இடுகைகள்

நவம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எண்ணத்தால் எரிகிறேன் .....!!!

படம்
என் இதயமும்  மெழுகு திரியும்  ஒன்றுதான் - தனக்காக  வாழாமல் பிறருக்காக  எரிகிறது -நான்  எனக்காக வாழாமல்  உனக்காக உருகுகிறேன்  அது எண்ணையால் எரிகிறது  நான் எண்ணத்தால்  எரிகிறேன் .....!!!

தந்துவிட்டேன் ...

காதலில் நீ தந்த கடித்தத்தை திருப்பி தந்துவிட்டேன் ... உன்னோடு இருந்த சின்ன சின்ன புகைப்படத்தை தந்துவிட்டேன் .... என் இதயத்தில் நீ கற் சிற்பமாய் இருக்கிறாய் எப்படி உடைத்து எடுக்க போகிறாய் ....?  

உயிரோடு இருக்கிறார்கள் ,,,,!!!

அவன் அவள் இல்லாமல் உயிரற்று இருக்கிறான் அவள் அவனில்லாமல் ஊற்றெடுக்கும் கண்ணீரோடு இருக்கிறாள் ....!!! காதல் வாழ்வதால் இருவரும் உயிரோடு இருக்கிறார்கள் ,,,,!!!

உன் ஆறுதலான

ஆனந்தம் என்பது காதலில் ஆரவாரத்தில் இல்லை -உன் ஆறுதலான வார்த்தையில் தான் இருக்கும்

கற்பனை புதுமைதரும்

காதல் இனிமைதரும் இனிமை நினைவு தரும் காதல் பிரிவு வலிதரும் வலிகள் வரிகள் தரும் வரிகள் கவிதை தரும் கவிதை கற்பனை தரும் கற்பனை புதுமைதரும் புதுமை இளமைதரும் ...!!!

எப்போதோ நினைத்துவிட்டேன் ....!!!

இதயம் உருகும் வார்த்தைகள்  ஏக்கம் நிறைந்த பார்வைகள்  நிலையில்லாமல் ஓடித்திரியும்  கால்களும் மனமும்  துடித்து துடித்து சாகும்  உன் இதயம் -போதுமடா  நீ படும் வேதனை  உன்னை நான் எப்போதோ  நினைத்துவிட்டேன் ....!!!

கற்பனை புதுமைதரும்

காதல் இனிமைதரும் இனிமை நினைவு தரும் காதல் பிரிவு வலிதரும் வலிகள் வரிகள் தரும் வரிகள் கவிதை தரும் கவிதை கற்பனை தரும் கற்பனை புதுமைதரும் புதுமை இளமைதரும் ...!!!

உள்ளம் கவர்ந்த கள்வனே

நீ அழகாக ஆணழகன் என் இதயத்தை உடைத்தவன் அரும்பிய மீசையில் காந்த கண்ணில் என்னை தூண்டில் போட்டவன் - நீ பருவத்தில் வரும் காதலில் மயங்கிடாமல் பக்குவத்தால் காதல் வசப்படுத்துபவன்.....!!!

உள்ளம் கவர்ந்த கள்வனே

என்னை திருடியிருந்தால் போனால் போகட்டும் என்று விட்டிருப்பேனடா உள்ளம் கவர்கள்வனே இதயத்தை மட்டுமல்லா திருடிவிடாய் - உயிர் உன்னிடம் வெறும் உடல் என்னிடம் இருந்து என்ன பயனடா ....? வந்து விடு என்னை கொண்டு செல் -இல்லையேல் என் இதயத்தை தந்துவிடு ....!!! 

உள்ளம் கவர்ந்த கள்வனே

என்ன துணிவடா உனக்கு பெண் கேட்டு வீட்டுக்கு வரப்போகிறேன் என்று அடம்பிடிக்கிறாய் ...!!! பெண் கேட்டு வரமுதல் என்னை புரிந்து கொள் காதல் உடனடியாக நிறைவேறினால் இன்பமில்லை -வாடா சிலநாட்கள் காரணமே இல்லாமல் சண்டையிடுவோம் வேண்டுமென்றே கோபிப்போம் காதலில் ஊடல் இல்லாவிட்டால் இரண்டு சடப்பொருள் காதலிப்பதுபோல் ஆகிவிடும்

காதல் இன்றேல் ...?

