இடுகைகள்

அக்டோபர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் காதல் மீது - நீ

உன் வெட்கம் என்னை .... தலை குனிய வைக்கிறது .... உன் பார்வை என்னை .... மனிதனாக்கியது....!!! என் காதல் மீது - நீ ... ஏறிநின்று குதிக்க ஆசைப்படுவதேன் ...? காதலில் .... வலி -ராகம் .. கண்ணீர் - மது .... பிரிவு - வாழ்கை ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 880

அணைந்து விடாதே ....!!!

எட்ட முடியாத காதலர் நாம் ..... சூரியனும் சந்திரனாய் ... வானமும் நிலமுமாய் ...!!! காதலை விதைத்தேன் ... வதையாகும்  உணர்ந்தேன் ... காதல் ஆழ்கடல் -நீ துறைமுகம் ....!!! நான் வெறும் நெருப்பு ... நீயே வெப்பம் ... நீயே ஒளி.... நீயே கரி .... நீ தணல் ..... அணைந்து விடாதே ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 879

பனி மழையாக தூவி

படம்
7000ம்   பதிவுகள் தொட்ட கவிப்புயல் இனியவன் ஐயா அழகிய கவிதைகளை  பனி மழையாக தூவி சேனையெங்கும் பரவச்செய்த கவிப்புயலே உமது பணி இனிதே தொடர உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்கள் காதல் கவிதைக்கு நான்தான் முதல் ரசிகன் உங்கள் தாய்ப்பாசத்தைப் பார்த்தப்போ கண்ணாடியில் என்னைப் பார்த்தேன் தந்தையையும் நேசிக்கும் உங்களுக்கு குழந்தைச்செல்வங்கள் பெருகி என்றும் உங்களை மதிக்க கவனிக்க பெயர் சொல்ல ஊரார் பாராட்ட கலந்து மகிழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் தொண்டு உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்        நன்றியுடன் நண்பன்        

விதி மதி இரண்டும் இழப்பாய் ....

வானவில்லில் ஏழுநிறம் .... வானத்து அழகியே உனக்கும் ... வானவில் குணமோ ....? வா என்கிறாய்  போ என்கிறாய் ....? விட்டில் பூச்சியை .... விளக்கம் காட்டினேன் .... விதி எனக்கும் சரியானது .... விதி மதி இரண்டும் இழப்பாய் .... காதலித்துப்பார் ....!!! வீறாப்புடன் .... வீட்டை எதிர்த்து காதல் செய்தேன் .... வீதியில் நிற்கிறேன் உன்னை இழந்து ... காதல் கண்னை மறைக்கும் ... உறவையும் மறக்கும் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 878

காதலித்து பாருங்கள் புரியும் ...!!!

கண்ணில் பட்டு கதலானாய் .... கல்லறைவரை தொடருமென்றாய்.... கண்மூடி தனமாய் நம்பினேன் ... கண்ணீர்தான் இறுதி பரிசு ....!!! கிட்டவா காதல் பரிசு தா .... கிள்ளி விட்டு போனபோது .... கிள்ளியது என் இதயம் என்பதை .... கிட்டிய காலத்தில் நீ திட்டியபோது .... கிறுக்கணுக்கு  புரிந்தது ....!!! காத்திருந்தேன் கவிதை வந்தது .... காணாமல் போனாய் கவிதை வந்தது .... காதல் பைத்தியம் என்றார்கள் .... காதலித்து பாருங்கள் புரியும் ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 877

ஆருயிரே என்றாய் ....

