இடுகைகள்

ஜூன், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பௌதீகவியலும் காதல்விதியும் ....!!!

பௌதீகவியலும் காதல்விதியும் ....!!! சடப்பொருட்கள் யாவும் .... தம் திணிவுக்கு நேர் விகிதத்திலும் .... தமக்கிடையே உள்ள தூரத்தின் ... வர்க்கத்துக்கு நேர்மாறு விகிதத்திலும் .... ஒன்றை ஒன்றை ஈர்க்கும் ... நியூட்டனின் விதி .....!!! இதயமுள்ள இரு வேறுபட்ட .... பாலினங்கொண்ட உயிரினங்கள் .... நேருக்கு நேராக நோக்கி .... ஒருவரின் இதயத்தை மற்றவரிடம் ... பரிமாற்றி வாழ்வதே ..... காதலின் விதி .......!!! ஒரு  எதிர் தாக்கத்துக்கு சமமான .... மறுதாக்கம் உண்டு ..... நீ தரும் ஒவ்வொரு தாக்கத்துக்கும் .... காதலிலும் மறுதாக்கம் உண்டு ......!!!

விஞ்ஞானமும் காதல் கவிதையும்

வேதியியலும் காதலும் ஐதரசனின் இரண்டு பங்கும் ....  ஒட்சிசனின் ஒருபங்கும் ....  சேர்ந்த கலவையே  நீர் -H2O .....!!!  என்னுடைய  நினைவுகளையும் .....  உன்னுடைய நினைவுகளையும் ....  வேதனையுடன் சுமந்து கொண்டு ....  இருக்கும் நம் காதல் ...  வேதியல் சூத்திரம் தான் ....!!!  வேதியல் வகுப்பறையில் ....  வேதியல் படித்தானோ ....  தெரியவில்லை ....  வேளை தவறாமல் ...  உன் வேடிக்கைகளை  ரசித்திருக்கிறேன் .....!!!  வேதியலில் ...  ரேடியத்தை கண்டு பிடித்த ....  மேரி கியூரி குடும்பம் ....  வேதனையான மரணத்தை ....  அடைந்தார்கள் ....  புற்றுநோய் ......!!!  காதலும் ....  ஒரு புற்றுநோய் ....  உன் நினைவுகளால் நானும் ...  என் நினைவுகளால் நீயும் ....  கொஞ்சம் கொஞ்சமாக ....  இறந்து கொண்டிருக்கிறோம் ....!!!

மலர் வளையம் ...

கண்ணோடு.... ஆரம்பித்த காதல் .... கண்ணீரோடு .... வாழ்கிறது .....!!! மலர் கொடுத்து .... காதல் செய்தேன் .... மலர் வளையம் ... வரும்போல் இருக்கிறது ....!!! + காதல் சிதறல்  கே இனியவன்

மலர்வளையம் தருவாய் ....

நீ  தப்பு செய்ய போவதில்லை  நான் விரும்பியதையே ... செய்தாய் .....!!! நான் .... மலர் மாலை எதிர்பார்தேன் .... நீ  மலர்வளையம் தருவாய் .... போலிருக்கிறது ....!!! + காதல் சிதறல்  கே இனியவன்

அனுபவிக்க வேண்டும் ....!!!

இன்னுமொரு ஜென்மம் .... பிறந்து வந்தது உன்னை .... காதலிக்க வேண்டும் .....!!! நீ  பிரிந்து செல்ல வேண்டும் .... வலியின் வலியை.... அடுத்த ஜென்மமும் .... அனுபவிக்க வேண்டும் ....!!! + காதல் சிதறல்  கே இனியவன்

பிரிவு உணர்த்தியது ....!!!

பிறப்பு எத்தனை .... வலி என்பதை தாய்மை உணர்த்தியது ....!!! இறப்பு எத்தனை .... வலி என்பதை உன் .... பிரிவு உணர்த்தியது ....!!! + காதல் சிதறல்  கே இனியவன்

காதல் சிதறல் - கே இனியவன்

நீ  முகத்தால் ... வெறுக்கிறாய் .... இதயத்தால்....  அழைக்கிறாய் ..!!! பாவம்  உன் கண்கள் ... படாத பாடு படுகிறது ....!!! + காதல் சிதறல்  கே இனியவன்

அத்தனை நாள் வாழ்வேன் ...!!!

