கவிப்புயலின் மரபுவழிக்கவிதை

 🌹🌹🌹

தலைப்பு :
புரிதல் இல்லா நட்பு 
🌹

என்றும் புரிதல்
இல்லா நட்பு//
துன்பமே தரும்
தோழனே அதுதப்பு//

இன்றும் மெளனமேன் 
இதயத்தால் நீசெப்பு //
என்னில் 
தவறிருப்பின்
என்னைநீ காறித்துப்பு//

தீண்டத்தகா வார்த்தைகளால்
தெறித்தது வன்மை//
தூண்டில்  மீன்போல்
துடிக்கிறது தனிமை//

நீண்டநற் பயணத்தில்
நினைவுகளே இனிமை//
வேண்டுமுன் உறவேயென் 
வெற்றிக்கு மேன்மை//
@
 கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்