இறந்த காலம் தான் .... இனிமையான காலம் .... இனிமையாய் நீ பேசி .... இளமையை ரசித்தேன் .... இப்போ தனிமையில் ....!!! உனக்காய் வாழ்வேன் ... உறுதியாய் கூறினாய் .... உயிரை மறந்து வாழ்ந்தேன் ..... உயிர் வலிக்கிறது இப்போ ....!!! அன்பே என்றாய் .... அனைத்தையும் இழந்தேன் .... ஆருயிரே என்றாய் .... ஆவியாய் அலைகிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 876

நண்பன் -வாழ்த்தியது

படம்
7000ம்   பதிவுகள் தொட்ட கவிப்புயல் இனியவன் ஐயா அழகிய கவிதைகளை  பனி மழையாக தூவி சேனையெங்கும் பரவச்செய்த கவிப்புயலே உமது பணி இனிதே தொடர உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்கள் காதல் கவிதைக்கு நான்தான் முதல் ரசிகன் உங்கள் தாய்ப்பாசத்தைப் பார்த்தப்போ கண்ணாடியில் என்னைப் பார்த்தேன் தந்தையையும் நேசிக்கும் உங்களுக்கு குழந்தைச்செல்வங்கள் பெருகி என்றும் உங்களை மதிக்க கவனிக்க பெயர் சொல்ல ஊரார் பாராட்ட கலந்து மகிழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் தொண்டு உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்        நன்றியுடன் நண்பன்        

7000 பதிவுகள் கடந்த கவிப்புயலை வாழ்த்துவோம்

படம்
 by  நேசமுடன் ஹாசிம்  Today at 11:35 + கவிதைக் களஞ்சியமாய்  தொட்டதெல்லாம் கவிதையாக்கி  உலகவலம் கவிதைகளால் உருவாக்கி தமிழுக்கு ஆற்றும் தொண்டினை  பதிவுகளாக்கி சேனையில் கடந்துவிட்டீர்கள் 7000 உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்  தொடருங்கள் என்றும் சேனை உலாவுடன்  எனது நன்றிகளும் வாழ்த்துகளும் உங்கள் வழியில்  நன்மை செய் பலனை எதிர்பாராதே  இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை (S M S )

இதயத்தில் இருந்து வெளியேறாதே.... என்னைவிட உன்னை யாரும் .... இந்தளவுக்கு காதல் செய்ய மாட்டார்கள் ...!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை (S M S )

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

நீ நடந்து வரும் பாதையை ... காத்திருந்தே என் கண்கள் .... காய்ந்து போகிறது....!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை (S M S )

கண்ணீரால் சமன் செய்வேன் ....!!!

உன்னை நினைக்கும் போதெல்லாம் .... பன்னீராய் மணக்கும்  நினைவுகள் .... உன் பிரிவை நினைக்கும் போது .... வெந்நீராய் கொதிக்கிறது ..... கண்ணீரால் சமன் செய்வேன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக் கவிஞன் ஐந்து வரி கவிதைகள் ......!!!

என் காதல் எப்படி அழகில்லை ...?

என் கவிதை அழகுஎன்றாய் .... என் குரல் இனிமை என்றாய் .... என் கண் அழகு என்றாய்.... என் நடை அழகு என்றாய் .... என் காதல் எப்படி அழகில்லை ...? + கவிப்புயல் இனியவன் ஈழக் கவிஞன் ஐந்து வரி கவிதைகள் ......!!!

உனக்காகவே இறக்க இருக்கும் உயிர் ....!!!

உனக்காக துடித்த இதயம் .... உன்னையே பார்த்த கண்கள் .... உனக்காகவே நடந்த கால்கள் .... உனக்காகவே பேசிய வார்த்தைகள் .... உனக்காகவே இறக்க இருக்கும் உயிர் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக் கவிஞன் ஐந்து வரி கவிதைகள் ......!!!

கே இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!!

நீயும் நானும் பிரிந்துவிட்டோம் .... எமக்காக ஊரே கண்ணீர் விடுகிறது .... பெற்றோர்பன்னீர் தெளிக்கிறார்கள் ..... இரண்டு இதயங்களை சேர்த்துவைக்க ... விரும்பிய இதயத்தை சேர்த்துவையுங்கள் .....!!! + கே இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!!

உன்னை தேடும் இதயத்தில் வலி ....!!!