என்னவனே .... உயிரற்ற என் உடலை .... உயிருள்ள உடலாக்குவது .... உன் கவிதைகள் தான் ...!!! எனக்காக .... எத்தனை கவிதைகள் .... எழுதினாயோ ....? அத்தனை நாள் வாழ்வேன் ...!!! + காதல் சிதறல் கே இனியவன்

மரணத்தின் பின் உணர்வாய் ....!!!

என்னவனே .... எதை வேண்டுமென்றாலும் .... பேசு... ஏசு....நினை .... உன்னை தவிர நான் ... எதையும் நினைத்ததில்லை ... என்பதை என்  மரணத்தின் பின் உணர்வாய் ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

காதல் இறக்கை ....!!!

என்னவன் .... ஒரு சிரிப்பு சிரித்தான் ... இதயத்தில் முளைத்தது .... காதல் இறக்கை ....!!! என்னவனே ... எங்கு சென்றாய் ...? உன் நினைவுகளை ... அடைகாக்கும் பறவையாய் .... இவள் ......!!! + காதல் சிதறல் கே இனியவன்

எப்போதடா ... புரிவாய் ....?

கண்ணால் காதல் .... தந்தவனே ..... கவிதையால் .... வலிகளை தருகிறான் ....!!! உனக்கு வலித்தால் ... எனக்கு வலிக்கும் ... என்று எப்போதடா ... புரிவாய் ....? + காதல் சிதறல் கே இனியவன்

எனக்கு தலைவிதி....!!!

கற்கண்டாக இருந்த .... இதயத்தை உப்புக்கல்.... ஆக்கிவிட்டாய் .....!!! காதல் ... பொது விதி .... எனக்கு தலைவிதி....!!! ஆசைக்கு.... அளவு வேண்டும் .... நான் உன்னில் பேராசை ... பட்டேன் இப்போ ... படுகிறேன் .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;806

காதல் பிரிவு

காதல் பிரிவுகள் பலவகை .....!!! காதல் புரிந்துவிட்டு பல்வேறு காரணங்களுக்காக உயிரை துறக்காமல் காதலை துறப்பது ....!!! ----------------- கவிதை 01 ----------------- இரண்டு  ரோஜாக்கள் அழகாக பூத்து ... உதிர்ந்து விழுவது .... காம்பு என்னும் பகுதி ... நினைவுகளோடு ... இருந்து கொண்டே இருக்கும் ...!!! +++++++ உயிராய் காதலித்து கொண்டிருக்கும் போது ஒரு உயிர் உலகை விட்டு பிரிவது ஆனால் தற்கொலையில்லை ....!!! ------------- கவிதை 02 ------------- இரண்டு ரோஜாக்கள் .... அழகாக பூத்து .... ஒரு ரோஜா கருகிவிட .... மற்றைய ரோஜா .... வாடிக்கொண்டிருப்பது....!!! +++++++++++++ உயிராய் காதலித்த உள்ளத்தில் ஒன்று எங்கே சென்றது...? எப்படி பிரிந்தது ....? மீண்டும் வருமா ..? ------------- கவிதை 03 ------------- அழகாக  பூத்த ரோஜாக்கள் .... ஒரு ரோஜாவை நினைத்து ... மற்றைய ரோஜா ..... ஏங்கிகொண்டிருத்தல் ..... வாடவும் முடியாமல் .... வாழவும் முடியாமல் .....!!!

தள்ளி விட்டாயே ....!!!

தனிமையில் இருந்து ... உன்னிடம் வந்தேன் .... காதலித்தாய் .....! தனிமையே உனக்கு ... பொருத்தமெண்டு... தள்ளி விட்டாயே ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

பேசாமல் விட்டாலும் ...

காதலின் .... கொடிய விஷம் ..... காதலியின் பேச்சு ,,,,, பேசினாலும் வலிக்கும் ... பேசாமல் விட்டாலும் ... வலிக்கும் ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

காதல் சிதறல்

நீ பேசாமல் இருந்தால் ... எனக்கென்ன ....? ஒவ்வொரு நொடியும் ... நீ என்னோடு பேசுவதை .... உன் கண்கள் சொல்கிறதே ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

தப்பு .....

