எப்படியெல்லாம் உன்னை கற்பனையில் நினைத்தேன் -இப்போதுதான் புரிந்தது கற்பனைக்கும் நியத்துக்கும் உள்ள வேறு பாடு ....!!! கற்பனையைவிட நீ அழகு எனக்கு மட்டும் ...!!!
நான் தலைவன் நீ தலைவி காதல் எங்கே ...? மயில் ஆடும் போது தோகை விரித்தால் போல் உன் முகம் ...!!! நான் காதலில் இறக்கிறேன் நீ இப்போ தான் காதலில் பிறக்கிறாய் ...!!! கஸல் 350
நினைப்பது நடப்பது வாழ்க்கையில்லை வாழ்க்கை நினைப்பதே நடக்கும் .....!!! காதல் தோற்றதில்லை இதயங்கள் தான் காயப்படுகின்றன ...!!! கண்முன் வரும் நீ காதல் முன் வரவில்லை வர காலம் எடுக்கிறாய் ....!!! கஸல் ;349
உலகம் காதலால் தான் இயங்குகிறது நாம் மட்டும் என்ன ...? உனக்காக இதயம் துடிக்கிறது எனக்கு உண்மை சொல் உன் காதல் காதல் உண்மையா ...? நீ கனவாக நினைப்பதை நான் காதலாக நினைக்கிறேன் ....!!! கஸல் ;348
நினைக்கின்ற போது மட்டும் வருவதில்லை தூய காதல் ....!!! தான் கூட்டில் இடம் கொடுத்த குயில் போல் உன் இதயத்தில் நான் வசிக்கிறேன் ....!!! எனக்கு காதல் தூரபயணம் உனக்கு தொடக்க புள்ளி ....!!! கஸல் ;347
காதல் கொண்டேன் காதலை -நீ காதலிக்கவில்லை கண்ணீரில் வரும் பூ அழகானது காதலித்தால் ....!!! நான் உன்னை விரும்புகிறேன் நீ என்னை விரும்புகிறாய் காதல் ஏன் நம்மை காதலிக்க வில்லை ....!!! கஸல் 346
வந்துபார் கண்ணே என் வீட்டில் -உன் பெயரையே பலமுறை சொல்லி சொல்லி பாடலாக பாடுகிறேன் நீ தந்த புகைப்படம் எனக்கு சாமிப்படம் நீ தந்த பொருட்கள் என் வீட்டில் அலங்கார பொருட்கள் ...!!! உன் வரவு மாட்டுமே என் வீட்டில் வெற்றிடமாக உள்ளன ....!!!
ஓடும் மணிக்கூட்டில் நிமிடகம்பி நீ நினைவுகளும் ஓடிக்கோண்டே இருக்கிறது .....!!! உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது சுகமாக உள்ளது ....!!! உன் இதயத்தில் குடியிருக்க விரும்புகிறேன் நீ சிறை வைக்க விரும்பிக்கிறாய் ....!!! கஸல் 342