இடுகைகள்

ஆகஸ்ட், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலுக்கு நீ சொல்லும் விதி...?

என்னை காதலித்தது உன் தலைவிதி என்கிறாய் காதலுக்கு நீ சொல்லும் விதி...? உன்னில் காதல் தெரியும் என்று இருக்கிதேன் -என்னை ஏமாற்றி விட்டாய் ...!!! வானத்தில் அசைந்த முகில் -நீ அசைந்துகொண்டே இரு வானம் அப்போதான் தெரியும் கஸல் 425

தூண்டில் போட்டு பிடிக்கபோகிறாயா...?

காதலின் அதி உச்ச பரிசு நீ தந்திருக்கிறாய் ...!!! மறக்க முடியாத வலி ...!!! வண்டுக்கு பூபேல் ஆசை பூவுக்கு வண்டுமேல் ஆசை - உனக்கு என் மீது எப்போதும் இருந்ததில்லை காதல் ...!!! ஆகாயத்தில் நான் விண்மீன் - நீ தூண்டில் போட்டு பிடிக்கபோகிறாயா...? கஸல் ;424

காதலிப்பதாக இல்லை ...!!!

என் நினைவுதான் உனக்கும் வாழ்க்கை என்றே சொல்வாய் -இப்போ காதலை வெறுக்கிறாய் ...!!! உனக்கு தெரியாது உன்னைவிட காதலை நேசித்தேன் - நீ என்னை கூட காதலிப்பதாக இல்லை ...!!! நிலவில் காதல் கதை கூறுவாய் என்றிருந்தேன் உச்சி வெயில்லில் காதல் கதை சொல்கிறாய் ...!!! கஸல் ; 423

காதலுக்கு உன் கண்

எல்லா பூக்களும் பூத்து குலுங்கும் போது -நீ மொட்டாய் இருக்கிறாய் ...!!! காதலுக்கு உன் கண் நீராக இருக்கும் என்றிருந்தேன் -நீயோ மரமாக வளர்ந்தே விட்டாய் ...!!! பூவின் மேல் பனித்துளி இருந்தால் பூவுக்கு இன்பம் கல் துண்டிருந்தால் ....? கஸல் 422

காதல் கடிதத்தை

இறந்தால் தான் சமாதியா ...? உன் நினைவுகள் என்னை கொல்கிறது...!!! காதல் கேட்டால் கிடைக்கும் கடைப்பொருள் இல்லை நீ கேட்டால் தருகிறாய் ...!!! காதல் கடிதத்தை வர்ணங்களால் எழுதுகிறேன் -நீ கறுத்த மையால் எழுதுகிறாய் ....!!! கஸல் ;421

கண்ணீராய் வெளியேறுகிறாய்...?

உணர்வைப்போல் உனக்கும் வரைவிலக்கணம் இல்லை ....!!! உடலில் எங்கு இருக்கிறது உயிர் ...? இதயத்தில் எங்கு இருக்கிறாய் நீ ....? என் கண்ணில் இருக்கும் நீ ஏன் கண்ணீராய் வெளியேறுகிறாய்...? கஸல் 370

அதில் காதலர்கள்

தெரிந்தும்  தொலைவதுதான்  காதல் ....!!! நினைவுகள் அழியாது  கனவுகள் குலையாது  உண்மைக்காதல் ...!!! உலகமே நாடக களம்  அதில் காதலர்கள்  காமடி நடிகர்கள் ....!!! கஸல் 369

நீ வைரக்கல்

நீ வைரக்கல் வடிவாகவும் விசமாகவும் இருக்கிறாய் ....!!! ஞாபங்கள் எனக்கு கற்கள் -உனக்கு பஞ்சு .....!!! நீ  என்னை விட்டு விலகமுதல் -உன் நினைவுகள் என்னிடம் உறங்கிவிடுகின்றன ....!!! கஸல் ;368

காற்றுக்கு நன்றி

காற்றுக்கு நன்றி சொல்வேன் என் கண்ணீரை அவள் காணமுன்னர் ஆவியாக்கியதற்கு ....!!!

உன்னோடு பழகிய

உறக்கத்தை தொலைத்து இத்தனை இரவுகள் ஏன் என்பதை கண்டறிய என்னும் எத்தனை நாட்களோ ...? உன்னோடு பழகிய நாட்கள் வரையும் தொடரும் போல் ...!!!

