இடுகைகள்

ஜனவரி 30, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மூன்றாம் அறிவு

மூன்றாம் அறிவு -------------------------- "அ" எழுதியவுடன்...... ஆரம்பமாகிவிடும்..... ஏட்டறிவு........! ஏட்டறிவில்..... ஏற்றம் கண்டவரும்........ உள்ளனர்...... ஏட்டறிவு எட்டாதவரும்..... உள்ளனர்.........! ஒவ்வொரு வயதுக்கும்..... ஒவ்வொரு பட்டறிவு....... ஏட்டறிவில்லாமல்....... பட்டறிவால் வாழ்வியலில்..... பட்டதாரியானவர்களும்..... ஏராளம்.........! ஏட்டறிவும் பட்டறிவும்..... போராட்டத்தாலேயே....... பெறப்படுகிறது.......! ஏட்டறிவும் பட்டறிவும்..... ஏதோ ஒருவகையில்..... யாரோ ஒருவரின் சாயல்.... அல்லது நிழலாகவே..... இருக்கிறது...........! சாயல்களும் நிழல்களும்..... காலத்தால் மறைந்துவிடும்... இல்லையேல் அவரவர்...... காலத்துக்கே பொருந்தும்......! இன்றைய உலகுக்குதேவை...... மூன்றாம் அறிவே....... யாருடைய சாயலோ நிழலோ..... இல்லாமல் உனக்கே உரிய...... அறிவே மூன்றாம் அறிவு.......! மூன்றாம் அறிவை...... தன்னுள்ளே அறிந்தவனே..... இன்றைய சாதனையாளன்...... இது ஆளுக்காள் வேறுபடும்..... நிழலாகவும் சாயலாகவும்..... இன்னொருவருக்கு தொடராது..... தொடரவும் முடியாது.....!