விட்டு கொடுத்து வாழ்வதே .... நல்ல வாழ்க்கை என்றால் .... தப்பு ..... காதலை விட்டு கொடுத்தவன் .... எங்கே நல்லவாழ்க்கை ... வாழுகிறான் ...? + காதல் சிதறல் கே இனியவன்

உன் பிரிவுக்கு நன்றி ..

என் இதயம் ... எத்துனை துயரங்களை ... சுமக்கிறது  உயிரே .... கண்ணில் இருந்து கண்ணீர் ... வரவில்லை .... இதயத்திலிருந்து வருகிறது ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

காதல் சிதறல் கே இனியவன்

உன் பிரிவுக்கு நன்றி .... இத்தனை வரிகளை நீ தானே .... தந்தாய் .... உடல் மண்ணில் மறையும் .... நாள்வரை உன் எண்ணம் ... மனதில் இருக்கும் .... + காதல் சிதறல் கே இனியவன்

காலை வணக்கம்

இன்று  இனிமையாககவும் ... இன் முகத்துடனும் .... இடங்களை வசப்படுத்துவோம் ... இனிமையான காலை வணக்கம்  இனியவனின் ... இனிமையான வாழ்த்துக்கள் ....!!!

கண்ணீரை நிரப்புகிறது ....

எத்தனை கவிதை எழுதினாலும் ... முடியவில்லை நிறுத்த ... உலகில் பெரிய தொடர் கதை .... உன்னை பற்றிய கவிதை ....!!! ஒரு நினைவை மறக்கிறேன்.... மறு நினைவு கவிதையாய் ... கண்ணீரை நிரப்புகிறது ....  + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

காதலில் பெரிய வலி ....!!!

போதுமடி ..... என் இதயத்தை .... மிதித்துக்கொண்டு திரிவது .... எத்தனைமுறை அதுதாங்கும்... என் இதயம் ஈரமுள்ளத்தால் .... உன் வலிகளை தாங்கிக்கொண்டு ... வாழ்கிறது ....!!! காதல் பிரிவு ஒன்றும் .... பெரிய வலியில்லை.... என்னை தெரியாததுபோல் .... நீ நடந்துகொள்வதுதான் .... காதலில் பெரிய வலி ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

அக்கறையில்லை ....!!!

உனக்கு இரு வழிதான் உண்டு ... என்னை காதலிப்பது ... என்னை கொல்லவைப்பது....!!! உன் புன்னகை ... என் அனைத்து உறவையும் ... எதிரியாக்கி விட்டது ....!!! நான் இக்கரை ... நீ அக்கரை அதுதான் நீ காதலில் .. அக்கறையில்லை ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;805

உன் நினைவுகள் ....!!!

உன்னை காதலித்து ... வெய்யிலில் பூத்த பூ ... ஆகிவிட்டேன் .....!!! உன்னை காதலித்த நாள் .... ஆத்மா என்னை விட்டு .... போய்விட்ட நாள் ....!!! இருண்டிருக்கும் ... இதயத்தின் சிறிய ஒளி .... உன் நினைவுகள் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;804

தத்துவ சிதறல்கள்

வாழ்ந்து காட்டியவர்களும் .... வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் ... வாழ்கை தத்துவம் கூறலாம் ..... வாய் சொல்லுக்கு தத்துவம் ..... வாழ்வுக்கு எடுபடாது ....!!! + கே இனியவனின் தத்துவ சிதறல்கள்

எண்ணம் ....

எண்ணத்தால் நிறைவேறாதது .... எதுவுமே இல்லை ..... எண்ணமே வாழ்க்கை ....!!! வெற்றிய தருவதும் எண்ணம் .... வேதனையை தருவதும் எண்ணம் .... + கே இனியவனின் தத்துவ சிதறல்கள்

நான் பலமுறை ...

நான் பலமுறை ... பலகாரணங்களுக்காக .... விழுந்தவன் ....!!! அதுதான் இன்று .... நிமிர்ந்து நிற்க .... காரணமானது ....!!!