இன்றைய ஹைக்கூகள்

கடவு சீட்டில்லாமல் உலகை சுற்றிவரும்         பறவை ************************* மலர் ஈசல்   ஒருநாள் ஆயுள் ************************** இரண்டு குரலை இணைக்கும் தரகர்      தொலைபேசி

காதல் ஒரு கணிதம்

கண்ணால் ஓவியம்  வரைந்தவள்  ஓலமிடிக்கிறாள் ....!!! காதல் ஒரு கணிதம்  வேதனை கூட்டல்  போதனை கழித்தல்  உன்னை கண்டநாள்  முதல் -என் கவிதை  அழுகிறது ....!!! கஸல் 367

கவிதையை விடுவதும்

காதலை விடுவதும்  கவிதையை விடுவதும்  உன்னை விடுவதும்  ஒன்றுதான் ......!!! சந்தனக்கட்டையில்  வாசம் வரவேண்டும்  இங்கு விறகுதான்  வருகிறது .....!!! தண்ணீரில் உப்பை  கொட்டுவதும் ஒன்றுதான்  உன்னை காதலிப்பதும்  ஒன்றுதான் ....!!! கஸல் 366

சினிமா பைத்தியம்

நீ  பேசிய வார்த்தைகள் தான்  பாடல் வரியாக வருகின்றன  நீ  செய்த நளினங்கள் தான்  பட காட்சியாக வருகின்றன  நீ  உடுத்த உடைகள் தான்  ஆடை அலங்காரமாக இருக்கின்றன  நீ  இப்பவும் அதேபோல் இருக்கிறாய்  உன்னை சினிமா பைத்தியம்  என்கிறது சமூகம் ...!!!

தன்னம்பிக்கை ....!!!

சிப்பிக்குள் முத்து  இருப்பதுபோல்  தோல்விக்குள்  இருக்கிறது -வெற்றி ...!!! குப்பைக்குள்  குண்டுமணி  இருப்பதுபோல்  உன் மனதினுள்  இருக்கிறது  தன்னம்பிக்கை ....!!!

நிறைய அண்ணன்களின் ...?

உன்னை கண்டவுடன்  காதலிக்கவே தோன்றியது  என் மனம் ...........!!! என்னசெய்வது -உணர்வை விட ... என் குடும்பக்கடமை தடுக்கிறது.....  திருமணமாகாத தங்கைகள்....  முதுமையில் இருக்கும் பெற்றோர் ... என்னையே நம்பி படிக்கும் தம்பி ... இப்படிதான் ......  எத்தனையோ அண்ணன்கள்  காதலை புதைத்துவிட்டார்கள் .... நிறைய அண்ணன்களின் ... இதயம் மயானம் தான் .....!!!

முற்களையல்ல...!!!

உன்னை  பார்க்காமல்  போக முகத்தை  திருப்பினேன்  இதயம் உனக்கும்  கைகாட்டுகிறது ...!!! பூக்களை தேடித்தான்  தேனிவரும்  முற்களையல்ல...!!! காதல் கிணறில்  இருந்து ஊற்று  வரவேண்டும் -இங்கு  காற்று வருகிறது ....!!! கஸல் 365

உனக்கு அந்திநேரம் ....!!!

நம் காதல்  அமர்முடுகளில் செல்ல  வலிகள் ஆர்முடுகளில்  செல்கிறது ....!!! காதல் ஒன்றும்  விஞ்ஞானம் இல்லை  நிரூபித்துக்காட்ட ...!!! நம் ஞானம் ....!!! காதல் எனக்கு  விடியல் காலை  உனக்கு அந்திநேரம் ....!!! கஸல் 364

உன் வரவு கனவுதான் ..!

நிலாவை தூக்கத்துக்கு  பயன் படுத்தினார் -தாய்  துக்கத்துக்கு  பயன்படுத்துகிறாள்  காதலி .....!!! நீ வரும் வழியில்  காத்திருக்கிறேன்  நீயோ வெளியே  வரமறுக்கிறாய் ....!!! உன் வரவு  கனவுதான் -உன்  செலவு கண்ணீர்தான் ...!!! கஸல் 363

நினைவு கலவைதான் காதல் .....!!!

பூக்களும்  முற்களும் கலந்த நினைவு  கலவைதான்  காதல் .....!!! காதலுக்குள்  நீந்தி கரை சேர்ந்தவர்  யாருமில்லை ....!!! நான்  கடலாக இருந்தால்  நீ  அலையாக  இருக்க வேண்டும்  மணலாக இருக்கிறாய் ...!!! கஸல் ;362

மறக்க கூடிய காதல்

மறந்த காதல்  என்ற ஒன்று இல்லை  மறக்க கூடிய காதல்  இதுவரை வரவில்லை ....!!! இளநீருக்குள் உள்ள  தண்ணீர் போல்  என் இதயத்துக்குள் -நீ  வார்த்தையும்  இசையும் சேர்ந்தால்  பாடல் வரவேண்டும்  உனக்கு ஏன் இன்னும்  வரிகள் கூட வரவில்லை ...? கஸல் ;361

கவிதைக்கேற்ற காதலி

படம்
என் காதலி-கவிதை..! நீயல்ல....!!! என் கவிதைக்கேற்ற காதலியும் நீயல்ல....!!! என் கவிதைக்கேற்ற காதலி கிடைக்கும் வரை காத்திருப்பேன் காதலி இல்லாது போனாலும் கவிதையாவது மிஞ்சும் ...!!!