கண் சிமிட்டும் தூரத்தில் அம்மா..... கை பிடித்தபடி அருகில் தங்கை...... குழுமியிருக்கும் ஆயிரம் உறவுகள்..... ஆனாலும் இதயம் முழுதும் வலி..... உன்னை தேடும் இதயத்தில் வலி ....!!! ஆயிரம் நண்பர்கள் இணையத்தில்...... ஆயிரம் மின் அரட்டை நொடியில்...... ஓசை கேட்காத பல நூறு குரல்கள்...... பார்க்க முடியாத பல நூறு சினேகங்கள்...... இருந்தும் எதையும் மனம் விரும்பவில்லை ... உன்னிடம் வரும் ஒரு வார்த்தைக்காய் .... உன்னையே தேடும் இதயத்தில் வலி ....!!! அழ வேண்டும் என்று இனம் புரியா ஆவல்..... முடியாமல் தவிக்கிறேன் விரும்பாதா.... திருமண நிச்சயத்தை தவிக்கிறேன் உயிரே .... யாருக்கு புரியும் என் "காதல் வலி '' ...... இதயத்தை இழந்தவர்களை தவிர ...??? + கே இனியவன் காதல் சோக கவிதை

உனக்காக என் உயிர்

அழுகை பிடிக்கும் எனக்கு ... வேதனைகள் நீ தந்ததால்....!!! வலிகள் பிடிக்கும் எனக்கு காயங்கள் உன்னால் வந்ததால் ....!!! தோற்க பிடிக்கும் எனக்கு வெற்றிகள் உன்னை சேரும் என்றால் ....!!! எதையும் இழக்க பிடிக்கும் எனக்கு நான் உன்னோடு வாழ்வதென்றால் ....!!! இதென்ன... மரணம் கூட பிடிக்கும் எனக்கு உனக்காக என் உயிர் பிரிவதென்றால்..!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

பட்டமரம் தழைப்பதில்லை ....

மரத்தடியில் இருந்து பேசிய .... வார்த்தைகள் -இலை உதிர் காலம் .... வந்ததுபோல் உதிர்ந்தே போனதே ....!!! மரநிழலில்...... நிற்கும்போது நீ எனக்கு ..... கூறும் ஆறுதல் வார்த்தைகள்..... நினைவு வருகிறது ....!!! பட்டமரம் தழைப்பதில்லை  .... கெட்ட மனம் நேசிப்பதில்லை .... பட்டமரம் விறகாகும் .... கெட்ட மனம் விரக்தியாகும் ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

யாரையுமே நேசிக்காது ...♥

உண்மையான அன்பை எவ்வளவு வேண்டுமானாலும் காயப் படுத்து ...!! அது உன்னை மறுபடியும் நேசிக்கும் ...♥ ஏமாற்றி விடாதே .. ♥ அது மறுபடியும் யாரையுமே நேசிக்காது ...♥ + கே இனியவன் காதல் சோக கவிதை

தாயே உனக்கு முன்

தாயே.... உனக்கு முன் ....... நான் இறந்தால் ..... என் கல்லறையில்...... உன் பெயரை எழுதி வை கல்லறையில் இருந்து ..... உன்னை நினைப்பதற்கு அல்ல மீண்டும் உனக்கே மகனாய் .... பிறப்பதற்காக .....!!! + கவிப்புயல் இனியவன் குடும்ப கவிதைகள் (அம்மா கவிதை )

எப்படி சென்றாய் ...?

கண்ணில் விழுந்து இதயத்திற்கு வந்தாய் .... இதயத்தில் இருந்து.... எப்படி சென்றாய் ...? நான் இறப்பதற்கு முன் .... உன் காதலை தந்துவிடு .... இல்லையேல் இறந்தபின்னும் .... உன் நினைவில் வாழுவேன் .... வேண்டாம் உயிரே .... உயிரோடு படும் வேதனையை .... உனக்கு தர மாட்டேன் ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

காதலுக்கு தெரியும் ....

