என் மூச்சு நிற்கவேண்டும் ....!!!
 உன் அருகில் நானிருந்து ..  என் மூச்சை நீ வாங்கி ...  என் மூச்சு நிற்கவேண்டும் ....!!!   @@@@@   உன்னை தவிர எதையும்  நினைக்காத ஞான நிலையை  என் இதயம் பெறவேண்டும் ....!!!   @@@@@   என்னில் இருக்கும் கண்ணீர்  உனக்கே உரியது -நீயே வலியை  தந்து நீயே எடுத்து விடு .....!!!   @@@@@   நானும் ஒரு இயந்திர மனிதன்  உன் நினைவுகளாலும் -உன்  இயக்கத்தாலும் இயங்குகிறேன் ...!!!   @@@@@   காற்றில்லாமல் வாழ முயற்சிப்பேன்  உன் காதல் இல்லாமல் ஓர் நொடி  கூட வாழ விரும்பமாடேன் ...!!!   @@@@@   கவிப்புயல்  இனியவன்  எஸ் ம் எஸ் கவிதைகள்  
