இடுகைகள்

மார்ச் 12, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உயிர் காக்கும் விவசாயின் உயிர்

உயிர் காக்கும் விவசாயின் உயிர் ------------------------------------------------ ஆண்டவன் படைப்பில் அதிசயப்பிறவி....... உலகுக்கே உணவுகொடுக்கும் விவசாயி........ தன் கையில் சேற்றுடன் சோற்றை உண்பார்..... எம் சோற்றில் ஒருகல் வராமல் காத்திடுவார்.....! ............................ஆளவேண்டிய விவசாயியின்று ............................அடங்கிகிடக்கிறான் வீட்டினிலே ............................கூழைபிசைந்து குடிக்கவழியில்லாமல் ............................குறுகிக்கிடக்கிறான் குடிசையிலே நிலத்தை பண்படுத்தியவன் வாழ்க்கை....... நிலைகுலைந்து போனதெதனால்......... பணத்தை பத்துவட்டிக்கு கொடுக்கும்..... பாழாய்போன பணப்பிணம் தின்னிகளால்....... ..........................ஒட்டு துணியோடு வயலிலே ..........................உச்சிவெயிலில் உலாவிவருவர் ..........................நட்டு நடு ராத்திரியில் காவலிருந்து ..........................அறுவடையை காத்திடுவர் கண்விழித்து பயிருக்கு அடிக்கும் நஞ்சை எதற்காய்.... பாடையில் போகவதற்கு குடிக்கிறார்கள் பயிர்கடனை கொடுக்க வழிதெரியாமல் பாதியிலே உயிரை மாய்க்கிறார்கள

ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 03

உச்சிவெயில் சுட்டெரிக்கும்...... குதிப்பாதம் வெந்து துடிக்கும்....... வேண்டுமென்றே மெல்லனடந்து..... இரண்டு மணிக்கே வீடுசெல்வோம்..... அவன் வீட்டில் எனக்கும்..... என்வீட்டில் அவனுக்கும்.......... திட்டியே கொட்டிதீர்த்துடுவர்.........! தும்பியை பிடித்து வாலில்...... நூல்  பட்டமாய் பறக்கவிட்டு...... புல்வெளியில்பட்டாம்பூச்சியை...... வேர்வைசிந்த கலைத்துபிடித்து..... ஒற்றை சிறகு ஒடிந்த பூச்சியை...... மெல்ல தடவி கண்ணீர் விட்டு....... வரும் வழியில்மாமரத்துக்கு..... கல்லெறிய வீட்டின் ஓட்டில் பட...... ஒளிந்து ஒளிந்து வீட்டுக்கு வந்த நாள்...... வாழ்ந்த நாளில் வசந்த காலம்.........! & ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 03 கவிப்புயல் இனியவன்