குற்றம் செய்யாதே தலை குனியாதே ....
கு ப்பையில் போட்டாலும் .... கு ண்டுமணி மங்காது ..... கு டிசையில் வாழ்ந்தாலும் .... கு டிகள் போற்றும்படி வாழ்.....!!! கு டி குடியை கெடுக்கும் .... கு ணம் கெட்டாலும் குடி கெடும் ..... கு ப்பை கூடினாலும் குடி கெடும் .... கு ருவோடு பகைக்கின் குடி கெடும் ....!!! கு ம்பிடு பெற்றோரை கும்பிடு ..... கு ரல் கொடு அநீதிக்கு குரல் கொடு .... கு றிப்பெடு படிப்பில் குறிப்பெடு..... கு றள் வழிவாழ் குறிக்கோளோடு வாழ் ....!!! கு ற்றம் செய்யாதே தலை குனியாதே .... கு ன்னம் (அவமானம்) படாதே அவதி படாதே .... கு றிக்கோள் ஒன்றில்லாமல் வாழ்ந்து பழகாதே .... கு ருவின் துணையிலாமல் வித்தை பழகாதே.....!!!