இடுகைகள்

அக்டோபர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனம் இருளவில்லை .....!!!

உனக்காக காத்திருக்கிறேன் வானம் இருண்டுவிட்டது கவலைப்படாதே -மனம் இருளவில்லை .....!!! எத்தனையோ சாலைகளில் இத்தனை வயது வரை விபத்தில் சிக்கவில்லை உன்னிடம் சிக்கிவிட்டேன் ....!!! உன் நினைவோடு இடறி விழுந்தேன் - என் இதயம் அழுகிறது -உன் இதயத்தை காப்பாற்றி விட்டேன் .....!!!

உன் புன்னகையின்

கண் பட்டு காயப்பட்ட முதல் மனிதன் நானாக தான் இருக்கமுடியும் ... உன் புன்னகையின் வெளிச்சத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டவனும் நானாகத்தான் இருக்க முடியும் ....!!!

மயங்கியது கண் தானே ....!!!

என் இதயத்துக்கு உன்னை பார்க்கும் சக்தி இருந்திருந்தால் அன்றே உன்னை வெறுத்திருக்கும் என் கண்ணை நானே குத்தவேண்டும் உன்னை கண்டு மயங்கியது கண் தானே ....!!!

ஹைக்கூ கவிதை

ஹைக்கூ கவிதை பிள்ளையாருக்கு பால் அபிசேகம் ஏக்கத்துடன் பார்க்கிறாள் - பால் வற்றிய தாய் -

கொடுக்கும் நட்பு ....!!!

எனக்கு வேண்டியதை நான் விரும்பும் போது எதிர்பாராமல் கொடுக்கும் நட்பு ....!!! தனக்கு வேண்டியதை என்நிலையை பொறுத்து தீர்மானிக்கும் நட்பு .....!!! தனக்காக இருந்த ஒன்றையும் சற்றும் ஜோசிக்காமல் தரும் நட்பு ....!!!