இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காட்சிப்பிழைகள்

படம்
காட்சிப்பிழைகள் -  கே இனியவன் காட்சிப்பிழைகள்....................( காதல் காட்சிப்பிழைகள்)  காதல்  ஒரு மந்திர கோல் .....  இரண்டு இதயங்களை ....  ஒன்றாக்கி விடும் ....!!!  நெற்றியில் ...  குங்கும பொட்டு.....?  அப்பாடா - சாமி ....  கும்பிட்டு வருகிறாள் ....!!!  தேவனிடம் ....  பாவ மன்னிப்புக்கேட்கிறாள் ....  என்னிடமும் கேட்பாள் .....!!!  ^^^  கனவு  நிஜத்தில் நிறைவேறாத ...  ஆசைகளை நிறைவேற்றும் ....  நீர்க்குமிழி .....!!!  திடுக்கிட்டு எழுந்தாள் ....  தாலியை கண்ணில் வணங்கி...  என்னை பார்த்தாள் ....!!!  இன்னும்  சற்று தூங்கியிருந்தால் ....  சொர்கத்தை.........  பார்த்திருப்பேன்....!!!  ^^^  நீ என்னை ....  காதலிக்கும் வரை ...  உதடு அசைவெல்லாம் ...  என் பெயர் தான் ....!!!  அவள்  தந்த புத்தகத்துக்குள் ......  மடித்த காகித துண்டு ....  இன்ப அதிர்ச்சி ....  படித்துப்பார்த்தேன் ...  அட வெறும்  பாட சிறு குறிப்புகள் ....!!!  உன் அருகில் ....  என் உருவ அளவில் ....  எவர் வந்தாலும் ...  நெஞ்சு படபடக்குது ....!!!  ^^^  என் வீட்டில் -நீ  உன் வீட்டில் - நான்  இன்பமாய் வாழ்கிறோம்  நம் பெற்றோர் ....  திருமணத்

ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!!

ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!!  ------- அழிவை ஏற்படுத்தாமல் ..... அன்பை பெருக்கிட..வருக வருக ....!!! ஆக்ரோயத்தை காட்டாமல் ..... ஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....!!! இழப்புகளை ஏற்படுத்தாமல் .... இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!! ஈனச்செயல் புரியாமல் .... ஈகையை வளர்த்திட ..வருக வருக ....!!! உலகை உலுப்பாமல்.... உள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....!!! ஊனங்களை ஏற்படுத்தாமல் .... ஊர் செழிக்க ..வருக வருக .....!!! எதிரிகளை தோற்றுவிக்காமல் .... எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!!  ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் .... ஏற்றங்களை தந்திட ..வருக வருக .....!!! ஐயத்தை தோற்றுவிக்காமல் ...... ஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....!!! ஒற்றர் வேலைகள் பார்க்காமல் .... ஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....!!! ஓலமிட மக்களை வைக்காமல் ..... ஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....!!! ஔடத்தை பாவிக்காமல் ..... ஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ..... ....வருக வருக ....!!! ^ கவிப்புயல் இனியவன்  யாழ்ப்பாணம்

சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!!

சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! பேச்சுத்தமிழ் கவிதைகள்  ---------------------------------------------- வெத்தலைய வாய்நிறைய போட்டு .... வீராப்பாய் வெறும் வார்த்தைபேசி .... ஒத்தரூபா காசுகூட இல்லாமல் .... சுத்தி திரியிறாயே சித்தப்பு .... இது தப்பெண்னு தெரியல்லையோ .... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! ஊராருக்கு ஞாயம் சொல்லி ... நாட்டாமை என்ற பெற்றெடுக்கும் .... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு ..... உன் வீட்டு ஞாயத்தை எந்த .... நாட்டாமை சொல்லப்போறாறோ ...? சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! வேட்டியை மட்டும் மடிச்சுகட்டி .... வெள்ளத்துரைபோல் நடிப்பு காட்டி .... வேசம் கலைந்தால் வெளுத்துபோகும்.... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! ^^^ மொழிக்கவிதை  கவிப்புயல் இனியவன்  யாழ்ப்பாணம்  மாணவர்களுக்கு உதவும் கவிதை

