கண்ணே பேசிப்பழகு

கண்ணே பேசிப்பழகு
மௌனம் அழகுதான்
காதலுக்கு அது உயிர்
கொல்லி -எத்தனை
முயற்சிகள் உனக்காக
நீயும் எனக்காக  .....!!!

நண்பர்கள் மத்தியில்
நான் நிற்கையில்
ஓரக்கண்ணல் பார்த்தாய்
மெல்லிய சிரிப்பு சிரித்தாய்
அன்றே செத்தவன் நான் ...!!!

உனக்கு பிடித்தது அறிந்தேன்
உனக்காக நான்
விரும்பாத்தை-எல்லாம்
செய்கிறேன் .
நண்பர்கள் மத்தியில் கிண்டல்
பெற்றோர் மத்தியில் திட்டு
அத்தனையும் உனக்காக
செய்கிறேன் ...!!!

தோழியிடம் என்னை பிடித்திருக்கு
என்று சொன்ன நீ
ஏன் என்னிடம் சொல்லுகிறாயில்லை
கண்ணே பேசிப்பழகு -என்
உயிர் போகிறது .....!!!                        

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்