இடுகைகள்

நவம்பர் 19, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பலன் இருக்கும் ....!!!

நீ தூக்கி எறிந்த இதயம் ... தவமிருகிறது -மீண்டும் நீ வருவாய் என்று ....!!! எந்த தவத்துக்கும் பலன் இருக்கும் ... உன் மௌனத்துக்கும் பலன் இருக்கும் ....!!!

நீதான் நினைகிறாய் ....

நீதான் நினைகிறாய் .... உன்னை விட்டு நான் ... தூரத்தில் இருக்கிறேன் ... விலகி இருக்கிறேன் ... பாசமில்லாமல் இருக்கிறேன் ... என்கிறாய் ....!!! உனக்கு புரியுமா ...? நான் இங்கு பார்க்கும் பார்வைகள் அனைத்திலும் .. நீயே இருகிறாய் ... தெரிகிறாய் .... பேசுகிறாய் ......!!!

ஒரு இதயம் தான் ....!!!

நீ நினைக்கும் போதும் ... விரும்பும் போதும் ... என்னை பார்த்து சிரிப்பதும் பேசுவதும் ....!!! நீ விரும்பாதபோது ... விலகி நிற்பதும் ... உன்னால் எப்படி ... முடிகிறது ...? என்னிடம் இருப்பது ஒரு இதயம் தான் ....!!!

எங்கே புரியப்போகிறது ...?

உனக்கு எங்கே புரியப்போகிறது ...? வலியின் வலி ...? பிறப்பின் போது தாய் ... உன் வலியை சுமர்ந்தார் ...!!! காதல் இறப்பின் போது .... உன் வலியை நான் .. சுமக்கிறேன் ....!!!

அகராதி தமிழில் கவிதை 02

ஆருயிர் நண்பா .....!!! ஆட்கொண்டாயடா தூய அன்பில் ... ஆதாயம் எதுவும் இல்லாமல் .... ஆதரவு ஒன்றே போதும் என்று ... ஆபத்தென்றால் அருகில் இருப்பவனே ....!!! ஆகம் நிறைந்து வாழ்பவனே .... ஆகாரம்  இன்றி வாழ்வேன் -உன் ஆறுதல் என்றும் எனக்கு இருந்தால் ... ஆகூழ் மூலம் கிடைத்தவன் -நீ ஆகாயம் அழியும் வரை நீ இருப்பாய் .....!!! ஆக்கிரமித்தல் அன்பிலும் உண்டு ... ஆச்சியம் போல் உருகுதடா மனசு .... ஆணு தரும் நினைவுகள் தருவாய் .... ஆதிவாரம் நாம் பெறும் ஆணு .... ஆச்சரியமான அன்பு வெள்ளமடா ....!!! ஆத்திகனுக்கு சமனானவனே...... ஆதவன் போல் பிரகாசமானவனே ..... ஆதிமுதல் அந்தம் வரை இருப்பாயடா ... ஆரி கொண்டேனடா உன் அன்பில் ... ஆசந்திக்குள் இருவருமே போவோம் நண்பா ....!!! ஆகம் - நெஞ்சு  ஆகூழ் - நல்வினைபயன்  ஆணு - இன்பம்  ஆசந்தி - சவபெட்டி  கவிதை ; அகராதி தமிழ் நட்பு கவிதை கவிஞர் ; கே இனியவன்