இடுகைகள்

செப்டம்பர் 29, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் செய்யாதே ...!!!

நீ என்னில் வாழ்வதும் நான் உன்னில் வாழ்வதும் -தான் காதல்....! என் பிரிந்தாய் ...? குத்துவிளக்கு.. ஏற்றினாலும்... மின்விளக்கு... ஏற்றினாலும்... வெளிச்சம் .... ஒன்றுதான் ... வசதிக்காய் ... காதல் செய்யாதே ...!!! நீ பேசினாலும் பேசாவிட்டாலும் வலிப்பது என் இதயம் தான் கே இனியவன் - கஸல் 79

சாம்பலாகி விட்டேன்

நான் இறந்தால் ... புதைப்பார்களா ...? எரிப்பார்களா ...? என்றோ அவளின் .... வார்த்தையால் ... சாம்பலாகி விட்டேன் ...!!! அழகுக்கு அழகுதருவது காதல் உண்மைதான் ... உன்னோடு இருக்கும் .. காலத்தில் உணர்ந்தேன் ...!!! தட்டிய தீக்குச்சி விரைவாக அணைந்துவிடும் அந்த மன வேதனைதான் எனக்கும் ...!!! கே இனியவன் - கஸல் 78

கே இனியவன் - கஸல் 77

நீ மூட்டிய காதல் தீயை -நீயே கண்ணீரால் அணைக்க சொல்லுகிறாய்...!!! வீட்டு தோட்டத்தில் பூத்தும் வாடியும் ... இருக்கும் மலர்கள் ... உன்னை நினைவுக்கு ... கொண்டு வருகிறது ....!!! உயிர் பிரிந்தபின்பும் வாழும் ஒரே ஒரு விடயம் காதல் ...!!! கே இனியவன் - கஸல் 77

ஏமாளியாக இருக்கவில்லை....!!!

ஏழையாக இருக்கிறேன் ஏமாளியாக இருக்கவில்லை....!!! ஏழ்மையில் வாழ்கிறேன் எடுப்பார் கைப்பிள்ளையக இருக்கமாடேன்....!!! மன்னிக்க மனம் அதிகமில்லை மனம் புண்படுமாறு நடப்பதில்லை....!!! கற்காதவர் மத்தியில் பேசமாட்டேன் கற்றவர் மத்தியில் கவனமாக பேசுவேன்...!!! அறிவாளியாக என்னை கருத மாட்டேன் அறிவை தேடாமல் இருக்க மாட்டேன்....!!! எல்லாம் முடியும் என்னால் என்று கூறமாட்டேன் எதுவும் முடியாது என்று இருக்கமாட்டேன்....!!! எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு... என்பதை நிச்சயம் நம்புகிறேன் .. முடிவு இல்லையென்றால் ...... முடிவில்லையென்று கலங்கமாட்டேன் ..!!! + கவிப்புயல் இனியவன் 

உண்மையை ஊமையாக்காதே ..

உண்மையை ஊமையாக்காதே .. உறவுகளை அதிகம் நம்பாதே .. உணர்வுகள் இறந்தாலும்.... உயிர் இத்துப்போனாலும்.... உறுதியிழந்து வாழாதே.... உறுதி கொள் -நிச்சயம்.... உறுதியான வெற்றிஉண்டென்று.... உன் முகத்தை திருத்து.... உலகத்துக்கு நீ ஒரு கண்ணாடி.... உள்ளத்தில் கசப்பு ஏற்பட்டாலும்.... உதட்டில் உண்மைபேசு.... உலகம் இப்போ விலை உலகம்.... உலகமயத்தில் இது சாதாரணமப்பா .. உன்னை நீ மதிப்பீடு செய்.... உண்மையில் கிடைக்கும் பெரு வெற்றி ....!!!

தாயே என்னை மன்னித்துவிடு

உறுதியில்லாத வாழ்வில்..... உறுதியான நேர்மையுடனும்..... உறுதியான நியாயத்துடனும் ... உண்மையாக வாழ்வாயாக .... என் தாயின்வேண்டுகோள் ...!!! ஆம் என்றேன்...!!! உண்மை பேசினேன்.... உளருகிறான் என்றார்கள்.... நியாயம் சொன்னேன்... நீ என்ன நீதிபதியா....? வினா எழுப்பினார்கள்..... உண்மை கூற ஓயாமல்... உழைத்தேன் -ஆனால்.... கேட்பார் யாரும் இல்லை..... வெடித்தது -இதயம்... வேதனைப்பட்டேன்... வெட்கப்பட்டேன்......!!! ஓயவில்லை நான் ...!!! சமூக சேவை செய்தேன்.... இந்த பூச்சாண்டி வேலையெல்லாம்..... எங்களுக்கு காட்டாதே என்றார்கள்..... சமூக சீர்திருத்தத்துக்காக.... சிந்தனை பேச்சு பேசினேன்.... மாரி தவளைபோல்... கத்துகிறான் என்றார்கள்.....!!! ஓரமாக இருந்து யோசித்தேன்...??? சமூக சிந்தனையை ... சுய சிந்தனையாக்கினேன்.. நியாயம் இல்லாமல்... காலில் விழுந்தேன்.... பிழைக்க தெரிந்தவன்.... என்று பாராட்டினார்கள்......!!! பொருள் வந்தது... பதவி வந்தது.... தலைவா,,,!!! தலைவா ,,,!!! கூச்சல் இட...... ஒரு கூட்டமும்.... சேர்ந்தது........!!! எல்லாம் வந்தது... அன்னையின்... ஆசைபோனது......! மனிதத்தை விற்றுவிட்டு... மனிதனாக நடிக்கிறேன்..... என