தாய்க்கு தெரியும் .... குழந்தையை பெற்றெடுத்த வலி ....!! தந்தைக்கு புரியும் .... குழந்தையை தோளில் சுமந்த வலி ....!! நண்பனுக்கு தெரியும் .... பள்ளி பருவம் முடிந்த கால வலி ....!! உனக்கு தெரியும் .... உன் காதலை நான் சுமக்கும் வலி .....!! காதலுக்கு தெரியும் .... உன்னால் நான் படும் வலி ......!! மற்றவை எல்லாவற்றிலும் வலி மட்டுமே இருக்கும் ..... காதலில் வலியுடன் தளும்பும் இருக்கும் ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

நிலவே பகலில் வரமாட்டாயா

நிலவே நீ பகலில் ... வரமாட்டாயா ...? பகலில் அவளை நீ அருகில் வைத்திருகிறாயே.... எனக்கென்ன வேலை ....? உன்னுடன் பகலில் ...? சக்களத்தி சண்டையை .... மூட்டிவிடவா என்னை ... பகலில் வரசொல்கிறாய் ...? + கே இனியவன் குறுங்கவிதை

நீ எழுதும் கடிதம் ...

நீ எழுதும் கடிதம் ... பேனாவால் எழுதுவதாக .. தெரியவில்லை -வலிக்குது ...! முள்ளால் தான் எழுதுகிறாய் ...!!! இதயம் .... மென்மையானது .. எத்தனை முறைதான் .... உன் வலிகளை தாங்கும் ..? + கே இனியவன் குறுங்கவிதை

கே இனியவன் குறுங்கவிதை

உணர்ந்துகொள் .. பிரிவது ஒரு நொடி .... அணுவணுவாக ... இறக்கபோகிறாய் .. பல்லாயிரம் நொடி ....!!! + கே இனியவன் குறுங்கவிதை 

கே இனியவன் குடும்ப கவிதை

என் அப்பாவே ..! சிறுவயதில் நடைபழக்கிய தந்தையே .. நடை பழகினேன் .... மிக விரைவாய் ஓடினேன் .... காலம் அதிவேகத்தில் .... என்னையும் அப்பாவாக்கியது ....!!! என் குழந்தைக்கும் நடை பழக்கினீர் .... விடைகொடுத்தது உங்கள் நடைக்கு .... முதுமை என்னும் காலம் ....!!! இப்போ உங்களுக்கு ஊர் சுற்றி .... காட்டும் பாக்கியத்தை பெற்றேன் .... மெதுவாக.. மெதுவாக... மெதுவாக ... உங்களுடன் நானும் நடை பழகுகிறேன் .... முதுமையின் நடையிலும் ஒரு அழகு .... இருக்கத்தான் செய்கிறது .....!!! + கே இனியவன் குடும்ப கவிதை

உலகம் அழிய வாய்பேயில்லை ....!!!

இதயம்  .... இறக்க நேர்ந்தாலும்... அதில் இறவா வரம்பெற்றது.... உன் நினைவுகள் மட்டும்தான்... கண்மணியே...!!! உலகம் ஒருநாள் .... அழியும் என்கிறார்கள் ... எனக்கு நம்பிக்கைஇல்லை .... காதல் இருக்குவரை உலகம் .... அழிய வாய்பேயில்லை ....!!! + கே இனியவன் காதல் கவிதைகள்

உதறி விட்டு சென்றுவிட்டாள்...!!!

அலைகளை பார்த்தேன் ... காதலின் தத்துவம் வந்தது .... காதலில் விழுவது பெரிதல்ல ... விழுந்தால் உடனே எழவும் ... கற்று தந்தது ....!!! அவள் உதறிவிட்டு சென்றாள்.... என்று சொல்லமாட்டேன் .... காதலை தந்துவிட்டு -கையை உதறி விட்டு சென்றுவிட்டாள்...!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

பறிக்க முடியாத பரிசு ....!!!

பிரிவு நமக்கு தவிர்க்கவும் .... மறக்கவும்  முடியாத வலி… நினைவு என்பது யாராலும் என்னிடமிருந்து உன்னால் .... பறிக்க முடியாத பரிசு ....!!! நீ .... எனக்காக மூச்சு விடும்போது .... நான் ..... உனக்காக இறப்பதில் .... என்ன தப்பு ...? + கே இனியவன் காதல் கவிதைகள்

காலத்தாலும் மறக்க முடியாது ....!!!

