இடுகைகள்

ஆகஸ்ட் 30, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலுக்கு நீ சொல்லும் விதி...?

என்னை காதலித்தது உன் தலைவிதி என்கிறாய் காதலுக்கு நீ சொல்லும் விதி...? உன்னில் காதல் தெரியும் என்று இருக்கிதேன் -என்னை ஏமாற்றி விட்டாய் ...!!! வானத்தில் அசைந்த முகில் -நீ அசைந்துகொண்டே இரு வானம் அப்போதான் தெரியும் கஸல் 425

தூண்டில் போட்டு பிடிக்கபோகிறாயா...?

காதலின் அதி உச்ச பரிசு நீ தந்திருக்கிறாய் ...!!! மறக்க முடியாத வலி ...!!! வண்டுக்கு பூபேல் ஆசை பூவுக்கு வண்டுமேல் ஆசை - உனக்கு என் மீது எப்போதும் இருந்ததில்லை காதல் ...!!! ஆகாயத்தில் நான் விண்மீன் - நீ தூண்டில் போட்டு பிடிக்கபோகிறாயா...? கஸல் ;424

காதலிப்பதாக இல்லை ...!!!

என் நினைவுதான் உனக்கும் வாழ்க்கை என்றே சொல்வாய் -இப்போ காதலை வெறுக்கிறாய் ...!!! உனக்கு தெரியாது உன்னைவிட காதலை நேசித்தேன் - நீ என்னை கூட காதலிப்பதாக இல்லை ...!!! நிலவில் காதல் கதை கூறுவாய் என்றிருந்தேன் உச்சி வெயில்லில் காதல் கதை சொல்கிறாய் ...!!! கஸல் ; 423

காதலுக்கு உன் கண்

எல்லா பூக்களும் பூத்து குலுங்கும் போது -நீ மொட்டாய் இருக்கிறாய் ...!!! காதலுக்கு உன் கண் நீராக இருக்கும் என்றிருந்தேன் -நீயோ மரமாக வளர்ந்தே விட்டாய் ...!!! பூவின் மேல் பனித்துளி இருந்தால் பூவுக்கு இன்பம் கல் துண்டிருந்தால் ....? கஸல் 422

காதல் கடிதத்தை

இறந்தால் தான் சமாதியா ...? உன் நினைவுகள் என்னை கொல்கிறது...!!! காதல் கேட்டால் கிடைக்கும் கடைப்பொருள் இல்லை நீ கேட்டால் தருகிறாய் ...!!! காதல் கடிதத்தை வர்ணங்களால் எழுதுகிறேன் -நீ கறுத்த மையால் எழுதுகிறாய் ....!!! கஸல் ;421