என் உள்ளம் அச்சப்படுகிறது ...!!!

என் உள்ளம் அச்சப்படுகிறது ...!!!

என்னவனின் பார்வை ....!!!
உள்ளம் முழுதும் இன்பம் ...
ஊற்றெடுப்பதாய் இன்புற்றேன் ..
அவரின் பார்வையால் இன்பம் 
காணாத பொழுதே இல்லை ...!!!

பிரியப்போகிறார் ....
என்கிறாரே - இப்போதான் 
அவர் பார்த்த பார்வை 
கொடுமையை ஏற்படுத்துகிறது ..
எப்படி தாங்குவேன் என்று 
என் உள்ளம் அச்சப்படுகிறது ...!!!

திருக்குறள் : 1152
+
பிரிவாற்றாமை
+
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் 
புன்கண் உடைத்தால் புணர்வு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 72

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்