உன்  உள்ளம் நேசிப்பதை மறந்து விடலாம் ஆனால் உன்னை நேசித்த உள்ளத்தை மட்டும் உன்னால் மறக்க முடியாது ....!!! நீ  பேசிய வார்த்தைகளை -நீ  மறந்துவிடலாம் .... நாம் வாழ்ந்த காதலை .... காலத்தாலும் மறக்க முடியாது ....!!! + கே இனியவன்  காதல் கவிதைகள்

காதல் தத்துவ கவிதை

ஞாபக  சக்தி குறைவானவர்கள் .... காதலில் பொய்சொல்ல .... முயற்சிக்க கூட்டாது .... அதுவே சந்தேகமாக .... உருப்பெற்று விடும் ....!!! பெற்றோர் காதலித்து .... திருமணம் செய்தாலும் ... பிள்ளைகளின் காதலுக்கு .... தடையாகவே இருப்பார்கள்  இல்லையேல் விருப்பம் .... இன்றி ஏற்கிறார்கள் ....!!! காதலின் பின்னால் ஓடாதீர் .... காதல் இல்லாமலும் வாழாதீர் .... காதல் பேச்சை கூட்டி .... மூச்சை நிறுத்தும் ,,,,,!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞர்  காதல் தத்துவ கவிதை 

காதலிக்கதெரியாத உள்ளம்

காதல் மலர் போல் .... காலையில் அழகாய் .... மாலையில் வாடிவிடும் .... என்றாலும் காதல் ... அழகும் மென்மையும் ....!!! மரணத்தில் கூட நாம் இணைய முடியாது நீ உள்ளூர் மயானத்தில் ... நான் வெளியூர் மயானத்தில் ....!!! உன்னைப்போல் காதலிக்க ... தெரியாத உள்ளமும் ஒரு .... அங்கவீனம் தான் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 875

நம் பிரிவு

ஓராயிரம்... நினைவுகளுடன் .... ஆழமான  துயரத்துடன்... நிகழ்ந்து விட்டது ... நம் பிரிவு......!!! நீ என்னை மறந்து போய் நினைத்திருக்கலாம் இப்போதான் உனக்கு ... காதல் புரிந்திருக்கும் ....!!! ஒப்பாரி என்றால் என்ன ...? இப்போது புரிந்தது எனக்கு ... உன் ஒவ்வொரு செயலும் ... என் காதலுக்கு ஒப்பாரிதான் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 874

பலஜென்மம் காதலிப்பாய்

உன்னை காதலித்து ... நானும் கற்றுகொண்டேன் .... எப்படி வலிக்காமல் .... மறப்பதென்று ....!!! உன்னை நினைக்காமல் .... கவிதை எழுத முயற்சித்தேன் ... வெற்றிபெற்றது -நீ இக்கரைக்கு அக்கரை பச்சை - நீ அடிக்கடி இப்படிதான் ,,, ஏமாற்றுகிறாய் ,,,,, ஒருமுறை என்னை காதலித்துப்பார் ,,,, பலஜென்மம் என்னை ... காதலிப்பாய் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 873

நீடூடி காதல் வாழ்க

நீ என் மூச்சாக இருந்த .... காலமெல்லாம் நான் .... உன் உயிராக இருந்தேன் .... நீ மூச்சை நிறுத்தினாய் ... காதல் இறந்தது ....!!! இதயத்தில் ரோஜாவை .... வளரவிடாமல் -எதற்கு ..? முள்ளை வளர்கிறாய் ....? நீடூடி வாழ்க .... வாழ்த்துவோர் உள்ளார் ... நீடூடி காதல் வாழ்க ... வாழ்த்துவோர் யாரும் இல்லை ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 872

