இடுகைகள்

காதலே உண்மை ஆன்மீகம்

காதலே உண்மை ... ஆன்மீகம் .... காதலின் ஒவ்வொரு .... செயலும் எண்ணத்தால் ... தோன்றுபவையே ...!!! வேறு எந்த கருவியும் .... உலகில் இல்லை .... காதலித்தவர்களே... எல்லா வற்றிலும் அன்பு ... கொள்கிறார்கள் ...!!! ஆண்டவனை பார்க்க ... துடிப்பதும் காதலியை ... பார்க்க துடிப்பவனும் .... ஒன்றுதான் ....!!! ^ கவிப்புயல் இனியவன்  காதலால் காதலியை காதலி கவிதை 04

காதலே உண்மை ஆன்மீகம்

காதலே  உண்மை ... ஆன்மீகம் .... காதலின் ஒவ்வொரு .... செயலும் எண்ணத்தால் ... தோன்றுபவையே ...!!! வேறு எந்த கருவியும் .... உலகில் இல்லை .... காதலித்தவர்களே... எல்லா வற்றிலும் அன்பு ... கொள்கிறார்கள் ...!!! ஆண்டவனை பார்க்க ... துடிப்பதும் காதலியை ... பார்க்க துடிப்பவனும் .... ஒன்றுதான் ....!!! ^ கவிப்புயல் இனியவன் காதலால் காதலியை காதலி கவிதை 04

காதலோடு எழுந்திருங்கள்

காதலை காதலியிடம் ... பெற்று காதலிக்கு ... காதலையே கொடுங்கள் ....!!! காதலுக்கு காதலை .... பரிமாறிய காதல் தோற்றதே இல்லை ....!!! காலை எழுந்தவுடன் .... காதலோடு எழுந்திருங்கள்   ....!!! ^ கவிப்புயல் இனியவன் காதலால் காதலியை காதலி கவிதை 03

காதலில் கள்வர் தோன்றலாம்

எனக்கொரு காதலி .... இருக்கிறாள் என்பது .... அழகில்லை .... எனக்காக ஒரு காதலி .... இருக்கிறாள் என்பதே .... அழகு ......!!! கவலை படாமல் இருக்கவே ... காதல் வேண்டும் ..... கவலைபட காதல் வேண்டாம் ....!!! காதலில்  கள்வர் தோன்றலாம் களவுகள் .... தோன்றக்கூடாது ....!!! ^ கவிப்புயல் இனியவன் காதலால் காதலியை காதலி கவிதை 02

காதலால் காதலியை காதலி...!!!

இதயத்தில் காதல் .... தோன்றக்கூடாது ... இதயமாக காதல் .... தோன்ற வேண்டும் ....!!! புற அழகில் காதல் .... தோன்றக்கூடாது .... அக அழகில் காதல் .... தோன்ற வேண்டும் ....!!! காதலியை காதலுக்காக காதலிக்காதீர் .... காதலால் காதலியை காதலி ...!!! ^ கவிப்புயல் இனியவன் காதலால் காதலியை காதலி கவிதை 01

கவிதையால் காதல் செய்கிறேன்

உலகின் ஒவ்வொரு உயிரினதுக்கும்... ஜோடி படைக்கபடுகிறது.... எந்த மூலையில் இருந்தாலும் .... இணைந்தே தீரும் -நீயும் இணையாமலாவிடுவாய்....? சுய புத்தி இருந்து பயனில்லை காதல் புத்தி வரவேண்டும் ... காதல் செய்வதற்கு ....! + கவிதையால் காதல் செய்கிறேன் 22 கவிப்புயல் இனியவன் + பிரபஞ்சமே .... எனக்கு ஒரு சக்தி கொடு .... பார்க்கும் பொருளெல்லாம் .... என்னவளாக தோன்றவை .... கேட்கும் ஓசையெல்லாம் .... என்னவளின் குரலாய் ... இருக்கவேண்டும் .....!!! தூக்கம் தொலையவேண்டும் .... தூக்கத்தில் கனவாய் வரவேண்டும் .... நினைவுகளால் இறக்கவேண்டும் .... நினைவுகளேவாழவைகவேண்டும் .....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 23 கவிப்புயல் இனியவன்

உனக்காக எழுதும் உயிர் மடல் ........!!!

