கண்ணால் ஓவியம் வரைந்தவள் ஓலமிடிக்கிறாள் ....!!! காதல் ஒரு கணிதம் வேதனை கூட்டல் போதனை கழித்தல் உன்னை கண்டநாள் முதல் -என் கவிதை அழுகிறது ....!!! கஸல் 367
நீ பேசிய வார்த்தைகள் தான் பாடல் வரியாக வருகின்றன நீ செய்த நளினங்கள் தான் பட காட்சியாக வருகின்றன நீ உடுத்த உடைகள் தான் ஆடை அலங்காரமாக இருக்கின்றன நீ இப்பவும் அதேபோல் இருக்கிறாய் உன்னை சினிமா பைத்தியம் என்கிறது சமூகம் ...!!!
சிப்பிக்குள் முத்து இருப்பதுபோல் தோல்விக்குள் இருக்கிறது -வெற்றி ...!!! குப்பைக்குள் குண்டுமணி இருப்பதுபோல் உன் மனதினுள் இருக்கிறது தன்னம்பிக்கை ....!!!
உன்னை கண்டவுடன் காதலிக்கவே தோன்றியது என் மனம் ...........!!! என்னசெய்வது -உணர்வை விட ... என் குடும்பக்கடமை தடுக்கிறது..... திருமணமாகாத தங்கைகள்.... முதுமையில் இருக்கும் பெற்றோர் ... என்னையே நம்பி படிக்கும் தம்பி ... இப்படிதான் ...... எத்தனையோ அண்ணன்கள் காதலை புதைத்துவிட்டார்கள் .... நிறைய அண்ணன்களின் ... இதயம் மயானம் தான் .....!!!
உன்னை பார்க்காமல் போக முகத்தை திருப்பினேன் இதயம் உனக்கும் கைகாட்டுகிறது ...!!! பூக்களை தேடித்தான் தேனிவரும் முற்களையல்ல...!!! காதல் கிணறில் இருந்து ஊற்று வரவேண்டும் -இங்கு காற்று வருகிறது ....!!! கஸல் 365
நம் காதல் அமர்முடுகளில் செல்ல வலிகள் ஆர்முடுகளில் செல்கிறது ....!!! காதல் ஒன்றும் விஞ்ஞானம் இல்லை நிரூபித்துக்காட்ட ...!!! நம் ஞானம் ....!!! காதல் எனக்கு விடியல் காலை உனக்கு அந்திநேரம் ....!!! கஸல் 364
நிலாவை தூக்கத்துக்கு பயன் படுத்தினார் -தாய் துக்கத்துக்கு பயன்படுத்துகிறாள் காதலி .....!!! நீ வரும் வழியில் காத்திருக்கிறேன் நீயோ வெளியே வரமறுக்கிறாய் ....!!! உன் வரவு கனவுதான் -உன் செலவு கண்ணீர்தான் ...!!! கஸல் 363
பூக்களும் முற்களும் கலந்த நினைவு கலவைதான் காதல் .....!!! காதலுக்குள் நீந்தி கரை சேர்ந்தவர் யாருமில்லை ....!!! நான் கடலாக இருந்தால் நீ அலையாக இருக்க வேண்டும் மணலாக இருக்கிறாய் ...!!! கஸல் ;362
மறந்த காதல் என்ற ஒன்று இல்லை மறக்க கூடிய காதல் இதுவரை வரவில்லை ....!!! இளநீருக்குள் உள்ள தண்ணீர் போல் என் இதயத்துக்குள் -நீ வார்த்தையும் இசையும் சேர்ந்தால் பாடல் வரவேண்டும் உனக்கு ஏன் இன்னும் வரிகள் கூட வரவில்லை ...? கஸல் ;361
என் காதலி-கவிதை..! நீயல்ல....!!! என் கவிதைக்கேற்ற காதலியும் நீயல்ல....!!! என் கவிதைக்கேற்ற காதலி கிடைக்கும் வரை காத்திருப்பேன் காதலி இல்லாது போனாலும் கவிதையாவது மிஞ்சும் ...!!!
இளவட்டங்களே... காதல் என்பது அடகு கடைதான் முதலில் சிரிப்பின் மூலம் அடகுக்கடை திறக்கப்படும் ....!!! அடுத்து நீ சிரிப்பை அடகுவைப்பாய் ...!!! இதயத்தை அடகுவைப்பாய் ...!!! வாழ்க்கையை அடகுவைப்பாய் ...!!! கடைசியில் வெறும் கையுடன் நின்று விடாதே ....!!!
என் குளிர்ந்த நினைவுகளால் உன் பதிலை எதிர்பார்த்து என் இதயம் உறைபனியாக விறைத்து விட்டது ....!!! ஒரு வார்த்தை சொல்லி என் இதயத்தை காப்பாற்று ...!!! இதயத்தை வெளியில் பார்க்கும் சக்தி மட்டும் இருக்குமென்றால் என் இதயத்தின் உறைந்த நிலை உனக்கு புரியும் .....!!!