கே இனியவன் காதல் கவிதை

படம்

ஆதரவின்றி அலைகிறேன்

படம்

காதல் சுமைகளின் சுமை

படம்

எப்போது ஓயும் காதல்

படம்

நீஎன் மனசை

நீ..... என் மனசை திறந்து விட்டுப் போகிறாய்.....! நான் இங்கே அதற்குள் நினைவுகளை நிரப்பிக்கொண்டு இருக்கிறேன்.....! நீ சின்னதாய் சிரித்து விட்டு .... போகிறாய் .....!!! நான் இங்கே சிதறியதேங்காய் .... ஆகிவிட்டேன் ....!!! + கே இனியவன் காதல் கவிதைகள்

தன்னம்பிக்கை கவிதை

உன்னை ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை.... நீயே எல்லோரையும் ஜெயிக்க .... பிறந்திருகிறாய்....!!! உன்னால் .... முடியாது என்பதை யாரோ .... ஒருவன் முயற்சி செய்து வருகிறான் .... முடியாது என்றசொல் உலகில் .... கிடையாது ....!!! கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை 

என்னுடன் பேசிப் பார்…!!!

என்னை கண்டவுடன் ... தலை குனிந்து போவதை ... காட்டிலும் ஒருமுறை ... முறைத்தேனும் பாருயிரே...!!! தோழிகளுடன் பேசுகிறாய் ... கண்டவுடன் மௌனமாகிறாய் .... என் முகத்தைப் பார்… என்னை திட்டியாவது என்னுடன் பேசிப் பார்…!!! என்னை அடித்தாவது என்னை தொட்டுப்பார்… அப்படியாவது என் காதல் உனக்குத் தெரியட்டும்.... காதலுக்கு காத்திருத்தல் தேவை ... எதுவரை .......? + கே இனியவன் காதல் சோக கவிதை 

என்னை மறக்க ஒரு நொடிபோதும் ...

உன்னை மறுக்கும்  நேரத்தில்.... என்னை மறக்கிறேன் .... உன்னை நினைக்கும் நேரத்தில் ... என்னை மறக்கிறேன் .....!!! என்னை மறக்கிறேன்... உன்னை நினைக்கிறன் .... என்னை நினைக்கும் நேரத்தில் .... உன்னையே நினைத்து என்னை .... மறக்கிறேன் ....!!! உன்னை மறக்க நினைக்கும் .... நேரத்தில் என்னை இழக்கிறேன்.... என்னை மறக்க ஒரு நொடிபோதும் ... உன்னை மறக்க ஜென்மம் போதாது ...!!! + கே இனியவன் காதல் சோக கவிதை 

கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை

என்னவள் எனக்கு தந்த .... அத்தனை நினைவு பொருட்களும் ..... கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!! என்னையும் அவளையும் .... ஓவியமாய் வரைந்ததை .... கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!! என் காதலை திருப்பி தா .... கேட்டாள் கொடுத்துவிட்டேன் .... வலிகள் நெருஞ்சி முள்போல் .... குத்துகின்றன அவளுக்காக .... காதலையும் கொடுத்துவிட்டேன் ....!!! அவளுக்காக எழுதிய அத்தனை ..... கவிதைகளையும், கிழித்து விட்டேன்.... வரிகளை தான் மறக்க முடியவில்லை.......! நினைவில் என்றும் வைத்திருப்பேன் .... ஆயுள் வரை கவிதைக்காக .... ஆயுள் வரை காதலிப்பதற்காக ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை 

வலியை வலியால் ....

வலியை வலியால் .... உணரவைக்கமுடியும்.... என்றால் தினமும் கடவுளிடம் வேண்டுவேன் .... தொடர்ந்து நீ வலியை.... தரவேண்டும் என்பேன் ....!!! பணம் இருக்கும் இடத்தில்.... நல்ல குணம் இல்லை .... அது பொய் என்பேன்.... உன்னிடம் நல்ல குணம்.... இருக்கின்றது......!!! + கே இனியவன் காதல் கவிதைகள் 

நினைவுகள் ஓய்வதில்லை...

