இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சரயோகம்

 சரயோகம்....  உடலுக்கு ஆலய... தரிசனத்துக்கு....  நிகரானது....... !!! உயிருக்கு  இறை  தரிசனத்துக்கு.....  நிகரானது....... !!! @ கவிப்புயல் இனியவன் 

யோகா கவிதைகள்

  செய்யாதே செய்யாதே  ............ வலது நாடி ஓடும் போது..! திருமணம் செய்யாதே...  திருமணபேச்சும் செய்யாதே... வேலைக்கு ஆளை அமர்த்தாதே....  சமாதானம் பேச செல்லாதே...  சூரியநாடி சுடும் நாடி..  அனைத்தும்..  கெட்டுவிடும்...... !!! @ கவிப்புயல் இனியவன்  யோகா கவிதை 

வேண்டாம் வேண்டாம்

  வேண்டாம் வேண்டாம்  ......... இடது நாசி ஓடும் போது....  மருத்துவம் செய்ய வேண்டாம்...  மருந்து உண்ண வேண்டாம்...  ஆசீர்வாதம் பெற வேண்டாம்...  உணவு உண்ண வேண்டாம்....  உறக்கம் செய்ய வேண்டாம்...  அதிகாரியை சந்திக்க வேண்டாம்....  @ கவிப்புயல் இனியவன் 

கவிபுயலின் போன்சாய் கவிதை

  போன்சாய் என்பது ஜப்பான் மற்றும் சீனாவில் மரம் வளர்க்கும் முறையாகும். பெரிய மரங்களை சிறிய தொட்டிக்குள் வளர்க்கும் முறையாகும். ஆலமரம் கூட அப்படி வளர்க்கப்படுகிறது. அந்த எண்ணக்கருவை கொண்டு அமைக்கப்படும் ஒருவகை ஹைக்கூவே போன்சாய் கவிதை ஆகும். எனினும் ஹைக்கூவுக்கும் போன்சாய் ஹைக்கூவுக்கும் அடியேன் கூறும் வேறுபாடுகள்.  1) ஹைக்கூவிற்கு ஒரு மரபு உண்டு. ஓரடி ஈரடி, ஈற்றடி, என்ற மரபு உண்டு. ஆனால் போன்சாய்க்கு அப்படி இல்லை. ஆனால் முடிவு திருப்பமாக அமையும்.  2) ஹைக்கூவில் நகைச்சுவையாக அமைந்தால் அது சென்றியு ஆகிவிடும். இங்கு சமூக விழிப்புணர்வு, நகைச்சுவை எல்லாம். ஒன்றாகவே கருதப்படும்.  3) ஹைக்கூவில் மொழிக்கலப்பு ஏற்பதில்லை. இங்கு அது தவறில்லை.  இவை தவிர வேறுபாடு இருப்பின் நீங்கள் கூறுங்கள் நானும் அறிய விரும்புகிறேன்.  .....  கவிஞன் நிகழ்காலத்தை படம் போட்டு காட்டுபவன். அதற்கேப்ப  தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப போன்சாய் அமைத்துள்ளேன்.  ......  1) உலகமே       வைத்தியசாலை ஆக்கியது        கொரோனா  .......  2) காற்றுக்கு என்ன வேலி       யார் சொன்னது        முகக்கவசம்  ......  3) குற்றம் செய்யாதவருக்கும்.    

கவிதைக்கும் கவிதை நீ

 வியாழன், 17 நவம்பர், 2016 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவிஞன் (கவிப்புயல்)..... அறிவியலுக்கும் கவிதை..... அரசியலுக்கும் கவிதை..... அன்புக்கும் கவிதை..... அம்மாவுக்கும் கவிதை..... காதலுக்கும் கவிதை..... கல்விக்கும் கவிதை..... கடவுளுக்கும் கவிதை..... கவிதைக்கும் கவிதை..... பொல்லாதவருக்கும் கவிதை..... பொருளாதாரத்துக்கும் கவிதை..... பொன்னுக்கும் கவிதை..... பொம்மைக்கும் கவிதை..... எழுதுகிறாய் நீ கவிதை , கவிதை , கவிதை..... உன் திறமைக்கு உரிய சந்தர்ப்பம் கிடைக்குமானால்  "வைரமுத்து, வாலி " எல்லோரையும் தள்ளியிருப்பாய் உன் பின்னே..... கவிதையை வாசித்துவிட்டு, எப்படித்தான் இதை எழுதுகிறார்களோ?..... என ஒருவகையான ஆச்சரியம் கலந்த ஏக்கத்துடன் பார்த்த நானும் அரைக்(1/2) கவிஞனானது உன் கவிதையை வாசித்து வாசித்துத் தான். போதாது உனக்குக் கவிப்புயல் பட்டம்..... தொடரட்டும் கவிதைக்கும் தமிழுக்கும் உனது சேவை..... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ஆ.இராஜ்மோகன். ஆ. இராஜ்மோகன். நேற்று, 05:21 AM ·  16.11.2016

யோகா கவிதை

 செய்யாதே செய்யாதே  ............ வலது நாடி ஓடும் போது..! திருமணம் செய்யாதே...  திருமணபேச்சும் செய்யாதே... வேலைக்கு ஆளை அமர்த்தாதே....  சமாதானம் பேச செல்லாதே...  சூரியநாடி சுடும் நாடி..  அனைத்தும்..  கெட்டுவிடும்...... !!! @ கவிப்புயல் இனியவன்  யோகா கவிதை 

பஞ்சபூதமும் மனித உறுப்பும்.

  பஞ்சபூதமும் மனித உறுப்பும்.... ....... நிலத்தை நேசித்தால்..  மண்ணீரல் வளமாகும்... ! நீரை நேசித்தால்... சிறுநீரகம் வளமாகும்.... ! நெருப்பை நேசித்தால்...  இருதயம் வளமாகும்... ! காற்றை நேசித்தால்... நுரையீரல் வளமாகும்... ! விண்ணை நேசித்தால்...  கல்லீரல் வளமாகும்.... ! @ கவிப்புயல் இனியவன்