இடுகைகள்

ஆகஸ்ட் 14, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனிய வரவேற்பு கவிதைகள்

ஒ ளி கொண்ட இதயங்களே ..... ஒ ன்றுபட்டு வாழ்வோம் வாருங்கள் .... ஒ ற்றுமைதான் உலகத்தின் தேவை .... ஒ ன்றே குலம் ஒருவனே தேவன் ......!!! ஒ டுக்கு முறைகள் நிலைப்பதில்லை ..... ஒ ன்று கூடியே துடைத்தெறிந்தோம் ..... ஒ ற்றர் கூட்டம் ஒற்றுமையை கெடுக்கும் .... ஒ ரு அணியில் வாழ்வோம் வாரீர் .....!!! ஒ ழுக்கமாக வாழ்ந்தால் உலகை ..... ஒ ரு குடையின் கீழ் கொண்டு வரலாம் ..... ஒ ற்றுமையின்றியும் ஒழுகமின்றியும் வாழ்ந்தால் .... ஒ ற்றர்களின் நோக்கமே நிறைவேறும் .....!!! ஒ ளிவட்டம் போல் இதயத்தை மாற்று ..... ஒ ளிவு மறைவின்றி பேசிப்பழகு ..... ஒ ளி கொண்ட அறிவை பெருக்கிடு ..... ஒ டுக்கு முறைக்கு ஒடுக்கு முறைசெய்....!!!