கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

ஒரு
கவிஞன் தன் வலிகளை....
வரிகளாய் எழுதுகிறான் ....
ஒரு
ரசிகன் அதை ஆத்மா ...
உணர்வோடு ரசிக்கிறான் .....
ஒரு
கவிதை அப்போதுதான் ...
உயிர் பெறுகிறது .....!!!

#

என் உயிரை உருக்கி ....
நான் எழுதும் கவிதைகள்  
என்னை ஊனமாக்கி என் மனதை ...
இருளாக்கி இருந்தாலும் ....
கவிதைகள் உலகவலம் வருகிறது ...
உலகறிய செய்த ரசிகனே ...
உன்னை நான் எழுந்து நின்று ....
தலை வணங்குகிறேன் .....!!!

#

என்
இரவுகளின் வலி......
விழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....
பகலின் வலி அவள் எப்போது ....
இரவில் கனவில வருவாள் ....?
ஏங்கிக்கொண்டிருக்கும் இதயத்துக்கு ...
புரியும் .....
ரசிகனே உனக்குத்தான் புரியும் ....
நான் படுகின்ற வலியின் வலி ......!!!

#

ஒருதலையாக காதலித்தேன் ...
காதலின் இராஜாங்கம் என்னிடம் ....
காதலை சொன்னேன் ....
என் இராஜாங்கமே சிதைந்தது .....
காதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....
பரகசியத்தில் இன்னொரு துன்பம் ....
காதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....
கண்டு கொல்லாதே ரசிகனே .....!!!

#

என்
காதலுக்கு காதலியின் முகவரி ...
இன்னும் தெரியவில்லை ...
அதனால்தான் இதுவரை .....
என்னவளில் பதில் வரவில்லை ...
வெறுத்தவள் மறுத்தவளாகவே....
வாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...
என் கவலையை சொல்லாமல் ....
யாரிடம் சொல்வேன் .....?
என் வாழ்வில் ரசிகனே நிஜம் ....!!!

#

வேதனையில்
சாதனை செய்யப்போகிறேன் ....
என்னை விட தாங்கும் இதயம் ...
இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....
வேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....
என்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....
அவ்வப்போது ஆறுதல் பெறுவது .....
என் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....!!!

#

என்னை உசிப்பி விட்டு ....
வேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....
என்னை காதல் பைத்தியம் ....
வாழதெரியாதவன் ஒன்றில்லாவிட்டால் ...
இன்னொன்று தெரிவுசெய்யதெரியாதவன்....
என்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....!
ரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...
என்னை பைத்தியம் போல் ....
அவர்களுக்கு காட்டுகிறது ....
காதல்கிழியாமலே இருக்கிறது .....!!!

#

பள்ளி
பருவத்தில் மாறு வேடபோட்டியில் .....
பைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....
காதலியால் வாழ் நாள் முழுவதும் ....
முதலிடம் அருமையான வேஷம்.....!
பிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....
கிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...
ரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....
வலிகளில் இன்பம் காண்போம் .....!!!

#

என்னைப்போல் ....
இப்போ மெழுகுதிரி உருகிறது .....
மெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...
கொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...
வாழ்கிறேன் அவ்வப்போது என் ...
அருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...
தருகிறான் ......!!!

#

என்
கவிதைகள் பூத்துகொண்டே .....
இருக்கிறது பூ என்றால் வாடும் ....
மீண்டும் மரத்தில் பூக்கும் ....
பாவம் இதயம்  முள் வேலிக்குள்...
சிக்கிதவிர்க்கிறது.....
இலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...
துளிர்விடாமல் இருக்காது ....
என்னவள் மீண்டும் வருவாள் என்று ...
இந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....
ரசிகனே எனக்கு நீதான் துணை ....!!!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்