இடுகைகள்

ஏப்ரல் 30, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நட்பு

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து !!!.....................நட்பு........................!!! அமைதியான நேரத்தில் என்....... பலவீனத்தை சொன்னான் நண்பன்......! ^^^ அன்று  நட்பு இல்லையென்றால் ... அன்றே பாடையில் போயிருப்பேன் ......! ^^^ மூச்சுக்கு காற்று நண்பன் .... என் உயிருக்கு நீயே நண்பன் .....! ^^^ நான் போகும் இடமெல்லாம்.... நிழலாய் தொடர்கிறான் நண்பன் ^^^ மறந்துபோயும் கேட்கமாட்டான் மறக்க மாட்டாய்தானே என்னை என்று.....! @@@ இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து கவிப்புயல் இனியவன் 

தொழிலாளர் தினக் கவிதை

தொழிலாளர்  தினக் கவிதை ^^^^^ உழைத்து உழைத்து உடல் தேய்ந்தது .... உழைத்து உழைத்து உளம் சோர்ந்தது .... உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை .... ஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை .... உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர்....! களைப்பில் உழைப்பின் முதுகு .... கேள்விக்குறியாய் வளைந்தது .... சளித்து ,வெறுத்து ,கொண்டனர் .... அடக்கப்பட்டனர், ஒதுக்கபட்டனர் .... திருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....! தூங்கியவர்கள் விழித்து கொண்டனர் .... திரட்டி கொண்டனர் தம்பலத்தை ..... நுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் .... நிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் .... வெடித்தது தொழிலாளர் போராட்டம் .....! நோக்கம் நிறைவேறும்வரை ...... உக்கிரமானது சர்வதேசப் புரட்சி...... உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் .... உழைக்கும் நேரம் எட்டுமணியாக ..... உரிமையை போராடி வென்றனர்.....! போராடி வென்ற தொழிலாளர் தினம் ..... பேச்சளவில் இன்று சட்டத்திலும் ... சிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ... மனத்தால் உழைப்பின் புனிதத்தை ... உணரும் நாள் என்று உதயமாகிறதோ .... அன்றே உண்மைதொழிலாளர் தினம் ......! @ கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து !!!.....................காதல்........................!!! காதல் ஒரு வழி பாதை ...... நினைக்க தெரியும் மறக்க தெரியாது....! ----- உன்னோடு வாழவும் துடிக்கிறேன்.... மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....! ----- உதடு சிரிக்கிறது ... இதயமோ அழுகிறது ......! ----- காற்றிருந்தால்  பட்டம் பறக்கும் காதல் இருந்தால்  வாழ்க்கை சிறக்கும்....! ----- காதலில் நினைவுகள் முற்கள் கனவுகள் வாசனைமலர்கள் ....! @@@ இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து கவிப்புயல் இனியவன்

மழை

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து !!!.....................மழை.........................!!! வெட்டிய மரங்களின் ஓலங்கள் .... அழுது கொட்டியது அடைமழை ....!!! ||||||| வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை வானம் கதறி அழுதாள் - அடைமழை |||||||| பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம் பருவம் தவறி மழைபெய்தால் -நாசம் ||||||| விவசாயியின் நண்பன் - மழை வியாபாரியின் எதிரி -மழை |||||| மனதில் என்றும் முதல் காதலும்.... முதல் மழையில் நனைந்ததும் மறையாது IIIIII இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து கவிப்புயல் இனியவன்