இடுகைகள்

மே, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடுகுதான் என்றாலும் காரம் ...!!!

உதவிக்காக நீ பிறர் கதவை திறக்கும் போது - புரிந்து கொள் அவர்கள் சுட்டு விரலை காட்டும் இடத்தில் நிற்க வேண்டும் என்று ....!!! ***************** தோல்விகளை சருகாக .. வாழ்க்கையில் புதைத்தேன் ... வெற்றியின் தளிரை -இன்று அனுபவிக்கிறேன் ....!!! ***************** பிறர் கருத்தை விமர்சித்தால் தன் கருத்தை மறைகிறான் பிறர் விமர்சனம் - தன் வெற்றியை பறி கொடுக்கிறான் ...!!! ******************* வெற்றியே தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது ஒருவரை மனபயமே ...!!! தோல்வியை தொடர்ந்து சந்திக்க மனபலம் தேவை ...!!! ******************* உலகின் அனைத்து தடை கதவுகளை திறக்க என்னிடம் உள்ளது திறவு கோல் தன்னம்பிக்கை ......!!! ******************* வெற்றியின் மூல மந்திரம் தினமும் அதை அடையணும் என்ற மன உறுதி தான் ...!!! ********************* உலகில் பலர் வெற்றியின் விளிம்புவரை சென்று திரும்பியவர்கள் - காரணம் பேராசைதான் .....!!! ********************* மலை ஏறுவதை விளையாடாக எடுக்கவேண்டும் - மலைபோல் நிமிர்ந்து நிற்பதை வாழ்க்கையாக வாழவேண்டும் ....!!! *********************** அதிக ஆச

உன் கண்ணீர் மழையில்

உன் கண்ணீர் மழையில் நனையாமல் இருக்க - என் நினைவு குடையை விரிக்கிறேன் * * கே இனியவன் அணுக்கவிதை

யாரையும் பார்க்க மாட்டேன்....!!!

நானும் சாரை பாம்புதான் உன்னை தவிர வேறு யாரையும் பார்க்க மாட்டேன்....!!! * * கே இனியவன் அணுக்கவிதை

இதயத்துக்குள் இருப்பதால் ...!!!

உன்னை யாரும் கடத்த துன்புறுத்த முடியாது -என் இதயத்துக்குள் இருப்பதால் ...!!! * * கே இனியவன் அணுக்கவிதை

என் இதயத்தை ...!!!

இழக்க கூடாத ஒன்றையே  இழந்து விட்டேன் உன்னிடம்  என் இதயத்தை ...!!! * * கே இனியவன் அணுக்கவிதை

அணுக்கவிதை எழுதுகிறேன்

உன்னை அணு அணுவாக  காதலிக்கிறேன் -உனக்கு  அணுக்கவிதை எழுதுகிறேன்  * * கே இனியவன் அணுக்கவிதை 

பூச்சியமாக்கி விடாதே ....!!!

நானும் ஒரு கோடீஸ்வரன் உன் நினைவுகள் கோடிக்கணக்கில் சேமித்து வைத்திருக்கிறேன் ...!!! சேமிப்பு குறைந்தால் நம் காதல் முதலீடு குறைந்து விடும் உயிரே ...!!! வாழ்க்கையையே பூச்சியமாக்கி விடாதே ....!!! + + கே இனியவனின் காதலால் காதல் செய்கிறேன் உயிரே ..!

ஒவ்வொரு நொடியும் சுவாசிக்க .....!!!

உன்  நினைவுகளை கவிதையாய்  எழுதினேன் தினமும் வாசிக்க உன்  நினைவுகளை ஓவியமாக  வரைந்தேன் தினமும் ரசிக்க  உன்  நினைவுகளை இதயத்தில்  சுமக்கிறேன் ஒவ்வொரு  நொடியும் சுவாசிக்க .....!!! + + + கே இனியவனின்  காதலால் காதல்  செய்கிறேன் உயிரே ..!

நிறுத்தி விடாதே ...!!!

என்  இரவுகளை தொலைத்தவள்  என் கனவுகளை கலைத்தவள் இரவுகளை ஆக்கிரமித்து  தன் கனவுகளை மட்டும்  தந்தவள் - நீ ....!!! இறைவா  இன்று தூக்கத்தை தொலைத்து  விடாதே இன்று அவள் கனவில்  வருவதை நிறுத்தி விடாதே ...!!! + + கே இனியவனின்  காதலால் காதல்  செய்கிறேன் உயிரே ..!

கண்ணீர் உணருதடி...!!!

மின்னுகின்ற போதெல்லாம்  உன் கண் என் மீது பட்ட  வீச்சு உணருதடி ....!!!  காற்று  வீசுகின்ற போதெல்லாம்  உயிரே நீ என் அருகில் இருந்து  என் மீது விட்ட மூச்சு காற்று  உணருதடி ....!!!  மழை பொலிகின்ற  போதெல்லாம் உயிரே  உன்னை நினைக்கும் போது  வரும் ஆனந்த கண்ணீர்  உணருதடி...!!! + + கே இனியவனின்  காதலால் காதல்  செய்கிறேன் உயிரே ..!

காதல் செய்வோம் .....!!!

