நீ நினைவாய் தந்த ரோஜா செடியில் முற்கள் மட்டுமே உதிக்கிறது ....!!! இரவு எப்போது வரும் காத்திருக்கிறேன் அப்போது இனிமையாய் வருவாயோ ...!!! உன் அழகால் இதயம் முழுக்க காயப்பட்டிருக்கிறேன் ....!!! கஸல் 728
உன் நினைவுகளில் இருந்து கவிதை எழுதிய -நான் வலிகளில் இருந்து கவிதை எழுதுகிறேன் ....!!! காதல் பூவால் பூஜை செய்த - நீ முற்களால் பூஜை செய்கிறாய் .....!!! உன் கண்ணுக்கு மயங்கி காதல் செய்தேன் இப்போ உன்னை கண்டே மறைகிறேன் ....!!! கஸல் 727
எங்களில் ஒரு சில .. மரங்களை கடவுளாக்கி ... மற்றவற்றை விறகுகள் ... ஆக்கியது மனிதனே தவிர ... நாங்கள் இல்லை .....!!! எமது கடமை ஒரே செயல் உங்களுக்கு உயிர் காப்பது ...!!! மரம் கடுகு கவிதைகள்
சிலுவைக்காகவும் .... எங்களை வெட்டுகிறீர்கள்.... இறுதி ஊர்வல கட்டைக்காவும் ... எங்களை வெட்டுகிறீர்கள் ... சிரித்துகொண்டே இறக்கிறோம் நாங்கள் ....!!! மரம் கடுகு கவிதைகள்