இளவட்டங்களே...

படம்
இளவட்டங்களே... காதல் என்பது அடகு கடைதான் முதலில் சிரிப்பின் மூலம் அடகுக்கடை திறக்கப்படும் ....!!! அடுத்து நீ சிரிப்பை அடகுவைப்பாய் ...!!! இதயத்தை அடகுவைப்பாய் ...!!! வாழ்க்கையை அடகுவைப்பாய் ...!!! கடைசியில் வெறும் கையுடன் நின்று விடாதே ....!!!

என் இதயம்விறைத்து விட்டது ....!!!

படம்
என் குளிர்ந்த நினைவுகளால்  உன் பதிலை எதிர்பார்த்து  என் இதயம் உறைபனியாக  விறைத்து விட்டது ....!!! ஒரு வார்த்தை சொல்லி  என் இதயத்தை காப்பாற்று ...!!! இதயத்தை வெளியில் பார்க்கும்  சக்தி மட்டும் இருக்குமென்றால்  என் இதயத்தின் உறைந்த நிலை  உனக்கு புரியும் .....!!!     

கண்ணே பேசிப்பழகு

படம்
கண்ணே பேசிப்பழகு மௌனம் அழகுதான் காதலுக்கு அது உயிர் கொல்லி -எத்தனை முயற்சிகள் உனக்காக நீயும் எனக்காக  .....!!! நண்பர்கள் மத்தியில் நான் நிற்கையில் ஓரக்கண்ணல் பார்த்தாய் மெல்லிய சிரிப்பு சிரித்தாய் அன்றே செத்தவன் நான் ...!!! உனக்கு பிடித்தது அறிந்தேன் உனக்காக நான் விரும்பாத்தை-எல்லாம் செய்கிறேன் . நண்பர்கள் மத்தியில் கிண்டல் பெற்றோர் மத்தியில் திட்டு அத்தனையும் உனக்காக செய்கிறேன் ...!!! தோழியிடம் என்னை பிடித்திருக்கு என்று சொன்ன நீ ஏன் என்னிடம் சொல்லுகிறாயில்லை கண்ணே பேசிப்பழகு -என் உயிர் போகிறது .....!!!                        

ஒரு நாள் காதலா ....?

படம்
என்ன நடந்தது உனக்கு நேற்று சிரித்தாய் இன்று முறைக்கிறாய் ஈசலின் ஒருநாள் வாழ்க்கைபோல் உன் ஒரு நாள் காதலா ....?

கண்ணிலே காந்தத்தையும் ...

படம்
கண்ணிலே காந்தத்தையும் ... கண்ணிமையிலே.... குண்டூசியையும் ..... வைத்திருந்தவளே ...!!! காந்த கண்ணால் கவர்ந்து கண்ணிமைத்தபோது குண்டூசியால் குற்றி விட்டாய் ...!!!

கனவிலாவது வந்துவிடு ...!!!

படம்
காதலில்  காகிதப்பூ  தந்தவள் நீ தான்  வாடாமல் இருக்கிறது ....!!! உன் முன்னால் -நான்  பிச்சைக்காரன் தான்  கனவிலாவது வந்துவிடு ...!!! ஓடத்தில் போவோம்  காதல் சுகமாக -நீ  ஓட்டையிட்டு வேடிக்கை  பார்க்கிறாய் ....!!! கஸல் 360          

காதலில் தூண்டல் நீ

படம்
காதலில் தூண்டல்  நீ  துயரம் நான் ....!!! எல்லா வாசனை  இல்லாத பூக்களில்  உருவாக்கிய  வாசனை பூ நீ ....!!! கடிவாளத்துடன்  காதலித்தேன் -நீ  கடிவாளத்தை தூக்கி  எறிகிறாய் ....!!! கஸல் 359              

கள்ளிபூவாக

படம்
கள்ளிபூவாக  இருந்தாலும்  அழகாக இருக்கிறாய் ...!!! நீ பேசிய  ஒவ்வொருவரியும்  என் பாடபுத்தகத்தின்  வரிகள்  பார்த்தவுடன்  காதல் வரவேண்டும்  நீ பார்த்தவுடன்  பயம் வருகிறது ....!!! கஸல் 358      

நீ உதிர்ந்த பூவை தருகிறாய் ....!!!