பேச்சுத்தமிழ் கவிதைகள்

சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! பேச்சுத்தமிழ்   கவிதைகள் ---------------------------------------------- வெத்தலைய வாய்நிறைய போட்டு .... வீராப்பாய் வெறும் வார்த்தைபேசி .... ஒத்தரூபா காசுகூட இல்லாமல் .... சுத்தி திரியிறாயே சித்தப்பு .... இது தப்பெண்னு தெரியல்லையோ .... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! ஊராருக்கு ஞாயம் சொல்லி ... நாட்டாமை என்ற பெற்றெடுக்கும் .... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு ..... உன் வீட்டு ஞாயத்தை எந்த .... நாட்டாமை சொல்லப்போறாறோ ...? சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! வேட்டியை மட்டும் மடிச்சுகட்டி .... வெள்ளத்துரைபோல் நடிப்பு காட்டி .... வேசம் கலைந்தால் வெளுத்துபோகும்.... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! ^^^ மொழிக்கவிதை கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம் மாணவர்களுக்கு உதவும் கவிதை 

அடுக்கிடுக்குத் தொடர்கவிதை

அடுக்கிடுக்குத் தொடர்கவிதை  காதல் கவிதை  --------------------------------------------------- கன்னங்கரிய முடியழகி...... செக்கச் சிவந்த உடலழகி..... சின்னஞ்சிறிய கண்ழகி ..... பென்னம் பெரிய பின்னலழகி ....!!! வெட்டவெளி பாதையிலே .... தன்னந்தனியே வந்தவளே ... நடுநடுங்க வைக்கிறாயே .....  பதைபதைத்து போனானே ,,,,,,!!! பென்னம் பெரிய ஆசையுடன் ..... தன்னந்தனியே தவிக்கிறேன் .... பச்சைப்பசேரென ஒரு பதிலை .... திக்குத்திணற சொல்வாயோ ....? ^^^ மொழிக்கவிதை  கவிப்புயல் இனியவன்  யாழ்ப்பாணம்  மாணவர்களுக்கு உதவும் கவிதை 

அடுக்கு தொடர் கவிதைகள்

புத்தாண்டு கவிதை அடுக்கு தொடர் கவிதை ----------------------------------------- வருக வருக புத்தாண்டே வருக ...... தருக தருக  இன்பவாழ்க்கை தருக...... பொழிக பொழிக  வளம் பொழிக ..... வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!! போ போ பழைய ஆண்டே போ ..... ஓடு ஓடு துன்பங்களோடு ஓடு ..... போதும் போதும் துன்பங்கள் போதும் .... ஐயோ ஐயோ தாங்காது மனம் ஐயோ....!!! அணு அணுவாய் பெற்றோம் இன்பம் ..... வண்ண வண்ண கனவுகள் கண்டோம் .... விடிய விடிய கண் விழித்து உழைத்தோம் .... ஓட ஓட நினைக்க வைத்தது காலம் .......!!! இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே .... அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே... உழைக்க உழைக்க உடல் உறுதியை தா புத்தாண்டே... நினைக்க நினைக்க ஞானத்தை தா புத்தாண்டே.....!!! ^^^ மொழிக்கவிதை கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம் மாணவர்களுக்கு உதவும் கவிதை

இதுவே காதல் தண்டனை ...!!!

உன்னை மன்னித்து விடுவேன்..... என்னை மன்னிக்கவே மாட்டேன்.... காதலுக்காய் அனைத்தையும் ..... இழந்த என்னை மன்னிக்கேன்  ..... இதுவே  காதல் தண்டனை ...!!! + கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 35

உன் நினைவுகளே ஆறுதல்

நீ அமைதியாக இருந்து ... எனக்கு சமாதி கட்டுகிறாய் .... நான் சமாதியாக இருந்தே .... அமைதி குலைகிறேன்..... உன் நினைவுகளே ஆறுதல் .....!!! + கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 34

ஐந்து வரி கவிதைகள் ......!!!

