இடுகைகள்

பிப்ரவரி 3, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நட்பென்றால் இதுதான் நண்பா

நட்பென்றால் இதுதான் நண்பா ---------------- நட்பு உலகின் தோற்றத்திலிருந்து ..... படைத்தவனால் கிடைத்த அமிர்தம் ....! காவியங்கள் காப்பியங்கள் கதைகள் .... இலக்கியங்கள் புராணங்கள் மற்றும் .... மறை நூல்கள் ,சொல்லாத விடயத்தையா .... நான் சொல்லிவிடப்போகிறேன் ....? எல்லாம் அங்கிருந்தே எடுக்கிறோம் ....!!! புனித குர்ரானில் சொல்லாத நட்பா ....? புனித பைபிளில் சொல்லாத நட்பா ....? மறைநூல் திருக்குறளில் சொல்லாத நட்பா ....? இதுவரை எழுதிய கவிஞர்கள் சொல்லாததா...? நடித்து கலைத்த நாடகங்கள் சொல்லாததா...? சிந்தனையாளர் கொட்டி தீர்த்த சிந்தனையை .... விடவா நான் நட்பை விளக்கிடபோகிறேன்...? முடிந்தவரை நண்பா நட்பு என்றால் என்ன ....? பொறுக்கி எடுத்ததில் பெருக்கி சொல்கிறேன் ...!!! மனைவியிடம் எதையும் மறைக்காமல் ..... பகிர்ந்தால் குடும்பம் பிரியும் என்று .... புரிந்தும் உண்மையை சொல்லும் கணவன் .... " குடும்ப நட்பின் தலைவன் " ....!!! அவனுக்கு அவளுக்கு தலைவலித்தால் .... இவனுக்கு இதயம் வலிக்கும் என்று ... உள்ளத்தால் வேதனை படும் உயிர் .... " உறவு நட்புக்கு தலைவன் ".....!!!

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்

வறுமை எல்லோருக்கும் பொதுமை  ..... உலகில் சதித்தவனும் .... சாதிக்க போகிறவனுக்கும் .... மூலதனம் - வறுமை ....!!! இவனுக்கோ .... பிறப்பிடமே - வறுமை - என்றால் .... கொஞ்சம் கேட்கவும் சகிக்கவும் .... உங்களுக்கு கடினமாய் தான் .... இருக்கப்போகிறது .....!!! யார் இவன் ...? அடிப்படை வசதிகள் குறைந்த .... அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ... தன்மானத்துடன் காத்திருந்து .... கிடைத்தால் சாப்பிட்டு .... கிடைக்கா விட்டால் ஈரதுணியை .... வயிற்றில் கட்டி வாழ்ந்த .... கௌரவம் மிக்க வறுமை குடும்ப .... நாயகன் - " ஆதவன் ".......!!! இவனது வாழ்கை தற்காலத்துக்கு .... எந்தளவுக்கு பொருந்தும் ... ஏற்கும் என்று தெரியாது .... ஆனால் இவனின் வாழ்கை .... இவனுக்கு முழு உண்மை .....!!! ^^^ வாருங்கள் இவனின் வாழ்கையை கேட்போம் .... ^^^ நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் ^^^ கவிப்புயல் இனியவன்

கனவாய் கலைந்து போன காதல் 02

பூவழகன் .... ஒரு கிராமிய இளைஞன் .... நவ நாகரீகம்  தெரியாதவன் .... அதிகம் பேசாதவன் ..... பெரும் படிப்பு என்றுமில்லை .... படிப்பு இல்லையென்றுமில்லை .... ஆனால் வறுமை என்றால் .... நன்கு தெரிந்தவன் ....!!! கிராம புறத்தில் சாதாரண .... படிப்பை முடித்து நகர்புறம் ..... உயர் கல்விக்காய் போகிறான் ..... நகர புறத்தில் இருபால் பாடசாலை ..... பொதுவாகவே பெண்கள் என்றால் .... பூவழகனுக்கு ஒருவித பயம் ..... பாடசாலையோ கலவன் ..... புதிய முகங்கள் நகர்புற பெண்கள் .... பூவழகனை காட்டிலும் உசார் ....!!! முதல் நாள் பாடசாலை வாழ்க்கை ..... கிராம புறத்திலிருந்து நகர்புறம் ..... இடம்மாறிய பதட்டம் ,பயம் .... பூவழகனை சுற்றி நண்பர்கள் .... குசலம் விசாரிப்பதில் மும்மரம் .... பயத்தோடும் அசட்டை துணிவோடும் ... அன்றைய நாள் முடிவுக்கு வந்தது ....!!! ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் .... கனவாய் கலைந்து போன காதல் வசனக்கவிதை....!!! ^^^ கவிப்புயல் இனியவன்