படம்
நீ தந்த காயங்கள்  எல்லாம் இப்போ  காதல் வலி  கவிதைகள் ....!!! உன் பார்வையில்  சிக்கிய நான்  புலம்பிக்கொண்டு  திரிக்கிறேன் ....!!! உன்னிடம் அழகான  மலரை எதிர் பார்த்தேன்  நீ உதிர்ந்த பூவை  தருகிறாய் ....!!! கஸல் ;357            

காதல் சோகம் ....!!!

படம்
நிலவில் கறைகள் நிலாவுக்கும்  காதல் சோகம் ....!!! தண்ணீரால்  தாகம் தீரவேண்டும்  தண்ணீரே  தாகமாகிவிடக்கூடாது  நான் உன்னை ஜோதியாக  பார்க்கிறேன்  நீயோ  புகையாக இருக்கிறாய்  கஸல் ;356            

ஒற்றை ரோஜா என் சின்னம்

படம்
அவள் என்னை ஏமாற்ற மாட்டாள் ...!!! நானும் அவளிடம் ஏமாற மாட்டேன் ....!!! காதல் என் உயிர் உள்ளவரை இருக்கும் ....!!! காதலில் கண்ணீர் வராது ஆனால் துடிப்பு இருக்கும் ...!!! ஒற்றை ரோஜா என் சின்னம் இப்போது புரியும் உங்களுக்கு என் காதல் .....!!!

என்னருகில் யாருமில்லையே ....!!!

படம்
ஓ வெண்ணிலாவே உன் காதல் கதையும் என் காதல் கதையும் ஒன்றுதான் என்னவனும் பதினைந்து நாள் சந்திக்கிறான் பதினைந்து நாள் மறுக்கிறான் ...!!! உன் அருகில் ஆயிரம் நட்சத்திர  தோழிகள் என்னருகில் யாருமில்லையே ....!!!

காதல் மீனை தேடுகிறாயே...?

படம்
தெளிவாக இருந்த இதயத்தை குழம்பிய குட்டையாக்கிவிட்டு குழம்பிய குட்டைக்குள் காதல் மீனை தேடுகிறாயே...?

நகைசுவையாய் ஒரு கவிதை

படம்
ஒரு நிமிடத்தில்  எழுபத்திரண்டு தடவை  துடித்த இதயம் ...!!! உன்னை கண்டால்  கூடுகிறது துடிப்பு ...!!! உன்னை  காணவில்லையென்றால்  குறைகிறது துடிப்பு ...!!! இதற்கு வைத்தியம்  இல்லையென்று வைத்தியர்கள்  கைவிரித்து விட்டார்கள் ...!!! கடைசியாக சொன்னார்கள்  ஒரு வார்த்தை உன்னை  காதல் தெய்வம் தான்  காப்பாற்ற வேண்டுமென்று ...!!! 

நம்மில் இருக்கும் அன்னியர்கள் ....!!!

படம்
நீ உனக்காக வாங்கிய அடியைவிட சிறுவயதில் எனக்காக வாங்கிய அடி அதிகம் என் உடன் பிறப்பு கூட உன்னைப்போல் என்னை காப்பற்றியது இன்றுவரையில்லை ...!!! நான் செய்யும் தவறுக்கு தலையாட்டமாட்டாய் ...!!! நான் செய்யாத குற்றத்தை தாங்கிக்கொள்ளமாட்டாய் நட்பு என்றால் -தீமைக்கு துணைபோகக்கூடாது நன்மைக்கு துணைபோகாமல் இருக்கவும் கூடாது என்பதை உணரவைத்தவன் ...!!! எதுவென்றாலும் அவனுக்கு நடக்கட்டும் என்பவன் நம்மில் இருக்கும் அன்னியர்கள் ....!!! எதுவுமே அவனுக்கு நடந்துவிட கூடாது என்று நினைப்பவன் -நண்பன் ....!!!

சுதந்திர ஹைக்கூக்கள் -10

நியாயமான  பேச்சு நீதியான பேச்சு பேச்சு சுதந்திரம் ************************** சரியான எழுத்து சமுதாய சீர் திருத்தம் எழுத்து சுதந்திரம் ************************** நியாயமான கூலி எங்கும் உழைப்பது உழைப்பு சுதந்திரம் *************************** மக்கள் மன்னர்கள் மக்களுக்கே ஆட்சி அரசியல் சுதந்திரம் **************************** நல்ல தலைவன் நல்ல ஆட்சி வாக்கு சுதந்திரம் *************************** விரும்பிய கல்வி விரும்பிய வேலை மாணவன் சுதந்திரம், **************************** அடைபட்ட கூடு பறக்க துடிக்கிறது கிளியின் சுதந்திரம் ***************************** கலப்பு இல்லாமல் மரபு மாறாமல் மொழி சுதந்திரம் ***************************** அரசியல் தலைவர் சுதந்திரமாக நடமாடுதல் தூய சுதந்திரம் **************************** மதம் மொழி அற்றது சாதிவேறுபாடு அற்றது மனித சுதந்திரம் 

கல்லால் எறிகிறாய் ....!!!