கண்ணீர்த்துளிகள் உனக்கு .... முத்துக்களாய் தெரிகிறது ..... கண்கள் ஆழ்கடலாய் தெரிகிறது .... எதற்காக இதயத்தை பறிக்கிறாய் .... நானே உனக்கு சிறந்த காதலன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 33

வறுமை விவசாயி

வறுமை விவசாயி  ------------------------------ பானை வினைபவன் வீட்டில் .... பானை யுண்டு அரிசியில்லை .... அரிசியை விளைவிப்பவன் வீட்டில் .... பானையுமில்லை அரிசியு மில்லை .... விதைத்து விதைத்து உயிர் காத்தவன் ... விழி பிதுங்கி கிடக்கிறான் மூலையிலே ..... ..........................................உண்பதும் உடுப்பதும் ...வயலிலே .......!!! ..........................................உறங்கி விழிப்பதும்........வயலிலே .......!!! ..........................................குடும்பமே உழைக்குது ...வயலிலே ......!!! ..........................................நஞ்சுடன் வாழ்கிறான் ...வயலிலே .......!!! வறுமை ஒரு கொடுமை ........ கடுமையாய் உழைத்தும் .... கடுகளவேணும் குறையவில்லை ..... கடன் பட்ட விவசாயி வீட்டில் ..... ................................................................கை கால் மறத்துபோக...... ................................................................மெய் உடல் இழைத்து போக ..... ................................................................கண்கள் மறைந்து போக ..... .................................

சொல்லாடல் கவிதைகள்

புரட்சி  ----------- இனி  ஆயிரம் கவிஞர்கள் தோன்றினாலும் ... ஆயிரம் ஆயிரம் கவிதைகள் பிறந்தாலும் .... ஓராயிரம் பாராட்டுகள் கிடைத்தாலும் ..... பல்லாயிரம் ரசிகர்கள் வந்தாலும் ........ ................................................................அத்தனை அத்தனை புகழ் வந்தாலும்.....  ................................................................அஃது ஒன்றும் பயனே இல்லை......  ................................................................உலக விடுதலைக்காய் போராடிய...... ................................................................எழுச்சிமிகு புரட்சி கவிஞர்களின் ...... ................................................................தீப்பொறி பறக்கும் வரிகளுக்கு முன் .... ................................................................நாமெல்லாம் ஒரு தூசி தூசி தூசி ........!!! பிரான்சில் அடிமை புரட்சி ..... இங்கிலாந்தில் கைதொழில் புரட்சி ...... இந்தியாவில் சுதந்திர புரட்சி ...... சோவியத் ரசியாவில் தொழில் புரட்சி .... இலங்கை தீவில் வாழுருமை புரட்சி ........ .................................

நாட்டை காப்போம் எழுந்திரு......

நாட்டை காப்போம் எழுந்திரு...... --------- நாட்டை காப்போம் எழுந்திரு .... ஆளுக்கு ஒரு ஆயுதம் ஏந்தியல்ல.... ஆளுக்கு ஒரு மரம் நட்டு .... நாட்டை காப்போம் எழுந்திரு.........!!! நாட்டை காப்போம் எழுந்திரு...... குண்டுகள் போட்டு அல்ல .... குப்பைகளை தொட்டிக்குள் போட்டு .... நாட்டை காப்போம் எழுந்திரு......!!! நாட்டை காப்போம் எழுந்திரு...... ஆயிரம் மரணங்களை ஏற்படுதியல்ல .... ஆயிரம் ஆறுகளை பராமரித்து .... நாட்டை காப்போம் எழுந்திரு......!!! நாட்டை காப்போம் எழுந்திரு...... கல்லறையில் காவியம் எழுதவல்ல .... கடல் வளத்தை சுரண்டுபவரிடமிருந்து ..... நாட்டை காப்போம் எழுந்திரு......!!! நாட்டை காப்போம் எழுந்திரு...... வல்லரசு ஆதிக்கத்தை காட்டவல்ல .... வல்லரசுகளின் சுரண்டலிலிருந்து ..... நாட்டை காப்போம் எழுந்திரு......!!!

