ஓ கோ என்று வாழ ஆசைப்படாதே ..... ஓ ர்மம் மட்டும்கொண்டும் வாழ்ந்திடாதே .... ஓ டம்போல் தத்தளிக்கும் முடிவெடுக்காதே ..... ஓ டு ஓடு இலக்கு அடையும் வரை ஓடு .....!!! ஓ ட்டுக்காக அரசியல் நடத்தாதீர் ..... ஓ ரங்கட்டி மக்களை ஒத்துக்காதீர் .... ஓ ரம்போய் மக்களை விற்காதீர் ..... ஓ லமிட்டு மக்களை மயக்காதீர் .....!!! ஓ வியம் போல் மனதை அழகாக்கு.... ஓ சையின் சொற்களை இனிமையாக்கு .... ஓ லை போல் விழுந்தாலும் பயன் கொடு ..... ஓ ய்வெறாலும் அளவோடு பயன்படுத்து .......!!! ஓ ர் அறிவு தாவரம் முதல் அன்பு செய் .... ஓ ராயிரம் உதவிசெய். பெருமைகொள்ளாதே.... ஓ தல் மூலம் உலகை விழிப்படைய செய் ... ஓ ரினமே உண்டு அதுவே மனித இனம் ....!!!