கவிதை 360 ஹைபுன்

ஹைபுன் 

......

ஜப்பானிய மொழியில் ஹைக்கூவிற்குப் புகழ்பெற்ற பாஷோ என்பவர் ஹைபுன் கவிதையை முதன் முதலாக எழுதியுள்ளதாக அறியப்படுகிறது.


தமிழில் முதன் முதலாக அறுவடை நாளில் மழை(2003), மாய வரம் (2006) தலைக்கு மேல் நிழல் (2007) என்ற ஹைபுன் கவிதை தொகுதிகள் வெளிந்துள்ளன.


.....


இதன் மரபு..... 


ஒரு கதை, சிறுகதை, கட்டுரை, பேட்டி, விமர்சனம், இதில் ஏதாவது ஒன்றை எழுதி அதற்கு பொருத்தமான ஹைக்கூ ஒன்றை உருவாக்கவேண்டும் 

....

கவிப்புயல் இனியவன் ஹைபுன் 


காத்திருப்பேன் அவள் வருவாள் ..

பக்கத்தில் அவள் அண்ணன் ...

சைக்கிளில் வருவார் ..

அருகிலே செல்வேன் ..

கண்ணால் கதைப்பேன் ..

அவள் யாடையால் கதைப்பாள் ..

அண்ணன் கிட்டவரும் போது..

என் நடை வேகமாகும் ...

பாடசாலைதான் எனக்கு காதல் சாலை ..

கொப்பியை பரிமாறும் போது ..

கடிதமும் பரிமாறும் ...

விழுந்தது கடிதம் நிலத்தில் ..

கண்டார் ஆசிரியர் தந்தார் ..

முதுகில் நல்ல பூசை ..

நண்பர்கள் கிண்டல்

நண்பிகள் அவளை கிண்டல் ..

காலம் காதலாகியது ..

கல்வி கரைக்கு வந்தது ..

காதலும் கரைக்கு வந்தது 


^

பள்ளி காதல் தொடரும்

பள்ளிவரை இல்லை

பள்ளி படலை வரை


.....


கவிப்புயல் இனியவன் ஹைபுன் 02

...........

தாத்தா நான் நல்லா சைக்கிள் ஒடுறானா ..? என்ற பூட்டனின் கேள்விக்கு பதில் சொல்ல முதல் தடீரென விழுந்தான் பூட்டான் ..யாரப்பா பிள்ளையை தூக்குங்கோ பூட்டான் விழுந்திட்டான் ...!!!


தனது வலது காலை பார்த்தார் அப்புத்துரை... பெரிய தழும்பு சின்ன வயதில் மாட்டு வண்டி ஓடியபோது வண்டிளால் விழுந்த காயம் நினைவு வந்தது ...!!!


மதியம் சாப்பாட்டு நேரம் பேரன் வந்தான் வயது 18 இருக்கும் வந்தவுடன் அவன் தாய் நித்திய பூசையை ஆரம்பித்தாள் நேத்து எங்கடாபோண்ணி ஸ்கூலுக்கு போறாண்டு

விஜய் படத்துக்கு போனது தெரியாதா எனக்கு அப்பா வரட்டும் ...

அப்பாவரட்டும் ......தாத்தா சிரித்தார்

போடா போ கைகாலை கழுவிட்டு சாப்பிடு ....!!!

தான் பொய் சொல்லி நாடகத்துக்கு போனதும் தனக்கு அடிவிழுந்ததையும் எண்ணி சிரித்தார் .....!!! தாத்தா

அன்று தண்டனையாக இருந்தவை வேதனையாக இருந்தவை இன்று இனிமையாக இருந்தது அவருக்கு ...!!!


*

இளமையின் இனிமை

தாமதமாக இனித்தது

முதுமை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்