நீ தந்த நினைவு பரிசு என் வீடு முழுதும் நிறைந்திருக்க - நீ தந்த நினைவு என் இதயம் முழுவது நிறைந்து இருக்கிறது - நீ மட்டும் எங்கே சென்றாய் உயிரே வா காதலால் காதல் செய்வோம் .....!!! + + கே இனியவனின் காதலால் காதல் செய்கிறேன் உயிரே ..!

ஆத்ம வரிகள் .....!!!

காதலில் பொறுமையை .. கடைப்பித்தது தப்பானது.... நீ கிடைப்பாய் என்று இருந்து... என் வாழ்க்கையே .... கானல் நீராகி விட்டது .... என் கல்லறைப்பூவில் ... உன் நினைவுகள் தான் ... ஆத்ம வரிகள் .....!!! + + + கே இனியவனின் காதலால் காதல் செய்கிறேன் உயிரே ..!

ஒரு இதயம் போதவில்லை ...!!!

இறைவா ..? இரண்டு கண்னை கொடுத்து ... என்னை கலங்க வைத்தவனே...!!! எனக்கு இரண்டு இதயம் கொடு ... அவள் நினைவுகளை சுமக்க .. ஒரு இதயம் போதவில்லை ...!!! + + + கே இனியவனின் காதலால் காதல் செய்கிறேன் உயிரே ..!

நினைவுகள் ஒட்டி நிற்கின்றன ...!!!

நான் காதல் பிச்சைகாரன் என்னிடம் இருந்த எல்லாவற்றையும் இழந்து உன்னை பெற்றேன் ....!!! இப்போ உன்னையும் இழந்து நிற்கிறேன் ...!!! கிழிந்த சட்டைபோல் சில நினைவுகள் ஒட்டி நிற்கின்றன ...!!!   + + + கே இனியவனின் காதலால் காதல் செய்கிறேன் உயிரே ..!

தீர்ப்பை தள்ளிப்போடுவதுபோல் ..?

உன் இதயம் என்ன காதல் சிறைச்சாலையா ...? என்னை கைது செய்து விலங்கிட்டுருக்கிறாய் .... ஒன்றில் ஆயுள் கைதியாக்கு ... தூக்கு தண்டனை கைதியாக்கு ... தீர்ப்பை தள்ளிப்போடுவதுபோல் மௌனத்தில் இருக்காதே ...!!! + + + கே இனியவனின் காதலால் காதல் செய்கிறேன் உயிரே ..!

என்னை காதலித்தத்தற்கு நன்றி ...!!!

சந்தோசப்படுகிறேன் உயிரே இதுவரை காதலை  சுமந்தேன் இப்போ நீ தந்து விட்டு சென்ற வலிகளை சுமர்ந்து கொண்டு இருக்கிறேன் ....!!! உன் வலிகளை சுமக்கும் கூலியாளாய் என்னை காதலித்தத்தற்கு நன்றி ...!!! + + + கே இனியவனின் காதலால் காதல் செய்கிறேன் உயிரே ..!

இதய ... கோயிலாக வாழ்கிறேன் ....!!!

உன்னோடு பேசிய வார்த்தைகள் கண்ணீராய் வடிகிறது உன் நினைவுகள் இதயத்தை ரணமாக மாற்றுகிறது ....!!! ஒருபோது என் இதயம் கல்லறையாகாது .... நீ வருவார் என்று காத்திருக்கிறேன்... இதய ... கோயிலாக வாழ்கிறேன் ....!!! கோயிலின் மூல கடவுள் நீ + உயிரே எங்கிருக்கிறாய் ..?            

இறந்து கொண்டிருக்கிறேன் ...!!!

நீயும் நானும்... எத்தனை முறை .... சண்டையிட்டோம் ... வலியாக இருந்தது - நீ அருகில் இல்லாத தருணத்தில் தான் அதன் சுகம் தெரிகிறது ....!!! நான் இறப்பதற்கு முன் உன்னை மீண்டும் பார்க்க வேண்டும் .....!!! இறக்கும் வரை உன் நினைவுகளால் இறந்து கொண்டிருக்கிறேன் ...!!! + உயிரே எங்கிருக்கிறாய்            

தரிசனம் தந்து விடு ....!!!

அன்பே நாம் இருவரும் ... சேர்ந்திருக்கையில் அடிகடி ... சொல்வாய் உங்கள் மடியில் ... இறக்கணும் உயிரே என்பாய் ...!!! உயிரே நான் இறக்க முன்.... உன்னை மீண்டும் ஒரு முறை .... பார்க்கவேண்டும் உயிரே ..... எங்கிருகிராய் உயிரே .. தயவு செய்து ஒருமுறை தரிசனம் தந்து விடு ....!!!            

உயிரே எங்கிருக்கிறாய் ..?

உலகிலேயே ரொம்ப கொடுமை காதல் தோல்வியல்ல ....!!! காதலித்து கொண்டிருக்கையில் காதலர் ஒருவருக்கு ஒருவர் முகம் பார்க்காமல்  பிரிந்து முகத்தை தேடுவதுதான் .. உயிரோடு இருந்தும் இரு மனங்கள் சடலமாக வாழ்வதே ....!!! + உயிரே எங்கிருக்கிறாய் ..?