நினைவுகள்  ஓய்வதில்லை... மன அலைகள் ஓய்வதில்லை...!!! என்னைப் பற்றிய நினைவுகள் உன் மனதிற்குள்ளும்... உன்னைப் பற்றிய நினைவுகள் என் மனதிற்குள்ளும்... காரணமே தெரியாமல் அலைந்து கொண்டிருக்கின்றன...!!! அலைகள் ஓய்ந்தாலும் .... காதல் ஓய்வதில்லை ....!!! + கே இனியவன் காதல் கவிதைகள்

பொருளெல்லாம் நீ ....!!!

வளர விட்டேன் காதலை .... மனதில் அதுவே இன்று என்னை மாற்றி சுற்ற வைத்து விட்டது....!!! ஆதரவின்றி அலைகிறேன் .... புரியாமல் தவிக்கிறேன் ....... ஒரு மனதாககண் மூடி .... திறக்கிறேன் காணும் ... பொருளெல்லாம் நீ ....!!! + கே இனியவன் காதல் கவிதைகள் 

சுமக்கும் பாக்கியத்தை கொடுத்தாய்

உன்னை வயிற்றில் சுமக்கும் பாக்கியம் தாய்க்கு கொடுத்தாய் ....!!! உன்னை தோளில்... சுமக்கும் பாக்கியம் தந்தைக்கு கொடுத்தாய் ...!!! உன்னை இதயத்தில் .... சுமக்கும் பாக்கியத்தை ... எனக்கு கொடுத்தாய் .....!!! வாழ்க்கை முழுவதும் .... ஏதோ ஒருவகை சுமை .... காதல் எல்லா சுமைகளின் .... கூட்டு மொத்தம் ....!!! + கே இனியவன் காதல் கவிதைகள்

நீயல்லவோ உயிரே ....!!!

நீயல்லவோ உயிரே ....!!! *** பத்து மாதம் என்னை சுமந்து பெற்றவள் என் உயிர் தாய் ....!!! வாழ்நாள் முழுதும் உன்னை சுமக்க இருக்கும் என்னை என்னவென்று ... அழைப்பாய் உயிரே ...? உயிரை உயிரால் எடுத்து ... என் உயிரை சுமப்பவளே .... தாயின் இன்னொரு பிறப்பு .... நீயல்லவோ உயிரே ....!!! + கே இனியவன் காதல் கவிதைகள்

மரணமே எனக்கு உதவிசெய் ....!!!

மரணமே எனக்கு உதவிசெய் ....!!! சேர்ந்து வாழ காலம் தடுத்தாலும் காதலோடு கடைசி வரை வாழ துடிக்கிறது மனம்... !!! கரம் கூப்பி கரைந்து தொழுகிறேன் மரணமே என்னை நெருங்காதே......!!! சேர்ந்தே வாழ்வோம் சேர்ந்தே மரிப்போம் ... இரண்டும் எனக்கு காதலின் ... பரிசாக அமையட்டும் ....!!! + கே இனியவன் காதல் கவிதைகள்

கே இனியவன் - கஸல் 104

உன் கண்ணால் காதல் கோலம் போடுகிறாய் -நான் அதற்கு வர்ணம் திட்டுகிறேன் காதலில் பூக்கள் சிரித்ததை விட வாடியதுதான் அதிகம் உனக்கு நான் காதலன் உறவு நீ எனக்கு என்ன உறவு ....? + கே இனியவன் - கஸல் 104

அழுததால் மீண்டவர் யார் ...???

இறப்பு ஒரு கொடுமைதான் ஆனால் இறக்காமல் -உலகில் யாரிப்பர் ....??? இறப்பின் போது அழுவது இயற்கைதான் -ஆனால் அழுததால் மீண்டவர் யார் ...??? இறந்தவரை நினைப்பது கவலைதான் -ஆனால் நினைத்ததால் -மீண்டும் சிரித்தவர் உண்டோ ...??? பட்டுப்போன மரத்தை நாளை படப்போகும் மரங்கள் தூக்குவதே -பாடை செத்துப்போன உடலுக்கு நாளை சாகப்போகும் -உடல் போடுவதே -கூச்சல் பட்டினத்தார் ஒன்றும் சும்மா கூச்சலிடவில்லை மனிதா ....!!!

