இனிய வரவேற்பு கவிதைகள் - 05
உ ள்ளம் தூய்மையாக இருப்பின்... உ ள்ளிருக்கும் மனது இறைவன்......! உ ள்ளதூய்மை என்பது .... உ யிரினங்கள் அனைத்திலும் .... உ ள்அன்பை செலுத்துவதாகும் ....!!! உ றவுகளே எனது இனிமையான .... உ ள்ளங்கனிந்த வாழ்த்துக்கள் .... உ ழைப்பை உயிராய் மதிப்போம் .... உ ற்றார் உறவினரை மகிழ்விப்போம் ..... உ ற்சாகமாய் வாழ்ந்திடுவோம் .....!!! உ ள்ளொன்று வைத்து புறம்பேசாதே..... உ ள்ளவனுக்கு பகட்டுக்கு உதவிசெய்யாதே ..... உ ண்டு களித்தே உடலை நோயாக்காதே..... உ ண்மை அன்பை உதறி விடாதே ..... உ ள்ளத்தை ஊனமாக்கிடாதே.....!!! உ ள்ளதை கொண்டு இன்பமாய் வாழ்வோம் .... உ லகிற்கு ஏதேனும் செய்துவிட்டு இறப்போம் ..... உ ள்ளதில் ஓரளவேணும் ஈகை செய்வோம் .... உ ள்வரவு எதிர்பார்க்காமல் உதவி செய்வோம் உ யிர்பிரிந்தபின்னும் உலகோடு வாழ்வோம் ......!!!
கருத்துகள்
கருத்துரையிடுக