கனி என்றால் க(ன்)னி

கனி என்றால் க(ன்)னி  ------------- கனியென்றால் கன்னி .... முக்கனி மா, வாழை, பலா ..... முக்கனிபோல் இனித்திடு ... பெண்ணே....!!! வாழையடி வாழையாய் ... வாழைபோல் வாழவைக்கும் .... ஆற்றல் கொண்டவள் பெண் ....!!! புறத்தோற்றத்தில் பலாவின் முள் ... அகதோற்றத்தில் பலாவின் சுவை .... தேவையற்றதை தூக்கி எறியும் சக்கை ..... இத் தத்துவத்தை கொண்டவளே பெண் ....!!! சுவைக்க சுவைக்க தெவிட்டாத -மா  சுவைத்தபின் எறியப்பட்ட விதையில் .... இனத்தை பெருக்கும் -மா  பெண்ணே நீ நினைக்க நினைக்க ..... இன்பம் தருபவள் - வருங்கால  சந்ததியை கருவில் சுமப்பவள் ...!!! .....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை... ...............கவி நாட்டியரசர்.................. ........கவிப்புயல் இனியவன்...............  ...............யாழ்ப்பாணம்......................

ஒரு மரம் ஓராயிரம் குழந்தை

ஒரு மரம் ஓராயிரம் குழந்தை ------------- பச்சை பசேரென இருக்கும் போது ..... கண்ணுக்கு குளிர்மை தருகிறது .... குடைபோல் படர்ந்து  இருக்கும் போது..... உயிரளுக்கு நிழல் தருகிறது ...... இத்துப்போகும் சருகு தருகிறது செத்து மடிந்தால் விறகு தருகிறது ....!!! வாழும் போது பயன் தருகிறது .... வாழ்ந்து முடிந்தும் பயன் தருகிறது...... தான் நச்சை எடுத்து (CO2).... உனக்கு உயிர் (O2) தருகிறது .........!!! ஒரு மரம் வெட்டப்படும்போது .... ஒரு மகன் மகள் வெட்டப்படுகிறார்கள் ...... ஒரு மரம் நடப்படும் போது ....... ஓராயிரம் மகன் மகள் பிறக்கிறார்கள் ..... குழந்தை இல்லையே குழந்தை இல்லையே கவலை இல்லையே உலகில் மனிதா ....!!!

உன்னை காப்பாற்றுவேன்

நீ அழகுதான் ... எனக்கு வேண்டாம் .... முடிந்தால் காதல் -தா ....!!! கடித்து துப்பிய நகம் நான் .... சந்தோஷ படாதே .... மீண்டும் வளர்வேன் ....!!! ஏன் தத்தளிக்கிறாய்...? துடுப்பு நான் இருக்கிறேன் ... உன்னை காப்பாற்றுவேன் ...!!! ^ கவி நாட்டியரசர் கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம் தொடர் பதிவு கஸல் - 927

நான் உனக்காக இறக்கிறேன்

நீ எனக்காகவே பிறந்தவள் .... நான் உனக்காக இறக்கிறேன் ....!!! உலகம் ஒரு வட்டம் .... நீ பிரிந்து சென்றாலும் ... என்னிடம் வருவாய் ....!!! எத்தனை காலம் கடிகாரம் முள் போல் ... சுழண்டு கொண்டே... இருப்பது ....!!! ^ கவி நாட்டியரசர் கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம் தொடர் பதிவு கஸல் - 926

நீயும் நானும் நிச்சயம் சேர்வோம் ....!!!

நினைத்துக்கொண்டே .... இருக்க இனிக்கும் காதல் ... உன்னை நினைத்ததும் .... கண்ணீரும் இனிக்கிறது ....!!! நிலாவில் பேசுவது .... காதலுக்கு அழகு ... எதற்காக நண்பகலில் .... பேச ஆசைப்படுகிறாய் ....? வானமும் பூமியும் .... என்று இணைகிறதோ ... அன்று நீயும் நானும் ... நிச்சயம் சேர்வோம் ....!!! ^  கவி நாட்டியரசர்  கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்  தொடர் பதிவு கஸல் - 925

அடுத்த நொடியில் இறந்து விடுகிறான்

விஷத்தை அருந்தியவன் அடுத்த நொடியில் இறந்து விடுகிறான் ...!!! காதலில் தோற்றவன் .... உயிரோடு இருந்தும் ... இறந்தவன் தான் ....!!! காதலில் வென்றவன் ... கொஞ்சம் கொஞ்சமாய் ... செத்துகொண்டிருப்பவன் ...!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

