்தேன் உன்னை காதலித்தபின் உன் மடியில் நித்திரை செய்ய துடிக்கிறேன்

உடல்கள் தான் இரண்டு ...!!!

படம்
மறக்க நினைக்கிறேன். உன்னை அல்ல.. உன் அழகை உன்னோடு சண்டையிட்ட நிமிடத்தை மறக்க நினைக்கும் பொழுதெல்லாம் என்னை நீ மறக்க விடுகிறாயில்லை

கொன்றவள் நீ

படம்
அறிவான ஒருவனை  அறிவிலியாக்கியது  உன் அழகும் சிரிப்பும்  அதனால் தான்  எல்லாவற்றையும்  இழந்து உன்னை  காதலிக்கிறேன்  மனதை மட்டும் அல்ல  என் வாழ்க்கையையும்  கொன்றவள் நீ 

எனக்கு தீபாவளி ....!!!

படம்
எல்லோரும் தீபாவளியை நரகாசுரனை கொன்றதற்காக கொண்டாடினார்கள் ....!!! நானோ நீ என்னை பார்வையால் கொன்ற நாளையே என்றும் எனக்கு தீபாவளி ....!!!

வணக்கம்

வணக்கம் *********** நட்புகளே எல்லா வகை கவிதையும் கேட்பதற்கேற்ப என்னால் முடிந்த வரை எழுதுகிறேன் -உங்கள் ரசனைக்கும் ஆர்வத்துக்கும் என்று நாம் தலைவணங்குகிறேன் கவிதை எனது துணைப்பணியே நன்றி ;மீண்டும் சந்திப்போம்