இனிய வரவேற்பு கவிதை -07
எ ழுந்திரு மனிதா .... எ ழுச்சி மிகு வெற்றி காத்திருக்கிறது .... எ ன்றும் இனிமையாய் வாழ்வதற்கு ..... எ ழுந்திரு அதிகாலை - விரைந்திடு .... எ ட்டு திசையும் பரப்பிடு பணியை ....!!! எ வன் பிறருக்காய் வாழ்கிறானோ ..... எ வன் பிறர் துன்பம் துடைகிறானோ..... எ வனல்ல அவன் - இறைவன் .....! எ ல்லோர் இதயத்திலும் இருக்கும் எ ல்லையற்றவன் அவன் ....!!! எ ங்கே செல்கிறோம் சரியாக தீர்மானி .... எ ப்போது செல்கிறோம் உறுதியாக முடிவெடு ... எ தற்கு செல்கிறோம் நிதானமாக இருந்திடு .... எ ந்த தடைவரினும் அனைத்தையும் உடைத்தெறி ..... எ ல்லாம் சிறப்பாக நிச்சயம் அமைந்திடும் ....!!! எ திரியென்று ஒருவனை நினைத்துவிடாதே .... எ டுப்பார் கைபிள்ளைபோல் வாழ்ந்துவிடாதே ..... எ ல்லாம் எனக்கே என்று ஆசைபடாதே ..... எ டுத்த காரியத்தை இடையில் நிறுத்தி விடாதே ..... எ ல்லாம் வல்ல இறைவன் இருப்பதை மறந்துவிடாதே .......!!!