தரையில் விழுந்த மீனும்

உன்னை நினைத்து  சுட்டுக்கொண்ட காயங்கள்  நீ என்னிடம் விட்டுச்சென்ற  நினைவுகள் ஏற்படுத்திய காயங்களின் வலியே அதிகம்…!!! தரையில் விழுந்த மீனும்  தண்ணீரில் தாழ்ந்த மானும் துடிக்கும் துடிப்பை உணர்ந்து  கொள்கிறது உன்னை தவறவிட்ட என் இதயம்….!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

நீ தோற்றது இன்னொருவனுக்கு

உலகில்...... வென்றவர்கள் ... பட்டியலை விட ... தோற்றவர்கள் .... தோற்று கொண்டிருப்பவர்கள் ... பட்டியலே அதிகம் ....!!! தோல்வி என்பது ... வெற்றியின் கருவறை ..... உரு பெற்றவுடன் தான் ... பிறப்பு வருவதுபோல் .... தோல்விகள் நிறைந்ததே .... வெற்றி ....!!! ஒன்றை நினைவில் வை ... நீ தோற்றது - இன்னொருவனுக்கு .... அனுபவம் ..... அவனுக்கு வெற்றியின் வெளிச்சம் ...!!! ^ முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்புயல் இனியவன்

தீக்குச்சியின் கெதிதான் ....!!!

தலை முழுக்க நச்சு ..... நல்ல சிந்தனையே இல்லை .... கெட்டவருடன் ஒன்று சேர்ந்து .... சாம்பலாகிறது .... தீக்குச்சி .....!!! மனிதா சிந்தனையை .... சீராக்கு - நல்லவர்களுடன் ... ஒன்று சேர் .... இல்லையேல் உன் கெதியும்  ... தீக்குச்சியின் கெதிதான் ....!!! தீக்குச்சி தானாக எரிவதில்லை.... இன்னொரு கெட்டதுடன்.... சேர்ந்தே எரிகிறது .... ஒருவன் கெடுவது தற்செயல் .... கெட்டவனோடு சேர்வது .... அதர்மம் ......!!! ^ முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்புயல் இனியவன்

முயன்றால் முடியாதென்றொன்றில்லை

இறக்கபோகிறேன் ... என்று தெரிந்துகொண்டு.... தீக்குச்சி எரிகிறது .... தீக்குச்சிக்கு அது இறப்பல்ல .... தீக்குச்சியின் வாழ்க்கை....!!! இறப்பு பெரிதல்ல .... எப்படி வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம் ....!!! தான் மட்டும்  எரிந்து .... சாம்பலாகவில்லை ... இன்னொன்றுக்கு ... வாழ்க்கையும் ...... கொடுத்துவிட்டு ....... சங்கமமாகிறது தீக்குச்சி ....!!! ^ முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்புயல் இனியவன்

நீ கவலை படாதே

நீ கவலை படாதே .... எனக்கு கவலை வாழ்கை .... உனக்கும் சேர்த்து கவலைப்படுகிறேன்.... இன்பத்துக்கு மட்டுமல்ல ....!!! நம் இருவரின் காதல் .... முகத்தால் வந்திருந்தால்.... முகத்தை சுழித்துவிட்டு .... போயிருப்பேன் -அகத்தால்.... வந்து தொலைந்து .... விட்டதே ....!!! & .............காதல் சோக கவிதை................. ..............கவி நாட்டியரசர்.................. .........கவிப்புயல் இனியவன்............... ...............யாழ்ப்பாணம்......................

என்னவளின் காதல் டயறியிலிருந்து-13

என்னவளின் காதல் டயறியிலிருந்து-13 உனக்கும் எனக்கும் ... திருமணம் நடக்காமல் .... விடுவதற்கு வாய்ப்புக்கள் .... அதிகரித்து கொண்டே... செல்கிறது .....!!! உன் அருகில் வரும் ... வாய்ப்பும் நழுவுகிறது .... உன் பெயருக்கு அருகில் ... வாய்ப்பும் நழுவுகிறது .... ஆசையை நிறைவேற்றுகிறேன் ... டயறியில் என் பெயருக்கு ... அருகில் உன் முதலெழுத்து....  போடுகிறேன் ....!!! & ....என்னவளின் காதல் டயறியிலிருந்து.... ..............கவி நாட்டியரசர்.................. ........கவிப்புயல் இனியவன்............... ...............யாழ்ப்பாணம்......................