படம்
காதலில் கண்ணாம் பூச்சியிருக்கும் காதல் கண்ணிருந்தால் நீ ஏன் விளையாடுகிறாய் ...? உன்னை காதலித்த தினம் என் வாழ்க்கை மாறிய தினம் .....!!! நான் கண்ணாடியாக இருக்கிறேன் -நீயோ கல்லால் எறிகிறாய் ....!!! கஸல் ;355

நீ -மாறிவிடாதே ,,,,!!!

படம்
நீ வரும் பாதையை  பார்த்துக்கொண்டு இருப்பது  என் வேலையாகி விட்டது ...!!! உன்னை என்று பார்த்தேனோ  அன்று கையெழுத்தும் மாறியது  தலையெழுத்தும் மாறியது  நீ -மாறிவிடாதே ,,,,!!! காற்றாக வருவாய் என்று  பட்டமாக பறக்கிறேன்  மழையாக பொழிகிறாய் ...!!! கஸல் 354

கவிதைக்கு தான் கற்பனை வேண்டும்

நீ வானம்  நான் நீர்  அழுதுதானே  ஆகவேண்டும் ....!!! கவிதைக்கு தான்  கற்பனை வேண்டும்  காதலுக்கு இல்லை ...!!! வைரமாக இருந்து  மினுங்க வேண்டிய நீ  கண்ணாடிபோல்  மின்னுகிறாய் ....!!! கஸல் 353   

காதல் பற்றி எரிகிறது

படம்
காதல் பற்றி எரிகிறது  நீ கற்பூரம் போடுகிறாய்  தந்தி தானே நிறுத்தம்  நான் கடிதம் தானே  போட்டேன் ....? உன்னை ஆராதனை  பூவாக நினைக்கிறேன்  நீயோ கோயிலாக இருக்க  விரும்புகிறாயில்லை ....!!! கஸல் 352  

அடம் பிடிக்கிறாய் ....!!!

படம்
உன் எண்ண மாற்றத்தை பொறுத்து கவிதை மாற்றமுடியாது .....!!! கண்ணீரை நிறுத்தும் காதல் இதுவரை தோன்றவில்லை ....!!! எனது ஒவ்வொரு கனவும் என் கவிதை -நீயோ கனவில் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறாய் ....!!! கஸல் ;351  

அவள் சிரிச்சா போச்சு ....!!!

படம்
உன்னை மறந்து விட்டேன் .... உன் நினைவுகளை ..... இழந்து விட்டேன்..... உன்னோடு  பேசுவதை ..... நிறுத்திவிட்டேன்-என்று....!!! பேசிய வார்த்தைகள் .... அத்தனையும் செத்துவிட்டன.... நீ மீண்டும் ஓரக்கண்ணால்.... பார்த்து சிரித்த போது.... குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு.... மட்டுமல்ல ....!!! காதலன் பேச்சு -அவள் சிரிச்சா போச்சு ....!!!        

உன் காதலை பெறுவதற்காக ...?

படம்
உன் காதலை பெறுவதற்காக பட்ட பாட்டை மீட்டு பார்க்கிறேன் .....!!! உன் வீட்டுப்பக்கம் வர காரணம்இல்லாத  ஒன்றை காரணமாக்கி வருவேன் ....!!! உன் அருகு வீட்டில் அந்த தெருவில் இல்லாத ஒருவரை உன் வீட்டை பார்த்தபடி விசாரிப்பேன் ....!!! அப்படியாரும் இல்லை என்று சொன்னபடி -உன் பெயரை அழைத்து கூப்பிடுவர் என் நோக்கம் நிறைவேறும் நீ வருவாய் ....!!! உன்னை பார்த்ததே பாக்கியம் என்று நான் சென்றுவிடுவேன் காலத்தில் நீயும் உணர்ந்து விட்டாய் அயலவரும் புரிந்துவிட்டார் ...!!! இப்படி சின்ன சின்ன குறும்புகளை செய்துதான் உன்னை அடைந்தேன்  இத்தனை வருடங்களுக்கு பின் அந்த நாள் நினைவை மீட்பதில் ஒரு சுகம் உயிர் உள்ளவரை இருக்கத்தான் செய்கிறது ..!!!

உன் ஈரமான பார்வைதான்..... ?