தத்துவ சிதறல்கள்

பிறரிடம் வருந்தாதே .... உன்னை வருத்து வெற்றி ... நிச்சயம் ....!!! தன்னை வருத்தாதவன் ... வருத்ததோடுதான் .... வாழ்வான் ....!!! + கே இனியவனின் தத்துவ சிதறல்கள் 

என் கவிதையை பாருங்கள் ....!!!

கணித அறிவுள்ளவர்களே .... என் வீட்டு கதவை தட்டுங்கள் ... அறிஞர் பைதகரஸ்  சொன்னது ...!!! காதல் உள்ளவர்களே ... என் கவிதையை பாருங்கள் ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

மறைந்து விட்டாயே ....!!!

நான் உன்னை ... உயிர் என்று நினைத்தேன் ... நீ நிழலாக இருந்திருகிறாய்.... என்னை விட வெளிச்சமானது ... உன் கண்ணில் பட்டதால் ... மறைந்து விட்டாயே ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

காத்திருந்தேன் ....

மலரோடு வருவாய் ... காத்திருந்தேன் .... எண்ணங்களோடு ... பூத்திருந்தேன் .... மாலையோடு..... வந்திருகிறாய்......!!! + காதல் சிதறல் கே இனியவன்

கருக்கி விடாதே ...!!!

நீ  தந்த காதல் ரோஜா ... பூத்து வாடிவிட்டது .... நினைவுகள் தினமும் ... பூக்கும் நித்தியா கல்யாணி ... செயல்களால் கருக்கி விடாதே ...!!! + காதல் சிதறல்  கே இனியவன் 

காதல் சிதறல் கே இனியவன்

உன் நினைவுகள் ... என்னுள் ஆணிவேர்போல் .... அப்பப்போ உதிர்ந்து விழும் ... இலைகள்போல் சிறு சண்டை .... பிரிவுகள் நமக்குள் இல்லை ....!!! + காதல் சிதறல்  கே இனியவன் 

தேவதாஸை காணவில்லையே ....?

காதல் அழுகிறது ... என்னை காதலித்த  என் உயிர் ... தேவதாஸை காணவில்லையே ....? அவன் காதலியை விரும்பியதை .... காட்டிலும் என்னையே (காதல் ).... காதலித்தான் .......!!! கையிலே ஒரு காதலி ..... கைபேசியில் ஒரு காதலி .... கைவிட்டு காதல்  போனால் .... கைகுலுக்கும் காதலர்கள் ..... இதை காதல் என்று சொல்லும் .... காதலர்களே -  தேவதாஸை கேவல படுத்தாதீர் .....!!! காதலில் தோற்றால் ... நாங்கள்  தேவதாஸ் இல்லை .... காலத்துக்கு ஏற்றால் போல் காதல் ... செய்கிறோம் என்று கூறும் .... காதலர்களே ..... காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை .... காமத்தை காதலாக கருதாதீர் .... காதல் என்றும் காதல் தான் ....!!!

மதிப்பு பூச்சியம் .....!!!

மது கொடியது .... மாதுவும் கொடியது .... காதல் எல்லாவற்றையும்.... விட கொடியது ....!!! உயிரே ... எண்ணத்தால் கவிதை ... எழுதி - கண்ணீரால் ... அழிக்கிறேன் ....!!! தோல்வி ஒன்று ... இல்லாவிட்டால் .... காதல் என்ற ஒன்றுக்கு .... மதிப்பு பூச்சியம் .....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;803

உயிர் தாயே ......

உயிரை பிரிக்க விரும்பாததுபோல் ... நட்பையும் பிரிக்காதே .... நட்பையே உயிர் நட்பு .. என்கிறோம் ....! பெற்ற தாயை கூட ... உயிர் தாயே ...... என்பதில்லையே ....!!! + நட்பு சிதறல்கள் கே இனியவன்

நண்பன் ..

அம்மா ... என்னை கருவறையில் .. சுமந்த மூன்றெழுத்து ....!!! நண்பன் ... என்னை கல்லறைக்கு ... சுமக்க இருக்கும் ... மூன்றெழுத்து ....!!! + நட்பு சிதறல்கள் கே இனியவன்

இதயமாய் வாழ்வது ,....

