இடுகைகள்

காதலில் எப்படி வேறுபடும் ...?

சுவாசிக்கும் மூச்சாய் நீ பேசும் பேச்சாய் நீ சிரிக்கும் சிரிப்பாய் நீ காணும் கனவாய் நீ விடும் கண்ணீர் நீ இத்தனையும் நீயாக அத்தனையும் நானாக காதலில் எப்படி வேறுபடும் ...? & கவிப்புயல் இனியவன் 

என் இதயம் உன்னிடம்

விழியால் எய்த அம்பால்......... இதயத்தில் துவாரம்................. அதுவொன்றும் வியப்பில்லை .... என் இதயம் உன்னிடம்............. போகவேண்டும் என்று.............. துடிக்கிறது காயத்தை................ மறந்து ....!!! என் கவிதை அனைத்தும் உன் சின்ன சின்ன செல்ல சண்டையால் வருகிறது நிறுத்தி விடாதே செல்ல குறும்பு சண்டையை ....!!! & கவிப்புயல் இனியவன் 

உன் நினைவலையில்..........

வலையில் அகப்பட்டு........... துடிக்கும் மீனும்..................... உன் நினைவலையில்.......... துடிக்கும் நானும்................... ஒன்றுதான்............................. அது வழியின்றி இறந்தது.... நான் வலியால் இறக்கிறேன் ....!!! & கவிப்புயல் இனியவன்

உன் சிரிப்பு தேர் திருவிழா....

காதல் இதய கோவில்..... அதில், கனவு  தீப ஒளி ..... நினைவு அர்ச்சனை..... முத்தம் பிரசாதம்.... வலிகள்நேர்த்திக்கடன் .... உன் சிரிப்பு தேர் திருவிழா.... பிரிவு  மடை சார்த்தல் ...!!! & கவிப்புயல் இனியவன்

கல்லறை வரைதொடருதே ....!!!

காதற்ற ............ ஊசியும் கூட..... வராது என்பது..... உண்மைதான் ...!!! நீ ............. காதோரம் பேசிய..... வார்த்தைகள்... கல்லறை வரை....... தொடருதே ....!!! உன்னை ''''''''''' கண்ட நாள் முதல்'''''''''''''''' உள்ளங்கையில் இருக்கும்''''''''''''''''' ஆயுள் ரேகை குறைந்து வருகிறது ,,,,!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 185

உயிர் துறக்க போவதில்லை ...!!!

நீ ...... என்னை ஒரு கனமேனும்.... காதலிக்காமல் நான் உயிர்.... துறக்க போவதில்லை ...!!! என் ............... காதல் நினைவுகளை.............. வீட்டின் ஒட்டடைபோல்......... துடைத்து எறிந்து விட்டாயே ...!!! ​& வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 184

இனியவனின்அன்பு வணக்கம்.......!!!

அழகியே என் உயிரானவளே........ அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ... அகங்காரம் கொண்டவளே நீ அழகு .... அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு .... அகடவிகடம் கொண்டவளே நீ அழகு .... அகத்தில் அழகை தருபவளே நீ அழகு ....!!! அகலவன் பொழுதினில்........ அன்றட பணியை தொடரும்..... அனைவருகும் இனியவனின்.... அன்பு வணக்கம்.......!!!

என் கவிதைகள் விரும்புகிறது ...!!!

உனக்காக எழுதவா ..? உன்னையே எழுதவா ..? உனக்கா எழுதி......... உன்னோடு இருக்கவே ..... என் கவிதைகள் .. விரும்புகிறது ...!!! கவிதை .. எழுதிக்கொண்டே இருப்பேன் .. வார்த்தை தேவையில்லை ... என்னிடம் உந்தன் நினைவுகள் இருக்கும் வரை என்னுள்கவிதையாய் . . . பொழிந்து கொண்டே.. இருப்பேன் ...!!! & என் காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

என்னுள் உன் நினைவுகள்

விண்ணில் நட்சத்திரம் ... நடனமாடுகிறது .....!!! மண்ணில் மழை ... நடனமாடுகிறது.......!!! என்னுள் உன் நினைவுகள்  .... நடனமாடுகின்றன ...!!! & என் காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

தேடிக்கொண்டிருக்குதடி....!!!

உயிரே ...... உன்னை பார்க்க .. என் விழிகள் படும் பாட்டைப்பார் ...!!! நீயோ இதயத்தில் ... மறைந்திருப்பதை .... மறந்துபோய் .... தேடிக்கொண்டிருக்குதடி....!!! & என் காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

இறந்தும் துடிக்கும் இதயம் 02

கண்ணீர் ..... காதலின் வலியின்..... திரவம் ........ தண்ணீர் தான்..... மருந்து...........!!! முதலை கண்ணீரை..... நிஜக்கண்ணீரென்று.... நம்பிவிட்டேன்.........!!! காதலில் போடும்.... முடிச்சு திருமணத்தில்.... அவிழ்க்கபடுகிறது.........!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் 02 மற்றுமொரு காதல் கஸல்

இறந்தும் துடிக்கும் இதயம்

படம்
காதல்....... ஆனந்த கண்ணீரில்... ஆரம்பித்து....... ஆறுதல் கண்ணீரில்..... முடிகிறது..........!!! முகில்களுக்கிடையே.... காதல் விரிசல்....... வானத்தின் கண்ணீர்...... மழை..........................!!! நான் வெங்காயம் இல்லை.... என்றாலும் உன்னை..... பார்த்தவுடன் கண்ணீர்.... வருகிறது................!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் 

உன்னை அறிந்து கொள்வது ..?

கோபமான உன் முகத்தை பார்த்தாலே எனக்கு ரசிக்கதான் தோன்றுகிறது உன்னில் கோபமே வரமாட்டேன் என்கிறதே ....!!! & கவிப்புயல் இனியவன் ---- நீ ................. சிப்பிக்குள் இருக்கும் ... முத்தைப்போல் என் இதய அறைக்குள் .. முத்தாய் இருக்கிறாய் ....! சிறு மழைதுளிதான் முத்தாக மாறுவது போல் ... உன் ஓரக்கண் பார்வையால் இதயத்துக்குள் முத்தானாய் ..........! முத்துக்குழிப்பது எவ்வளவு கடினமோ ... அதைவிட கடினம் உன்னை அறிந்து கொள்வது ..? & கவிப்புயல் இனியவன்

சமுதாய கஸல் கவிதை

தொழிலாளியை ..... சுரண்டுவதற்கு  அவர்களிடம் ...... சதையில்லை ..... எலும்புகள் தான் மீதியாய் ...... இருக்கின்றன ...........!!! குடிகாரர் மட்டுமல்ல ..... அரசியல் வாதிகளும் .... உளறுகிறார் ................!!! நீ தீக்குச்சி தலைக்கனம் .... உன்னை சாம்பலாக்கும் ....!!! & சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்

சமுதாய கஸல் கவிதை

ஒவ்வொரு பிறந்த நாள் ..... கொண்டாட்டமும் ..... இறக்கும் நாளின் .... திறப்பு விழா ..............!!! நீ அடையாளப்படும் .... போதுபிரச்சனையை ...... எதிர் கொள்கிறாய் ......!!! மெழுகு திரி ..... தொழிற்சாலையில் ...... உழைப்பாளிகள் .... உயிருள்ள மெழுகுதிரி .......!!! & சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்