உறவுகளை மறந்தேன் உணர்வுகளை துறந்தேன் உடமைகளை இழந்தேன் உண்மைகளை மறைத்தேன் உலகை நேசித்தேன் உள்ளத்தை விரும்பினேன் உயிராக மதித்தேன் உத்தமனாக இருந்தேன் உன்னையே நினைத்தேன் உள்ளதெல்லாம் சொன்னேன் உருகியே காதலித்தேன் உன் உண்மையான அன்பை உணர்வோடு எதிர்பார்த்தேன் உயிரே ஏன் என்னை வெறுத்தாய் உண்மையை சொல் உனக்கு நான் செய்த வலிதான் என்ன ...? உள்ளம் மட்டுமல்ல உயிரும் வலிக்கிறது உன் பிரிவை ஏற்க மறுக்கிறது மனம் உண்மையொன்றை சொல்கிறேன் உனக்கு இனி என்னைப்போல் ஒருவன் உன் உயிர் இருக்கும் வரை கிடைக்காது உன்னதமான என் காதல் உள்ளத்தால் உருவான காதல் உலகம் இருக்கும் வரை தொடரும் .....!!!