என் மரண நொடிகள் ...!!!

என் மரண நொடிகள் ...!!!

என்னவனே .....!!!
உன் பிரிவை உயிர் தாங்காது 
பிரிய மாட்டேன் என்பதை 
என்னிடம் சொல் - நான் 
அந்த செய்தியுடன் உயிர் 
வாழ்வேன் .....!!!

பிரிந்தே ஆகவேண்டும் ...
என்றால் நீ திரும்பி வரும் ..
வேளையில் உயிருடன் ..
இருப்பவரிடம் சொல் உயிரே ...
உன்னை பிரிந்து வாழும் 
நொடிகள் என் மரண நொடிகள் ...!!!

திருக்குறள் : 1151
+
பிரிவாற்றாமை
+
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் 
வல்வரவு வாழ்வார்க் குரை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 71

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்