படம்
உன்  கண்ணில் இருந்த ..... ஈரமான பார்வைதான்.....  என் இதயம் என்னும்......  மண்ணில் விழுந்து .... காதல் என்னும் பயிரை.....  உருவாக்கி வைத்தது ....!!! உன்  அன்பான் வார்த்தைகள்  காதல் என்னும் பயிருக்கு  வளமான தரமான  உரமாக வந்து வளர வைத்தது ....!!! உன்  நினைவுகள் கனவுகள்  சிறு மரமாக இருந்த  காதலை விருட்சமாக்கியது ....!!! உன்  வலியான வார்த்தைகள்  இடையிடையே காதல் மரத்தில்  இலையுதிர்வை ஏற்படுத்தின  என்றாலும் -நம் காதல்  மரம் ஒன்றும் முருங்கை  மரமல்ல விரைவில்  முறிவதற்கு .......!!!    

உண்மைக்காதல் காமத்துக்கு ஏங்காது ....!!!

படம்
நீண்ட நாளுக்கு பின் ... அவர்கள் இருவரும் .... சந்திக்கின்றனர் .....!!! தனிமையான இடம் .... இடையூறுகளும் .... எதுவுமில்லை .... நீண்டநாள் எதிர்பார்த்த ... சந்தர்ப்பம் -அவளும் ... ஆவலுடன் -இவனும் ... ஆவலுடன் காத்திருந்தனர்....!!! மாலைசூரியன் மறைகிறான்  பறவைகளும் தம் இருப்பிடத்துக்கு  செல்கின்றன  பறவைகள் கூட ஜோடியாக  தான் செல்கின்றன அந்த  காட்சியை அவள் ஓரக்கண்ணால்  பார்க்கிறாள் ...!!! இதமான நேரம்  சுகமான பொழுது ...!!! அவன் நெருங்க  அவள் விலக அழகான  ஒரு ஊடல் ...!!! உண்மைக்காதல் காமத்துக்கு  ஏங்காது ....!!! உன்னதமான ஒரு முத்தத்திற்கு  ஏங்கியது .....!!!                                

அழகு எனக்கு மட்டும் ...!!!

படம்
எப்படியெல்லாம்  உன்னை கற்பனையில்  நினைத்தேன் -இப்போதுதான்  புரிந்தது  கற்பனைக்கும்  நியத்துக்கும் உள்ள வேறு  பாடு ....!!! கற்பனையைவிட நீ  அழகு எனக்கு மட்டும் ...!!!

துடிதுடிக்கிதடி ....!!!

படம்
தூங்கினான் கனவில்  வந்து தட்டி எழுப்புகிறாய்  விழித்திருந்தால்  மௌனமாகி கொள்ளுகிறாய்  காதலில் துடிப்பு  அவசியம் ஆனால்  துடிப்பே வாழ்க்கையாகி  துடிதுடிக்கிதடி ....!!!   

காதல் எங்கே ...?

படம்
நான் தலைவன்  நீ தலைவி  காதல் எங்கே ...? மயில் ஆடும் போது  தோகை விரித்தால் போல்  உன் முகம் ...!!! நான் காதலில்  இறக்கிறேன்  நீ இப்போ தான்  காதலில் பிறக்கிறாய் ...!!! கஸல் 350             

இதயங்கள் தான் காயப்படுகின்றன ...!!!

படம்
நினைப்பது  நடப்பது  வாழ்க்கையில்லை  வாழ்க்கை நினைப்பதே  நடக்கும் .....!!! காதல் தோற்றதில்லை  இதயங்கள் தான்  காயப்படுகின்றன ...!!! கண்முன் வரும்  நீ  காதல் முன் வரவில்லை  வர காலம் எடுக்கிறாய் ....!!! கஸல் ;349      

உன் காதல் உண்மையா ...?

படம்
உலகம் காதலால்  தான் இயங்குகிறது  நாம் மட்டும் என்ன ...? உனக்காக இதயம்  துடிக்கிறது  எனக்கு உண்மை சொல் உன் காதல்   காதல் உண்மையா ...? நீ  கனவாக நினைப்பதை  நான் காதலாக  நினைக்கிறேன் ....!!! கஸல் ;348    

தூய காதல் ....!!!

படம்
நினைக்கின்ற போது  மட்டும் வருவதில்லை  தூய காதல் ....!!! தான் கூட்டில்  இடம் கொடுத்த  குயில் போல்  உன் இதயத்தில்  நான் வசிக்கிறேன் ....!!! எனக்கு காதல்  தூரபயணம்  உனக்கு தொடக்க புள்ளி ....!!! கஸல் ;347           

காதல் கொண்டேன்

படம்
காதல் கொண்டேன்  காதலை -நீ  காதலிக்கவில்லை  கண்ணீரில் வரும்  பூ அழகானது  காதலித்தால் ....!!! நான் உன்னை  விரும்புகிறேன்  நீ என்னை விரும்புகிறாய்  காதல் ஏன் நம்மை  காதலிக்க வில்லை ....!!! கஸல் 346   

உன் வரவு மாட்டுமே...?