பஞ்சாமிர்தம் - 03

குரு குலத்தில் பிறந்தவர்... மாமிசத்தை துறந்தவர் .... வரைகிறார் மீன் படம் .... தொழிலே தெய்வம் ....!!! ^ சின்ன எல்லை சண்டை ... இருவீட்டார் கடும் சண்டை .... இருவீட்டு நாய்களும் .... தெருவில் கொஞ்சி .... விளையாட்டு ....! மனிதனுக்கு ஆறு அறிவாம் ...!!! ^ ஊர் முழுக்க திருமணம் .... செய்து வைக்கிறார் .... தன் மகளுக்கு இன்னும் ... வரன் தேடுகிறார் ....! வரதச்சனை கொடுமை ....!!! & .....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை... ...............கவி நாட்டியரசர்.................. ........கவிப்புயல் இனியவன்............... ...............யாழ்ப்பாணம்......................

உயிர் பெறுகின்றன

நீ  வாங்கும் ஒவ்வொரு .... பொருட்களும் .... நீ வாங்கியவுடன் ... உயிர் பெறுகிறது .... உன் கையை முத்தமிடவே .... உயிர் பெறுகின்றன் ....!!! நீ  பாவித்து தூக்கியெறிந்த .... பொருளொன்று என்னிடம் ... முறையிட்டுகொண்டிருகிறது ...!!! ^ ........என்னவளே என் கவிதை......... .............கவி நாட்டியரசர் ................... .......கவிப்புயல் இனியவன்.............  .............யாழ்ப்பாணம்.....................

பொம்மையை கண்டவுடன்

பொம்மையை கண்டவுடன் .... நிலத்தில் விழுந்து அழுதேன் ... உடனே கிடைத்தது ....!!! உயிருள்ள பொம்மை .... உன்னை கண்டவுடன் .... அடம் பிடித்து அழுகிறது ... இதயம் உன்னோடு .... பேசும் படி .....!!! & ........என்னவளே என் கவிதை......... .............கவி நாடியரசர் ................... .......கவிப்புயல் இனியவன்............. .............யாழ்ப்பாணம்.....................

உன்னை படைத்தான் இறைவன் ...?

உன்வரவுக்காக ..... காத்திருக்கும் .... நொடியில் கூட உன்னை ... பற்றிய கவிதைகள் .... வரைந்துகொண்டே ... இருக்கிறேன் ....!!! நீ  பேசும் காலம் வரும் வரை .... கவிதையில் ஒரு அகராதி .... எழுதிவிடுவேன் ..... என்னை படைப்பளியாக்கவா ...? உன்னை படைத்தான் இறைவன் ...? & ........என்னவளே என் கவிதை......... .............கவி நாடியரசர் ................... .......கவிப்புயல் இனியவன்............. .............யாழ்ப்பாணம்.....................

கவி நாட்டியரசர்

படம்

பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை

எப்போது தோற்பவன் .... நகைசுவை நடிகன் ... எப்போதும் வெல்பவன் ... கதா நாயகன் .... வென்று தோற்பவன் ... வில்லன் .... வாழ்கையும் இதுதான் ...!!! ^^^ மிருக வதை சட்டத்தை .... கடுமையாக எதிர்த்தார் ... எங்க தலைவர் .... வெள்ளை குதிரைமேல் ... வீர வாள் ஏந்தியபடி ....!!! ^^^ எல்லோரையும் சிரிக்கவைக்கும் .... அவருக்கு சிரிக்க அனுமதியில்லை ... சிரித்தால் தொழில் பறிக்கப்படும் ... நகைசுவை நடிகன் ....!!! ^^^ & .....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை... ...............கவி நாட்டியரசர்.................. ........கவிப்புயல் இனியவன்...............  ...............யாழ்ப்பாணம்......................