ஒரு சாதனையாளனை வீணாக்காதீர்
சமுதாயத்தில் வலு இழந்தோருக்கு சமூக கண்ணோட்டத்துடன் பார் சமூக பொறுப்பு நம்முடையது சமூகத்தின் கூட்டு வாழ்க்கையில் சரி சமனாய் வாழ்வது நம் கடமை ...!!! இரங்கி கேட்பவர்களுக்கு -நீ இரக்கத்துடன் பிச்சை போடாதே யாருக்கு யார் பிச்சை போடுவது ..? எல்லோரும் ஒருவகையில் பிச்சை காரரே ....!!! அனாதை இல்லத்தில் வாழும் குழந்தைக்கு தாய் அன்பு பிச்சையே முதியோர் இல்லத்தில் வாழும் பெற்றோருக்கு பிள்ளை அன்பும் பிச்சையே உயிர் நட்பு பிரிந்தால் -நட்பும் ஒருவகையில் பிச்சையே ...!!! கண் இழந்தோர் .கால் இழந்தோர் பிற அங்கவீனர் கூட உழைத்து வாழும் இவ் உலகில் -நல்ல உடழுளைப்பும் திடகார்த்தமான வலுவும் உள்ள நீ பிச்சை எடுக்கிறாய் .....!!! நீ பிச்சை எடுக்க தகுதியானவன் பொருளாதார பிச்சை -அல்ல தன்னம்பிக்கை பிச்சை -நிமிர்ந்து நில் துணிந்து செல் - உடம்பை வருத்து நீயும் ஒரு சாதனையாளனே இரங்கி கேட்டவுடன் பிச்சை போடாதீர் ஒரு சாதனையாளனை வீணாக்காதீர்