கவிப்புயலின் மரபுவழிக்கவிதை
தலைப்பு :
புரிதல் இல்லா நட்பு
என்றும் புரிதல்
இல்லா நட்பு//
துன்பமே தரும்
தோழனே அதுதப்பு//
இன்றும் மெளனமேன்
இதயத்தால் நீசெப்பு //
என்னில்
தவறிருப்பின்
என்னைநீ காறித்துப்பு//
தீண்டத்தகா வார்த்தைகளால்
தெறித்தது வன்மை//
தூண்டில் மீன்போல்
துடிக்கிறது தனிமை//
நீண்டநற் பயணத்தில்
நினைவுகளே இனிமை//
வேண்டுமுன் உறவேயென்
வெற்றிக்கு மேன்மை//
@
கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
கருத்துரையிடுக