உன்னுடன் பேசும் போது.... என் தாய்மொழியின் .... இன்பம் தெரிகிறது .....!!! எடுத்த வார்த்தைகளை உன்னையும் காதலையும் வர்ணிக்கும் போதுதான் காதலில் ஆழமும் -என் தாய் தமிழின் ஆழமும் எல்லை யற்றிருப்பதை உணர்ந்தேன் கண்ணே

கண்ணீர் தருகிறாய் ...?

கண்ணில் தூசு விழுந்தால் கண்ணீர் வருவது இயல்பு இதயத்தில் விழுந்த நீ ஏன் கண்ணீர் தருகிறாய் ...?

வேறொன்றும் பிடிக்காது

நீ எனக்கு கொடுத்தவலிகளை நீயே ஜோசித்துப்பார் உனக்கே பிடிக்காது ஆனால் நீ என்னதான் வலிகள் கொடுத்தாலும் வலிகளை தவிர வேறொன்றும் பிடிக்காது

உன் சிரிப்பால்

உன் சிரிப்பால் சிதறு தேங்காய் ஆனது இதயம்

நித்திரை செய்ய துடிக்கிறேன்

உன்னை காதலிக்கமுன் நித்திரை இன்றி தவித்தேன் உன்னை காதலித்தபின் உன் மடியில் நித்திரை செய்ய துடிக்கிறேன்

உடல்கள் தான் இரண்டு ...!!!

படம்
மறக்க நினைக்கிறேன். உன்னை அல்ல.. உன் அழகை உன்னோடு சண்டையிட்ட நிமிடத்தை மறக்க நினைக்கும் பொழுதெல்லாம் என்னை நீ மறக்க விடுகிறாயில்லை

கொன்றவள் நீ

படம்
அறிவான ஒருவனை  அறிவிலியாக்கியது  உன் அழகும் சிரிப்பும்  அதனால் தான்  எல்லாவற்றையும்  இழந்து உன்னை  காதலிக்கிறேன்  மனதை மட்டும் அல்ல  என் வாழ்க்கையையும்  கொன்றவள் நீ 

எனக்கு தீபாவளி ....!!!

படம்
எல்லோரும் தீபாவளியை நரகாசுரனை கொன்றதற்காக கொண்டாடினார்கள் ....!!! நானோ நீ என்னை பார்வையால் கொன்ற நாளையே என்றும் எனக்கு தீபாவளி ....!!!

வணக்கம்

வணக்கம் *********** நட்புகளே எல்லா வகை கவிதையும் கேட்பதற்கேற்ப என்னால் முடிந்த வரை எழுதுகிறேன் -உங்கள் ரசனைக்கும் ஆர்வத்துக்கும் என்று நாம் தலைவணங்குகிறேன் கவிதை எனது துணைப்பணியே நன்றி ;மீண்டும் சந்திப்போம்

சஞ்சலப்படுத்துதே

 உன் தலைகுனிவு என்னை சஞ்சலப்படுத்துதே

எனக்கு உன் வலிகள்

எனக்கு உன் வலிகள் வலிப்பதில்லை இதயம் புண்ணாகி போனதால்

நீயும்தான் காதல்

உன் கண்ணில் நானும் என்கண்ணில் நீயும்தான் காதல்

உன் அழகுதான்

உன் அழகுதான் எனக்கு மரண தண்டனை

நெருப்பாய் பார்க்கிறாய்

பூக்களால் கவிதை எழுதுகிறேன் நெருப்பாய் பார்க்கிறாய்

காதலின் பெறுபேறு

நான் விடுவது கண்ணீர் அல்ல காதலின் பெறுபேறு

என்னை திண்டேன்

உன்னை கண்டேன் என்னை திண்டேன்

என் ஆயுள் ரேகை

நீ சொல்லும் வார்த்தை என் ஆயுள் ரேகை

மரணத்தில் வா

நியத்திலும் கனவிலும் வராமல் மரணத்தில் வா

அவள் மௌனம்

அவள் மௌனம்தான் மௌன அஞ்சலியாக்கியது

பெரும் பாக்கியம்

காதலி கிடைத்தது பாக்கியம் இல்லை நீ கிடைத்தது தான் பெரும் பாக்கியம்

இதயத்தில் பதிகிறது

நீ அருகில் சென்றாலே -உன் பாதசுவடு என்னில் இதயத்தில் பதிகிறது

கைது செய்யுங்கள்

என் இதயத்துடிப்பு அதிகரித்தத்தற்கு காரணமான அவளை கைது செய்யுங்கள்

இரு வரி கவிதைகள்

என்னை புரியும் படி உன்னை - அனுப்பிய கடவுளுக்கு நன்றி

இரு வரி கவிதைகள்

சூரியனும் நீயும் ஒன்றுதான் இருந்தால் இன்பம் மறைந்தால் மௌனம் ...!!!