கே இனியவன் தத்துவ கவிதை

மூட்டாமல் வராது நெருப்பு ....!!! உன்னை திட்டாமல் வராது -புத்தி....!!! முயற்சிக்காமல் வாராது -வெற்றி.....!!! தர்மம் செய்யாமல் வராது -சொத்து....!!! தர்மம் செய்தால் அழியாது சொத்து.....!!! நீ ஒப்பிட்டுப்பார் ஊரில் நடந்த கொள்ளையை தர்மவான்கள் இழந்ததில்லை சொத்தை .....!!! + கே இனியவன் தத்துவ கவிதை

கே இனியவன் - கஸல் 100

நீ வெயிலா மழையா சொல்லிவிட்டு போ...? நான் சிலந்திபோல் உன் நினைவுகளால் வலைபின்னுகிறேன் நீயோ - சிலந்தியாய்  என்னை விழுங்குகிறாய் நான்  மரணத்திலிருந்து தப்பிவிட்டேன் ... உன் வலியில் இருந்து தப்ப முடியவில்லை ....!!! + கே இனியவன் - கஸல் 100

உன் நாமத்தையே உச்சரிக்கிறது ....!!!

இப்போது நான் கல்லூரிக்கு போவதில்லை -நீ கல்லறைக்கு எப்படி ..? போவது என்று .... பயிற்சி எடுக்கிறேன் ....!!! என் கையெழுத்தில் முதல் எழுத்தே -உன் எழுத்தாக மாறிவிட்டது....!!! என் கவிதையை .... இரக்கம் இல்லாமல் ... எரித்து விட்டாய் .... எறிந்த சாம்பல் கூட என்மீதிவிழுந்து -உன் நாமத்தையே உச்சரிக்கிறது ....!!! + கே இனியவன் - கஸல் 99

கடவுளே உனக்கு வேண்டும் ...!!!

கடவுளே உனக்கு வேண்டும் ...!!! நாஸ்தீகன் என்று கூறி .... உன்னை கல் என்கிறார்கள் .... உன்னில் ஒன்றும் இல்லை என்கிறார்கள் ... சில நேரம் உன்னையே திருடுகிறார்கள் ... ஆஸ்தீகனை படைத்தாய் ..!!! ஆடம்பர வீடு உனக்கு கட்டுகிறார்கள் ... அழகான பந்தல் போடுகிறார்கள் .. படைத்தவனுக்கே படையல் போடுகிறார்கள் .. தங்கநகை போடுகிறார்கள் ... உலகத்தையே சுமக்கும் உன்னை .. சுமந்து பெருமை பேசுகிறார்கள் .. என்னை  பொறுத்தவரை -இந்த இருவரும் பாவிகள்தான் .........!!! கடவுளே உனக்கு வேண்டும் .. இவர்களை பாவி என்று சொன்ன என்னை படைத்ததற்கு ...!!!

சோகம்தான் உனக்கு சொத்தோ ...?

நீ யாழ் வாசித்திருந்தால் என் ஊரின் பெயரில் உன்னை அழைத்திருப்பேன்... நீயோ காளியாய் இருகிறாய் ....!!! இசையில் அருமையான இனிமைகள் இருக்க -என்னை சோககீதம் பாட சொல்லுகிறாய்.... சோகம்தான் உனக்கு சொத்தோ ...? காதல் இசையை போன்றது தன்னை மறந்து சிரிக்கவும் செய்யும் -அழவும் செய்யும்....!!! + கே இனியவன் - கஸல் 98

உன் கண்பட்டதால் ...!!!

குற்றுயிரும் ... குறை உயிருமாய் .... வைத்திய சாலையில்.... இருக்கிறேன் -உன் கண்பட்டதால் ...!!! நான் காதலில் கர்ணனாக இருக்கிறேன் -நீ கண்ணனாக வந்து காதலை தானம் கேட்கிறாய்....!!! காதலுக்கு இன்பமாக கட்டிய காவியக்கட்டிடம் எங்கே உள்ளது ...???  + கே இனியவன் - கஸல் 97