இடுகைகள்

எகிப்தின் மம்மியில் வைத்தால்...!

நான் ஒன்றும் விஷம் ... அருந்த தேவையில்லை...! உன் நினைவே போதும் நான் மெல்ல மெல்ல இறப்பதற்கு ....!!! என் உடலை எகிப்தின் மம்மியில் வைத்தால்...! இரண்டு நிகழ்வுகள் ஒன்று என் உடல் அழியாது மற்றையது உன் நினைவுகள் அழியாது ....!!! நினைவு என்பது ஒரு மலர்தான் .... உதிக்கும் போது அழகு வாடும் போது அழுகை ....!!!

வாழவைக்கிறாய் -நீ

எப்போது ஒரு மனிதன் இறக்கின்றான் ....? மூளையில் நினைவாற்றல் நின்றவுடன் ...!!! அன்பே உன் நினைவாற்றல் என்னை வாழவைக்கிறது வாழ்கிறேன் என்பதைவிட வாழவைக்கிறாய் -நீ நீ பேசாத நிமிடங்கள் நான் புதைகுழிக்குள் வாழும் நிமிடங்கள் என் கடவுளும் நீ காலனும் நீ ....!!!

காதலின் தலைவிதி

நான் காத்திருக்கிறேன் காத்திருப்பேன் அன்பே உன் கனமான வார்த்தைக்காக ....!!! நீ காரமாக பேசினாலும் கண்டு கொள்ளாமல் விட்டாலும் காத்திருப்பேன் உன் கனமான வார்த்தைக்கு ....!!! காதலின் தலைவிதி காத்திருப்பதும் கலங்கிக்கொண்டு வாழ்வதும் நான் மட்டும் விதிவிலக்கா ...?

துன்பம் கூட கடுகளவுதான் ....!!!

எத்தனை முறை என்னை கோபப்படுத்தினாலும் பறவாயில்லை ....!!! அத்தனை முறை உன்னை பலமடங்கு நேசிக்கிறேன் நீ எப்படி வேண்டுமானாலும் இருந்து விடு ....!!! காதலோடு இருந்துவிடு நீ காதலோடு இருந்தால் கடலளவு துன்பம் கூட கடுகளவுதான் ....!!!

உன் நினைவோடு வாழ்கிறேன்

என் நினைவோடு .. உன் நினைவுகளை இணைத்து பார் உயிரே ....!!! என் நினைவுகள் படும் வேதனை உனக்கு புரியும் ... என் நினைகளின் காயங்கள் தெரிய வரும் ....!!! அத்தனை காயங்கள் வந்தபோதும் உன் நினைவுகள் நான் வாழும் ஆலயம் 

குப்பை கடுகு கவிதை

எம் அருகே வரும் போது மூக்கை பொத்தும் மானிடா ....!!! நீ இறந்தால் அடிக்கும் நாற்றத்தைவிட நாம் ஒன்றும் பெரிதல்லா ...!!! குப்பை கடுகு கவிதை

குப்பை- கடுகு கவிதை

எங்களை எரிக்காதீர்கள் புதைக்காதீர்கள் அது மனிதனை செய்யும் பணிகள் ....!!! எங்களை மீள் சுழற்சி செய்யுங்கள் ....!!! குப்பை கடுகு கவிதை

குப்பை கடுகு கவிதை 03

உங்கள் உள்ளங்களையும் இடங்களையும் தூய்மை படுத்தாத நீங்கள் தானே -குப்பை எங்களை குப்பை என்கிறீர்களே ....? குப்பை கடுகு கவிதை 03

காயப்பட்டிருக்கிறேன் ....!!!

நீ நினைவாய் தந்த ரோஜா செடியில் முற்கள் மட்டுமே உதிக்கிறது ....!!! இரவு எப்போது வரும் காத்திருக்கிறேன் அப்போது இனிமையாய் வருவாயோ ...!!! உன் அழகால் இதயம் முழுக்க காயப்பட்டிருக்கிறேன் ....!!! கஸல் 728

முற்களால் பூஜை செய்கிறாய் .....!!!

உன் நினைவுகளில் இருந்து கவிதை எழுதிய -நான் வலிகளில் இருந்து கவிதை எழுதுகிறேன் ....!!! காதல் பூவால்  பூஜை செய்த - நீ முற்களால் பூஜை செய்கிறாய் .....!!! உன் கண்ணுக்கு மயங்கி காதல் செய்தேன் இப்போ உன்னை கண்டே மறைகிறேன் ....!!! கஸல் 727

நாற்காலியில் ..

சொகுசான... நாற்காலியில் .. இருந்து கொண்டு ... காற்று இல்லை என்று கதறிக்கொண்டு இருகிறாயே மனிதா ...? மரம் கடுகு கவிதைகள்

என் நிழலின் கீழிருந்து ...

நான் செய்த பெரும் தவறு .. மனிதா உனக்கு நிழல் .. தந்தது தானோ ...? என் நிழலின் கீழிருந்து ... என்னையே .... வெட்டுகிறாய் ...!!! மரம் கடுகு கவிதைகள்

உங்களுக்கு உயிர் காப்பது ...!!!

எங்களில் ஒரு சில .. மரங்களை கடவுளாக்கி ... மற்றவற்றை விறகுகள் ... ஆக்கியது மனிதனே தவிர ... நாங்கள் இல்லை .....!!! எமது கடமை ஒரே செயல் உங்களுக்கு உயிர் காப்பது ...!!! மரம் கடுகு கவிதைகள்

மரம் -கடுகு கவிதைகள்

சிலுவைக்காகவும் .... எங்களை வெட்டுகிறீர்கள்.... இறுதி ஊர்வல கட்டைக்காவும் ... எங்களை வெட்டுகிறீர்கள் ... சிரித்துகொண்டே இறக்கிறோம் நாங்கள் ....!!! மரம் கடுகு கவிதைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறேன் உன் முகத்தை ...!!! மறக்க மறக்க ஊற்றாய் வருகிறது உன் நினைவுகள் ...!!! காதல் என்றால் வலி இருக்கலாம் வலியே காதலாக இருக்குதடி என் வாழ்வில் ...!!!