எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம் அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால் பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!! அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!! சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!! விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ விழி மூடாமல் என்னை செய்து விட்டாய் தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன் திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...? காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல் மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!! & கவி நாட்டியரசர் இனியவன் காதல் வெண்பா