இடுகைகள்

பிப்ரவரி 3, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அப்பா கவிதை

மார்பையே .... என்னை சுமக்கும் சுமை ... தாங்கியே சுமர்ந்து வளர்த்தவரே ... என் அருமை தந்தையே ....!!! யாருக்கும் அடிபணியாதே .... யாருக்கும் தலை குனியாதே ... யாருடைய சொத்துக்கும் ஆசைப்படாதே .... யாருக்காவவும் உன்னை இழக்காதே ... அத்தனையும் பொன்மொழிகள் ... வாசித்து பெறவில்லை ... என் தந்தையின் வாழ்க்கையில் ... பெற்றேன் ....!!! உலகில் அனைவருக்கும் ... சிறந்த முன்மாதிரியாளன் ... தந்தை பண்போடு இருக்கும் தந்தை ... என் தந்தை எனக்கு கிடைத்த ... எல்லை அற்ற பொக்கிஷம் ....!!! + கவிப்புயல் இனியவன் குடும்ப கவிதைகள் (அப்பா  கவிதை )

குடும்ப கவிதைகள்

என் தாயே ... உன் பாத திருவடியே ... உலகில் அத்தனை ஆலயங்களின் ... திறவு கதவு ....!!! என் தாயே .... உன் கருணை கொண்ட பார்வையே .... நான் வணங்கும் இறைவனின் ... கருணை பார்வை ....!!! என் தாயே .... என்னை விட்டு நீங்கள் இறை ... பயணம் சென்றாலும் .... உன் திருப்பாதத்தின் நினைவுகள் ... தான் நான் வணங்கும் இறைவன் ...!!! + கவிப்புயல் இனியவன் குடும்ப கவிதைகள் (அம்மா கவிதை )

உன் தோளில்....!!!

தோள் மீது சாய்ந்தேன் ஆறுதலுக்கு .... தோல்வியில் சாய்ந்தேன் ஆறுதலுக்கு ... மூச்சை விட ஆசைப்படுகிறேன் உன் தோளில்....!!! + கவிப்புயல் இனியவன் Kavipuyal Iniyavan

ஒரு கனவாகும் போது....!!!

ஆயிரம் மழை துளிக்கு நிகர் .... உன்னை நினைத்து விடும் கண்ணீர் ... வாழ்க்கை ஒரு கனவாகும் போது....!!! + கவிப்புயல் இனியவன் Kavipuyal Iniyavan