நீ முழுமனிதனாவாய்....!!!

காதலித்துப்பார் நீ காதலில் தோற்றுப்பார் நீ இரண்டும் செய்தால் நீ முழுமனிதனாவாய்....!!! நீ என்னை விரும்பவில்லை உன் நிழல் என்னை விரும்புகிறது தொடக்கத்துக்கு இது போதும் காதலில் கல்லெறியும் சொல்லெறியும் காதலரின் உரம்தான் செடியாக நாம் இருந்தால் ....!!! கஸல் ;561

காதல் அழுதால் தான் வரும்

நிலவோடு உன்னை ஒப்பிட்டேன் அமாவாசை ஆகிவிட்டாய் நெருப்புக்குதான் சுடும் பண்பு -நீ நீர் என் சுட்டெரிக்கிறாய் காதல் எல்லாவற்றையும் மாற்றும் ....!!! அழுது புரண்டாலும் மாண்டார் திரும்பி   வரார் காதல் அழுதால் தான் வரும் கஸல் ;562

இரட்டை உடலோடும்

ஒற்றையடி பாதையால் உன் நினைப்பில் சென்றேன் ஒற்றை இதயத்தோடு அல்ல இரட்டை உடலோடும் உன்னை கண்டால் ஏங்கிய மனம் உன்னை கண்டு ஒழிக்கிறது ....!!! காதல் சிலந்தி வலையில் அகப்பட்ட பூச்சிபோல் பூச்சியும் பாவம் சிலந்தியும் பாவம் ....!!! கஸல் 563

கூட வரவில்லையே ....!!!

பகலில் சந்தித்தால் மறைந்து விடுகிறாய் இரவில் சந்தித்தால் பயப்பிடுகிறாய் காதலின் நேரம் நீ சொல் ....!!! உருட்டு கட்டையால் உனக்காக அடிவாங்கினாலும் நான் கட்டையில் போகும் வரை நீ தான் கண்கண்ட காதலி காதலில் பூ வரவேண்டும் பிஞ்சு வரவேண்டும் காய் வந்து கனிய வேண்டும் நீ இன்னும் மரமாக கூட வரவில்லையே ....!!!

எனக்காகவும் இல்லை

பார்த்தேன் காதலித்தாய் பழகினேன் பேசினாய் பார்க்கிறேன் -ஏன் திரும்பி போகிறாய் ....!!! நிலவில் கால் வைக்கலாம் உன் நினைவில் கால் வைத்தால் சுடுகிறது ....!!! உனக்காக இல்லை எனக்காகவும் இல்லை காதலுக்காக காதலிப்போம் வா அன்பே .....!!! கஸல் ;565

ஏங்குகிறேன் ....!!!

இதயம் தானடி விட்டு விட்டு துடிக்கும் உன் நினைவு நினைப்பது விடாமலே துடிக்குது ....!!! முதல் நாள் உன்னை சந்தித்தேன் இரண்டாம் நாள் உன்னோடு கதைத்தேன் வாழ் நாள் முழுவதும் ஏங்குகிறேன் ....!!!

ஆறுதல் சொல்ல நீ எங்கே...?

வெள்ளை மனமாக இருந்த என்னை வான் வில்லாக மாற்றினாய் சந்தோசப்பட்டேன் நிலைக்க வில்லை சந்தோசம் வானவில்லில் அம்பை சொறுவியவள் நீ பலர் அழும்போது ஆறுதல் சொன்ன நீ இப்போ நான் அழுகிறேன் ஆறுதல் சொல்ல நீ எங்கே...?

வலியை துடைப்பாய் ....!!!

என் இதயத்தை உன்னிடம் தந்துவிட்டேன் விளையாட்டுப்பொருளாகவும் இதய வீட்டுப்போருளாகவும் பாவிப்பது உன்னை பொறுத்தது காதல் எதிர் பார்ப்பற்ற இதயங்களின் இணைப்பு இறைவனின் பிணைப்பு நீ விளையாட்டு பொருளாக பயன் படுத்தினால் வலியை தருவாய் ..... இதயவீட்டு பொருளாக பயன்படுத்தினால் -வலியை துடைப்பாய் ....!!!

