இடுகைகள்

ஜனவரி 23, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நங்கூரமடி

காதல் கடலடி காதலர் கப்பலடி சந்தேகம் நங்கூரமடி

மூன்று வரி கவிதை -ஏன் தண்டித்தாய் ...!!!

இறுதியாக சிரித்தேன் உன்னோடு சிரிப்பே சிறையாகி விட்டது மனதோடு அறுதியாக ஏன் தண்டித்தாய் ...!!!

மலரும் காதல் பூ

உன்னோடு என் காதல் முடிந்தால் என் மூச்சோடு முடியும் காதல் மண்ணோடு மலரும் காதல் பூ

காதல் செய் காதலே கடவுள் -05

காலால் உதைத்தார் .இறைவன்  அருளினார் என்கிறது புராணம் .காதலில் இருப்பவனுக்கு எப்படியும் திருமேனி பட்டால் அதுவும் இன்பம் தான் ....!!! "வந்தால் உதைப்பேன் " "என்று நீ சொல்லும் செல்லமான " "சொல் கூட இன்பம் தான் " "அப்படியென்றாலும் உன் மேனி " " என்னில் படட்டுமே " தொடரும்

காதல் செய் காதலே கடவுள் -04

இறைவனை உணர வேண்டும் தவத்தில் இருப்பவனுக்கு ஏக்கம் . காதலியை காண வேண்டும்  என்று காதலனின் ஏக்கம் . "உன்னை பார்க்காமல் இருக்கும் " "ஒவ்வொரு நொடியும் என் பார்வை " " மங்கிக்கொண்டு போகிறது " "என் விழித்திரை நீ " தொடரும்

காதல் செய் காதலே கடவுள் -03

அன்பு கொண்ட ஒரு செயல் நடைபெறப்போகிறது  வரப்போகிறது என்றால் தூக்கமே வருவதில்லை  அந்த நேரத்தில் ஒரு மனம் படும் பாடு அப்பாப்பா  சொல்லவே முடியாது ....!!! " நீ வருகிறாய் என்றவுடன் " " எனக்கு அருள் தரப்போகிறாய் " " என் இதயம் " '' உனக்கும் சேர்த்து துடிக்கிறது " ''என் இதயம் " "எதற்கும் ஒரு அளவு உண்டு அன்பே " தனி கவிதை தொடரும்

காதல் செய் காதலே கடவுள் ..02

காதலில் இருக்கும் இதயங்களின் செயற்பாட்டுக்கு  நிகர் ஏதுமில்லை அந்த இதயம் துடிக்கும் செயலுக்கு   வார்த்தையால் கூறி விடமுடியாது ....!!! " நீ தலை குனிந்து செல்லும் போது " " என் தலையே வெடித்து சிதறுகிறது " " நம்பிக்கையுடன் காத்திருக்கிறது " " என் இதயம் ஒரு சொல்லுக்காக " தொடரும்

காதல் செய் ..காதலே கடவுள் ....!!!!!

இந்த உலகில் எல்லோரும் உன்னையும் .நீ எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்றால் ஒரே   வழி அனைத்தையும் காதல் செய் .காதல் இரு வேறுபட்ட பாலாருக்குரிய கவர்ச்சி செயல் அல்ல . அது ஒரு பிரம்மம் . ஆம் காதலே கடவுள் ....!!!!! " மனத்தால் உனக்கு அபிசேகம்   செய்கிறேன் - என் இதயத்தில்   தெய்வமாக நீ இருப்பதால் " இந்த கவிதை ஒவ்வொருவரின் பார்வையை பொறுத்து அர்த்தம் வேறுபாடும் ...!!! தொடரும்....... தொடரும்

குற்றுவது நீ

உன்  காதல் முள்ளாக நான் இருப்பேன் குற்றுவது நீ இரத்தம் வடிக்க நான் தயார் ...!!!

என் இதய நரம்புகள்

என் இதயத்தில் நீ போட்ட அழகு  கோலம் தான் என் இதய நரம்புகள்  அழித்து விடாதே இறந்து விடுவேன்

மீனாய் தவிக்கிறேன்

தூண்டில் கண்ணால் தூண்டில் போடுகிறாய் துடித்து போகும் மீனாய் தவிக்கிறேன் பாவம் காதல் மண்புழுவாய் இறக்கிறது

மூன்று வரி கவிதை -மூன்றெழுத்து

மூச்சு மூன்றெழுத்து   காதல் மூன்று எழுத்து   முடிவும் மூன்றெழுத்து   - மூன்றும் சேர்ந்த அன்பே - நீயும் மூன்றெழுத்து