படம்
வந்துபார் கண்ணே  என் வீட்டில் -உன்  பெயரையே பலமுறை  சொல்லி சொல்லி  பாடலாக பாடுகிறேன்  நீ தந்த புகைப்படம்  எனக்கு சாமிப்படம்  நீ தந்த பொருட்கள்  என் வீட்டில் அலங்கார  பொருட்கள் ...!!! உன் வரவு மாட்டுமே  என் வீட்டில்  வெற்றிடமாக  உள்ளன ....!!!         

உன் இதயத்தில்

படம்
ஓடும் மணிக்கூட்டில்  நிமிடகம்பி நீ நினைவுகளும்  ஓடிக்கோண்டே  இருக்கிறது .....!!! உன்னோடு  வாழ்வதை விட  கவிதையோடு வாழ்வது  சுகமாக உள்ளது ....!!! உன் இதயத்தில்  குடியிருக்க விரும்புகிறேன்  நீ சிறை வைக்க  விரும்பிக்கிறாய் ....!!! கஸல் 342 

கண்ணீர் விடாதே

படம்
கண்ணே கண்ணீர்  விடாதே  கண்ணீர் துளிகள்  ஒவ்வொன்றும்  என் பெயரை  சொல்வதுபோல்  இருக்கிறது .....!!! 

அழகானது

படம்
காதல் இன்பமானது  அழகானது  புதுமையானது  என்பதை அறிய  வைத்தவளே  கவலையாக இருக்கிறது  உன்னை இத்தனை நாள்  இழந்து விட்டேனே என்று ....!!! 

சோகத்தோடு வாழுகிறாய் ....?

படம்
உன்னை காதலித்தேன்  தேறியது கவலை ....!!! நீ சிரிக்கிறாய்  நானும் சிரிக்கிறேன்  கவிதை அழுகிறது ....!!! நான் உன் நினையோடு  வாழுகிறேன்  நீ ஏன் சோகத்தோடு  வாழுகிறாய் ....? கஸல் ;345                 

உன் பார்வை காதலா ...?

படம்
கண்ணில் பட்ட உன்  பார்வை காதலா ...? காரியமா ...? உன்னோடு வாழ்வதற்கு  பாடுபட்டேன் முடியவில்லை  இன்னும்  காத்துக்கொண்டிருக்கிறேன் ...!!! காதல் ரோஜா சிவப்பு  நீ  கறுப்பு ரோஜா  கேட்கிறாய் ....!!! கஸல் 344 

வாளாய் வருகிறதே ...!!!

படம்
காதலுக்காக  உறவை மறக்கிறேன்  நீ என்னை  மறக்கிறாய் ....!!! நிலாவில் இருக்கும்  பாட்டி உருவம் போல்  உன் உருவம் ....!!! உன் நினைவுகள்  வானவில்லாய  வரவேண்டும்  வாளாய் வருகிறதே ...!!! கஸல் ;343    

உள்ளத்தை கிள்ளுகிறதே ....!!!

படம்
கண்ணாடியில்  முகத்தை பார்ப்பதில் கண்ட  சந்தோஷம் நேரில் இருக்கவில்லை ....!!! காதல் உள்ளத்தை  தொடவேண்டும்  இங்கு உள்ளத்தை  கிள்ளுகிறதே ....!!! வானத்தில் முகில் அசைவது  போல் உன் எண்ணம்  அசையவேண்டும்  உன் எண்ணம் சூரியனை  போல் நிலையாக உள்ளதே ...!!! கஸல் ;341     

உள்ளத்தால் உருவான காதல் ...!!!

படம்
உறவுகளை மறந்தேன்   உணர்வுகளை துறந்தேன்  உடமைகளை இழந்தேன்  உண்மைகளை மறைத்தேன்  உலகை நேசித்தேன்  உள்ளத்தை விரும்பினேன்  உயிராக மதித்தேன்  உத்தமனாக இருந்தேன்  உன்னையே நினைத்தேன் உள்ளதெல்லாம் சொன்னேன்  உருகியே காதலித்தேன்  உன் உண்மையான அன்பை  உணர்வோடு எதிர்பார்த்தேன்  உயிரே ஏன் என்னை வெறுத்தாய்  உண்மையை சொல்  உனக்கு நான் செய்த வலிதான் என்ன ...? உள்ளம் மட்டுமல்ல  உயிரும் வலிக்கிறது  உன் பிரிவை ஏற்க மறுக்கிறது மனம்  உண்மையொன்றை சொல்கிறேன்  உனக்கு இனி என்னைப்போல் ஒருவன்  உன் உயிர் இருக்கும் வரை கிடைக்காது  உன்னதமான என் காதல்  உள்ளத்தால் உருவான காதல்  உலகம் இருக்கும் வரை தொடரும் .....!!!   