கண்ணில் தோன்றி .... இதயத்தில் வாழ்வது காதல் .... இதயத்தில் தோன்றி .... இதயமாய் வாழ்வது ,.... நட்பு .....!!! + நட்பு சிதறல்கள் கே இனியவன்

கே இனியவன் -நட்பு சிதறல்கள்

என் இதயம் அழகான .... பூஞ்சோலை .... அதில் அழகான ... நட்பூக்கள் பூத்திருக்கிறது ..... அன்புதான் இதன் பசளை....!!! + நட்பு சிதறல்கள் கே இனியவன்

நட்பு சிதறல்கள்

நட்புக்கு எடுத்துகாட்டாய் -என் நண்பன் ....!!! காதல் ஒருவர் மீது வரும் ... ஒருவகை ஈர்ப்பு ... நட்பு எல்லோர் மீதும் ... பூக்கும் அழகான பூ ....!!! + நட்பு சிதறல்கள் கே இனியவன் 

கவிதையின் ரசனை ...

நீ ஏன் என்னை காதலித்தாய் .. காரண காரியம் கேட்காதீர் ... காதல் ரசனையற்று விடும் ....!!! கவிதைக்கும் .... காரண காரியம் கேட்காதீர் .... கவிதையின் ரசனை ... கெட்டு விடும் ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

உன்னோடு வாழ ஆசை ....!!!

உனக்காக உயிர் .... துறக்கமாட்டேன் .... ஆனால் உன்னோடு ... உயிர் துறக்க ஆசை ... உயிர் வாழ ஆசையில்லை ... உன்னோடு வாழ ஆசை ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

காதல் பரிசு ...

என் காதலி எனக்கு .... தந்த காதல் பரிசு ... துடித்து கொண்டிருந்த.... இதயத்தை வலித்து .... கொண்டிருக்க செய்தது ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

நண்பன்

என் கவிதைக்கும் ... என் காதலுக்கும் ... எப்போது உதவுபவன் ... உயிர் நண்பன் தான் ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

பொய் சொல்லாதே ....!!!

நீ என்னை விட்டு பிரிந்தது .... எந்தளவு உண்மையோ ... அதைவிட உண்மை .... நீ என்னை  காதலித்தது.... உன்னிடம் காதல் இல்லை ... என்று பொய் சொல்லாதே ....!!! + காதல் சிதறல் கே இனியவன் 

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

ஒரு கவிஞன் தன் வலிகளை.... வரிகளாய் எழுதுகிறான் .... ஒரு ரசிகன் அதை ஆத்மா ... உணர்வோடு ரசிக்கிறான் ..... ஒரு கவிதை அப்போதுதான் ... உயிர் பெறுகிறது .....!!! # என் உயிரை உருக்கி .... நான் எழுதும் கவிதைகள்   என்னை ஊனமாக்கி என் மனதை ... இருளாக்கி இருந்தாலும் .... கவிதைகள் உலகவலம் வருகிறது ... உலகறிய செய்த ரசிகனே ... உன்னை நான் எழுந்து நின்று .... தலை வணங்குகிறேன் .....!!! # என் இரவுகளின் வலி...... விழித்திருந்த கண்களுக்கு தெரியும் .... பகலின் வலி அவள் எப்போது .... இரவில் கனவில வருவாள் ....? ஏங்கிக்கொண்டிருக்கும் இதயத்துக்கு ... புரியும் ..... ரசிகனே உனக்குத்தான் புரியும் .... நான் படுகின்ற வலியின் வலி ......!!! # ஒருதலையாக காதலித்தேன் ... காதலின் இராஜாங்கம் என்னிடம் .... காதலை சொன்னேன் .... என் இராஜாங்கமே சிதைந்தது ..... காதல் ரகசியத்தில் ஒரு துன்பம் .... பரகசியத்தில் இன்னொரு துன்பம் .... காதல் என்றாலே இன்பத்தில் துன்பம் .... கண்டு கொல்லாதே ரசிகனே .....!!! # என் காதலுக்கு காதலியின் முகவரி ... இன்னும் தெரியவில்லை ... அதனால்தான் இதுவரை .....