இடுகைகள்

மே 4, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் தோல்வி கவிதைகள்

என் கவிதையை .... பார்ப்பவர்கள் எல்லோரும் ... உனக்கு காதல் தோல்வியா .... என்கிறார்கள் ....? இந்த கேள்விக்கு மட்டும் .... நீ பதில் சொல் .....!!! என்னை பிடிக்கவில்லை ... சொல்லியிருந்தால் .... விலகியிருப்பேன் .... பிடித்திருக்கு என்றால் .... காதலித்திருப்பேன் ..... மௌனமாய் இருந்து ... நடுரோட்டில் விட்டுவிட்டாயே ....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

வலி உனக்கே புரியவில்லை...!

மூச்சை நிறுத்தினால்....  மட்டுமே மரணம் இல்லை...  நீ பேச்சை நிறுத்தினாலும்...  மரணம் தான்......!  ஒரு  மரதில் ஆயிரம்...  பூக்கள் மலரும்....  மரத்துக்கு வலியில்லை...  காம்பின் வலியை...  உணர்வார் யாருமில்லை...  உன்னை இழந்த வலி...  உனக்கே புரியவில்லை...!  இதயத்தில்...  இருந்து வெளியேறிய நீ  இதயத்தை நிறுத்திவிட்டு...  போயிருக்கலாம்....!  ^ காதல் தோல்வி கவிதைகள்  ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன்  மறந்தால் மரினித்து விடுவேன்  ------------ கவிப்புயல் இனியவன்

தேர்தல்

தேர்தல் ----------- மெய்யும் பொய்யும் .... தேர்தலில் போட்டியிட்டன .... மெய்யின் ஆதரவாளர்கள் .... மிகக்குறைவு -பொய்யின் ... ஆதரவாளர்களோ ..... குவிந்து செறிந்து பரந்து ... காணப்பட்டன .....!!! பொய்யின் தேர்தல் ... பிரச்சாரத்தில் பேச்சுகள் .... தூள் பறந்தது கைதட்டல் .... வானை பிழந்து சென்றன .... ஆதரவாளர்கள் உங்கள் ஆட்சியே ... எங்களுக்கு வேண்டும் ..... நீங்கள் இல்லாத ஆட்சி ..... எங்களுக்கு வேண்டவே வேண்டாம் .... என்று கோஷமிட்டனர்.....! மெய்யின் பிரச்சாரத்தில்.... ஆங்காங்கே ஒருசிலர் ......!!! தேர்தல் முடிவு வெளியானது ..... பொய் கட்சி அமோக வெற்றி ... மெய் கட்சியினர் கட்டு பணத்தை ... இழந்தனர் .எதிர் கட்சியே இல்லாமல் .... பொய் கட்சியினர் அரசை அமைத்தனர் .... மெய் கட்சி தலைவர் சிறையில் .... அடைக்கப்பட்டார் ......!!! பொய்களே அரச கொள்கையானது .... லஞ்சமே தேசிய தொழிலானது .... உண்மை பேசியோர் சிறையில் .... அடைக்கப்பட்டனர் - லஞ்சம் ... கொடுக்க மறுத்தோர் நாக்கு .... அறுக்கப்பட்டது - மெய் பேசியோர் ... பொய்பேசியோர் வீடுகளில் .... உயிர் பிச்சை கேட்டு கெஞ்சினர் ......!!!