முடிந்தால் தடுத்துப்பார் ....!!!

படம்
நீ மனையாக  வருவாய் என்றுதான்  காதலித்தேன் ....!!! உன் சந்தேகம்  நான் காதலன் தகுதியை  இழந்துவிட்டேன் ....!!! நான் நிச்சயம் உன்னை  மனைவியாக்குவேன் ...!!! கவிதையாலும்  கற்பனையாலும்  கனவாலும் .....!!!! முடிந்தால் தடுத்துப்பார் ....!!! 

காதலிக்காவிட்டால்

படம்
மலராவிட்டால்  மலருக்கு அழகில்லை  மின்னாமல் விட்டால்  விண்மீணுக்கு அழகில்லை  கூவாவிட்டால்  குயிலுக்கு அழகில்லை  ஆடாவிட்டால்  மயிலுக்கு அழகில்லை  சிரிக்காது விட்டால்  மழலைக்கு அழகில்லை  காதலிக்காவிட்டால்  மங்கையே உனக்கழகில்லை....!!!                                                                                

நீ கவிதையை ரசிக்கவில்லை .....!!!

படம்
கவிதை எழுதிய போது  காதல் இருக்கவில்லை  காதல் இருக்கும் போது  காதலி நீ கவிதையை  ரசிக்கவில்லை .....!!! நீ தந்த நினைவுகள்  கவிதையாக வரும் போது  கவிதை அழகாக உள்ளது  காதலியே நீ எங்கிருக்கிறாய்  கவிதை என்பது  எண்ணாத்தால் வரும்  கலைப்படைப்பு காதால் என்பது பருவத்தால்  வரும் மனப்படைப்பு .....!!!    

நீ ஒரு புள்ளியில் கோடு ...?

படம்
கற்பூரம் போல்  வாசமாக இருக்கிறாய்  விரைவாக எரிகிறாயில்லை ...!!! கடலில்  உப்புத்தான் விளையும்  நீ சக்கரையை  உருவாக்கா சொல்கிறாய் ...!!! இரு புள்ளி வேண்டும்  கோடு வரைய  நீ ஒரு புள்ளியில்  கோடு வரையச்சொல்கிறாய்  கஸல் 340                     

காதலுக்காய் காத்திருக்கிறாய் ...!!!

படம்
அழிக்க முடியாத  வலி காதல்  நீ அழிக்க சொல்கிறாய் ....!!! காதலில் உவமை அழகு  உபத்திரம் எப்படி ...? அழகு ....? நான் உன்னுடன்  வாழ்கிறேன் -நீ  காதலுக்காய்  காத்திருக்கிறாய் ...!!! கஸல் ;339                

நீ நெருப்பாய் வருகிறாய் ....!!!

படம்
வானமும்  காதலும்  ஒன்றுதான்  எல்லையில் ....!!! நடுக்காட்டில்  கண்ணை கட்டி  விட்டதுபோல்  உன் காதல்  காட்டில் நான் ...!!! மூச்சு விட்டால்  காற்றுத்தான் வரவேண்டும்  நீ நெருப்பாய் வருகிறாய் ....!!! கஸல் 338                     

நிழலாய் வருகிறாய் ....!!!

படம்
காதலில்  வலி  சிரிப்பு  சோகம்  தருபவள் நீ  கடலில் மீன்  மீண்டும் மீண்டும்  மேலே வந்து சுவாசிப்பது  போல் -உன்னை சுவாசிக்கிறேன்  கண்ணாடியில்  உன் முகத்தை தேடினேன்  நிழலாய் வருகிறாய் ....!!! கஸல் 337                   

நீயோ முள்ளால் போடுகிறாய் ....!!!

படம்
காதல்  உன்னையும் விடாது  என்னையும் விடாது  யாரையும் விடாது  விடாது கறுப்பு .....!!! நீ  வலியை தொடர்ந்து  தருகிறாய் அப்போ  பிரியப்போகிறாய் ....!!! காதல் விலங்கு  பூவால் போடணும்  நீயோ முள்ளால்  போடுகிறாய் ....!!! கஸல் 336              

அதுதான் முடியவில்லை ....!!!

படம்
நீ பேசினாய்  நானும் பேசினேன்  நீ சிரித்தாய்  நானும் சிரித்தேன்  நீ அழுதாய்  நானும் அழுதேன்  நீ பிரிந்தாய்  என்னால் அதுதான்  முடியவில்லை ....!!!                                                   

நீ தந்த வலி

படம்
எப்படி காதலிப்பது என்பதை ... கற்றுக்கொண்ட நான்  உன்னிடமிருந்து எப்படி  விலகுவது என்பதை  கற்றிருந்தால்  நீ தந்த வலி  தெரிந்திருக்காது ....!!!