இடுகைகள்

பிப்ரவரி 16, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காயப்படுத்தவும் மாட்டேன்

தண்ணீருக்கும் நனைக்குத்தெரியும்... கண்ணீருக்கும் .... நனைக்குத்தெரியும்... காரணங்கள் ஒன்றல்ல ...!!! தீக்கும் எரிக்கதெரியும்.... சூரியனுக்கும் எரிக்கதெரியும்.. ஆறுதல் செய்ய தெரியாது .... கவலை படாதே உன்னை .... காயப்படுத்தவும் மாட்டேன்....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

கலங்காத கண்கள் ..

பிரியாத நினைவு.... கலையாத கனவு .... வலிக்காத வலிகள் ... கலங்காத கண்கள் ....!!! தீராத காதல்.... அழியாத அன்பு.... விலகாத  நட்பு.... உயிரான பண்பு.... எல்லாம் உன்னின் ... காண வேண்டும் ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை

அதிகாலை எழுந்து .... அம்மணமான உடையுடன் .... அம்மாவின் கையை பிடித்தபடி ..... வீட்டின் முன்பக்கம் பின்வளவு ,,,, எல்லாம் சுற்றி திரிந்து .... அக்கா அண்ணா பள்ளி செல்லும் .... போது நானும் போகணும்.... என்று கத்தியழுத அந்த காலம் .... வாழ்வின் " தங்க காலம்  "......!!! பச்சைஅரிசிசோறு வேகும்போது .... அவிந்தது பாதி அவியாதது பாதி .... கஞ்சிக்கு கத்தும் போது .... பொறடாவாரேன் என்று சின்ன .... அதட்டலுடன் கஞ்சியை வடித்துதர .... பாதி வாய்க்குள்ளும் மீதி ... வயிற்றில் ஊற்றியும் குடித்த .... அந்த காலம் .... வாழ்வின் " பொற்காலம்  "......!!! பாடசாலையில் சேர்ந்தபோது ..... புத்தகத்தையும் என்னையும் ... தூக்கிகொண்டு சென்ற அம்மா .... சேலையின் தலைப்பை என் தலை .... மேல் போட்டு தன் தலை வெய்யிலில் ... வேக வேக வீட்டுக்கு வந்து .... உணவும் ஊட்டிய தாயின் பாசம் .... அந்த காலம் .... வாழ்வின் " வைரம் தந்தகாலம்  "......!!! போட்டி பரீட்சையில் என்னோடு ... கண்விழித்து கண்கசக்கி கண்எரிய ... நண்பர்களின் உறுதுணையுடன் .... போட்டி பரீட்சையெல்லாம் சித்தியடைந்து .... பட்ட படிப்பையும் முடித்து பட்டதாரி

அதிசயக்குழந்தை - எண்ணம்

அதிசயக்குழந்தை - எண்ணம் ------------ எண்ணும் எழுத்தும் .... கண்ணெனத்தகும் ....!!! அதிசய குழந்தை  வாய்க்குள் உச்சரித்து ... கொண்டிருந்தான் ...!!! என்னடா  புது பழமொழியோ ...? இல்லை ஆசானே .... எதுவுமே புதியது இல்லை .... எல்லாமே முன்னோர் சொன்ன .... பொதுமை மொழிகள் .... அதிலிருந்தே இனிமேல் ... எல்லோரும் எடுக்க வேண்டும் .... இது எனது இது நான் சொன்னது .... என்று யாரும் உரிமை .... கொண்டாடுவதில் பயனில்லை ...!!! எண்ணமே ஒருவனின் உருவம் .... எண்ணமே ஒருவனின் வாழ்க்கை.... எண்ணமே ஒருவனின்முடிவும் .... அடுத்து சொன்னான் குழந்தை ...... சொர்க்கமும் நகரமும் .... ஒருவனுடைய எண்ணமே ..... துயில் எழும்பும் போது .... நல்ல சிந்தனையுடன் எழுபவன் .... அன்று முழுதும் சொர்க்கத்தில் .... வாழ்கிறான் ......!!! நேற்றைய பகையை ... முன்னைய இழப்பை .... பொறாமையை துயில் .... எழும்போது நினைப்பவன் அன்று முழுதும் நரகத்தில் .... வாழ்கிறான் ......!!! குப்பத்தில் இருப்பவனை ... கோபுரத்துக்கும் ,கோபுரத்தில் ... இருப்பவனை குப்பத்துக்கும் .... மாற்றுவது தலையெழுத்தல்ல .... அவரவர் எண்ணமே எண்ணமே....!!! ^ அதிசயக்குழந்தை  வசனக்கவிதை  கவிப்ப