கவலையில்லை

தேவையான எல்லா விடயங்களையும் உனக்காக மறந்தேன் கடவுளின் தண்டனை நீ என்னை மறந்து விட்டாய் ...!!! உனக்கு பூ தந்தேன் அன்புக்கு அடையாளமாய் நீ சூடுவதற்கு தந்ததாக நினைத்து விட்டாய் ....!!! நீ பிரிந்து செல் கவலையில்லை உன் நினைவுகள் என்னிடம் இருக்கும் வரை கவலையில்லை

உன்னிடம் என் இதயம் ....!!!

நினைவுகளுடன் என்னை போராடவிட்டு -நீ எப்படி நிம்மதியாய் இருக்கிறாய் ...? நான் உயிரோடு இருக்கும் காலம் வரை உன் உயிராக இருக்கும் காதல் வரத்தை தந்துவிடுவாயா அன்பே ...? உன்னை எல்லோருக்கும் பிடிக்கிறது அதுதான் எனக்கு பயமாக இருக்கிறது -என்றாலும் நான் கொடுத்து வைத்தவன் உன்னிடம் என் இதயம் ....!!!

உயிர் பெறுகின்றன அன்பே ....!!!

உன் நினைவோடு வாழ்வது போதாது என்று நினைவு பொருளையும் தந்து கொல்லுகிறாய் .... வீட்டார் யாரும் இல்லை என்று நினைத்து எத்தனை முறை -உன் நினைவு பொருட்களுடன் கதைத்து தம்பி தங்கையுடன் கிண்டல் வாங்கினேன் தெரியுமா ....? நீ நினைவு பொருளாக தருகிறாய் என்னிடம் வந்து அவை உயிர் பெறுகின்றன அன்பே ....!!!

சிற்பமாய் இருக்குதடி

எந்த விலை கொடுத்தாலும் பெறமுடியாது -உன் சிரிப்பு எந்த விலை கொடுத்தாலும் பெறமுடியாது - உன் வெட்கம் மலர்மேல் உள்ல காதல் பனிக்குத்தான் தெரியும் உன் மீதுள்ள காதல் என் இதயத்துக்குத்தான் த்தெரியும் ...!!! நீ சிரித்த அத்தனை சிரிப்பும் சிற்பமாய் இருக்குதடி நெஞ்சில் ...!!!

-நீ அசையும் திசையெல்லாம்

காதல் ஒன்றுதான் புரிந்து கொண்டாலும் அழகு -பிரிந்து சென்றாலும் அழகு -வலிகள் தான் வேறுபடும் காதல் வேறுபடாது ....!!! உன்னை என்று பார்த்தேனோ அன்று நான் இறைவனிடம் கேட்ட வரம் உன்னை எனக்கு தா என்று அல்ல ...? உன்னை தவிர யாரையும் தந்துவிடாதே என்று ....!!! உன் காந்த கண்ணில் பட்டு துடிக்கும் இரும்பு கண் நான் -நீ அசையும் திசையெல்லாம் அசைகிறேன்....!!!

உயிராகிவிட்டாய் ....!!!

நீ வரும் வழியையே என் விழி பார்க்கும் -உன் விழிக்கு அப்பால் சென்று என் உயிர் உன்னை தேடும் ....!!! தேடிக்களைத்த என் உயிர் துடிப்பதை நிறுத்த ஜோசிக்கும் உன்னை தேடுவதை நிறுத்த ஜோசிக்காது ....!!! என் உயிர் என்னக்காக துடித்ததை விட உனக்காக துடிப்பதே பாக்கியம் என்கிறது அந்தளவுக்கு நீ உயிராகிவிட்டாய் ....!!!

ஒருவரி நட்புவரி -01

நண்பா கர்ணனாக இருக்கவேண்டியதில்லை கருணையோடு இருந்தால் போதும்

ஒருவரி நட்புவரி -03

ஒருவரி நட்புவரி -03 நட்பு சூரியனுமில்லை சந்திரனுமில்லை வானம்

ஒருவரி நட்புவரி -

ஒருவரி நட்புவரி -04 தடையில்லாமல் வரும் தடுத்தாலும் வரும் -நட்பு

ஒருவரி நட்புவரி

ஒருவரி நட்புவரி -05 இதயத்தில் இருந்தால் காதல் இதயமாக இருப்பது நட்பு

ஹைக்கூக்கள்

ஹைக்கூக்கள் இனிக்கும் நீரையும் (அன்பு ) தரும் வெறிக்கும் நீரையும் ( சோகம் ) தரும் ---தென்னை --

ஹைக்கூ 02

ஹைக்கூ 02 பலத்தாலும் மேன்மை குணத்தாலும் மேன்மை --யானை --

ஹைக்கூ 03

ஹைக்கூ 03 வடிந்தால் அழகு பாய்ந்தால் பயம் --நீர் --

ஹைக்கூ 04

ஹைக்கூ 04 ஆரோக்கியனுக்கு சங்கடம் நோயாளிக்கு அன்பளிப்பு --மரணம்--

ஹைக்கூ 05

ஹைக்கூ 05 பத்தும் பலதாய் வரும் பத்திரமாத தங்கம் -பத்திரிக்கை -

கல் எறிந்து கண்ணாடியை

உன்னை நானும் என்னை நீயும் கைது செய்துவிட்டோம் காதல் ஆயுள் கைதி காதல் இன்பம் மட்டும் வாழ்க்கையில்லை காதலில் துன்பமும் வாழ்க்கைதான் நான் காதல் கண்ணாடியால் உன்னை ரசிக்கிறேன் -நீ கல் எறிந்து கண்ணாடியை உடைக்கிறாய் ....!!! கஸல் 556

வாட வைக்கிறாயே ...!!!

காற்று மூச்சு விடத்தான் அவசியம் -நீ காற்றை பேச்சுக்கு பயன்படுத்துகிறாய் மழை காலத்தில் வரும் வண்டுகள் போல் அப்பாப்போ வந்து போகிறாய் என் காதல் அழுகிறது வெயிலில் பூ வாடலாம் காதல் மரத்தை வாட வைக்கிறாயே ...!!! கஸல் ;557

காதல் வானவில்லை

காதலின் தோல்வியின் அடையாள சின்னத்தை தந்து விட்டாய் -நன்றி என் கண்ணுக்கும் புரியும் நீ காதல் சூரியனா ..? காதல் சூரிய ஒளியா ..? புரியாமல் தவிர்க்கிறேன் வார்த்தை சுடுகிறது காதல் வானவில்லை கடலில் வரைய சொல்லுகிறாய் மிக விரைவாக அழிப்பதற்காக கஸல் 558

கல்லறை

காதலித்த பின் நான் துடித்து கொண்டு இருக்கிறேன் - நீ சாதாரணமாக இருக்கிறாய் என் முத்தங்களை தந்துவிடு நினைவுகளை வைத்துக்கொள் ....!!! உனக்காக எழுதிய கவிதை எல்லாம் கல்லறை வாசகங்களாக மாறி வருகின்றன ....!!! கஸல் 559

வாழ்க்கைக்கு

உனக்காக நான் காத்திருப்பேன் நேரம் காத்திருக்குமா..? உன்னைப்போல் அதுவும் ஓடுகிறது ....!!! உன்னை சுவாமியாக கண்டேன் -இப்போது சாமியாராக போலி வார்த்தை கூறுகிறாய் வாழ்க்கைக்கு வளம் காதல் -அதை வாள் ஆக்கிவிட்டாய் -நீ கஸல் 560

நீ - படும் பாடு

நீ - படும் பாடு என்பாட்டில் தனியே இருந்தேன் என்னை செத்தவன் போல் ஆக்கிவிட்டாய் யார் நீ ************** என்னை மட்டும் நினைத்த மனதில் உன்னையும் நினைக்க வைத்தாயே ஏன் நீ *************** யாரையும் காதலிக்க மாட்டேன் என்றிருந்தேன் உன்னை கண்டேன் -எல்லாம் மாறிவிட்டது எப்படி நீ ..? *************** தினமும் வருயாய் புதினம் தருவாய் இப்போது எல்லாம் நிறுத்தி விட்டாயே எதற்காக நீ *************** இருவராய் இருந்தோம் ஒருவராய் மாறி விட்டாய் எப்போது நீ *************** இதயத்தில் இருந்து உடல் முழுதும் ஓடித்திரிந்த நீ -இப்போ மனதில் கூட இல்லையே எங்கு நீ *************** ஏன் சந்தேகப்பட்டாய் எதற்காக பிரிந்தாய் எவர் தூண்டியது எவரால் நீ *************** எனக்காக வாழவில்லை உனாக்காகவும் வாழவில்லை அப்படிஎன்றால் ..? யாருக்காக நீ *************** பார்க்கும் இடமெல்லாம் பார்க்கும் பொருள் எல்லாம் தொடும் இடமெல்லாம் எங்கும் நீ **************** யாரெல்லாம் என்னை காதலிக்கலாம் எவருக்கெல்லாம் என்னை திருமணம் பேசலாம் ஆனால் என் மனதில் எப்போதும் நீ