இதய மன்மதன்  இதய கோயில் வீதி  இதயத்துடிப்பு ஒழுங்கை  இதய நகர் -02 என்னுயிரே உனக்காக எழுதும் உயிர் மடல் ........!!! நீ என்னிடம் நலமாகவே இருகிறாய் , இருப்பாய் உன்னை நான் இதயத்தில் வைத்திருப்பதால் நீ வேறு நான் வேறாக எப்பவுமே இருக்க முடியாது . என் இதயம் துடிப்பதே என் இதயத்தில் இருந்து நீ விடும் மூச்சு காற்றால் தான் என்பதை நான் கூறித்தான் நீ புரியவேண்டும் என்பதில்லை ......!!! என்னவளே ....!!! உன்னை பிரிந்து சிலமணிநேரம் வாழ்வது பிராணவாயு இல்லாத இடத்தில் நான் வாழ்வதற்கு நிகரானது உன் நினைவு என்னை வதைக்கும் போதெலாம் எனக்கு ஒன்றே ஒன்று தோன்றும் உனக்கு கடிதம் எழுதுவதே . இடை இடையே கவிதை போல் ஒன்றை கிறுக்குவேன் . அதை நீ கவிதையாக  வாசித்துகொள் .......!!! ஒரு  நிமிடமேனும் உன்னை .... நினைக்கவில்லை .... என்றால் அந்த மணிநேரம் ... நான் இறந்து பிறந்தேன் .... என்பதுதான் கருத்து .....!!! உன்னிடம் இருந்து வரும் கடிதம் வெறும் காகிதம் இல்லை. உன் இதயத்தின் உணர்வுகள் என்பதை  அறிவேன் . காலம் தாழ்த்தாமல் எனக்கு ஒரு கடிதம் எழுது உயிரே .....!!! இப்படிக்கு  இதயத்தோடு காத்திருக்கும்...

உண்மையின் மறு பக்கம் பார்கிறேன்

உண்மையிடம்   கேட்டேன்  ஒரு கேள்வி ...? நல்லது எது கெட்டது எது ...? உண்மை சொன்னது ..... வீட்டுக்குள்ளே செல்லும் போது செருப்பை .... கழற்றி வைக்கிறோம் .... செருப்பு ஒதுக்கப்படுகிறது .... கொழுத்தும் வெய்யிலில் .... பதைத்து துடிக்கும் போது .... செருப்பு சொர்கமாகிறது ....!!! நறுமணம் வீசும் போது ... மனம் சுவைக்கிறது ... துர்நாற்றம் வீசும்போது ... மனம் சுழிக்கிறது ...... காற்றே இல்லாத அறைக்குள் ..... அடைக்கப்பட்டு அடுத்து மூச்சு .... விட்டால் உயிர்பிழைக்கும் ... நிலையில் துர்நாற்ற காற்று .... சொர்க்கமாக மாறுகிறது ....!!! நாக்கு வறண்டு உடல் சோர்ந்து .... ஒரு துளி தண்ணீருக்கு மனம் ... ஏங்கி கொண்டிருக்கும்போது .... தெருவோர குட்டை தண்ணீர் ... அமிர்தமாகிறது ......!!! இப்போது சொல் .... நல்லது எது கெட்டது எது ...? உங்கள் தேவைக்கு அதிகமாக .... கிடைக்கும்போது தான் நீங்கள் .... நல்லது கெட்டது என்று .... பாகுபடுத்துகிறீர்கள் ....!!! தேவைக்கு குறைவாக இருக்கும் ... காலத்தில் எதுவுமே கெட்டதில்லை... உண்மை  மறுபக்கத்தை சொன்னது ...!!!

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள்

கனவுகள் தோன்றாவிட்டால் .... இரவுகள் அழகுபெறுவதில்லை ....! காதல் தோன்றாவிட்டால் .... மனித பிறவிக்கு அழகில்லை ....! காதலே நீ நீடூடி வாழ்க ...!!! + கவிப்புயல் இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 36

இனியவன் - பழமொன்ரியு

ஐம்பதில் வளையாது ஐம்பதிலும் வளைந்திருகிறது முதுகு @ பொய் சொன்னால் பொரிகிடைக்காது பொய் சொல்லியே மாளிகை கட்டினார் அரசியல் வாதி @ பாத்திரம் அறிந்து பிச்சை போடு பிச்சைகாரன் கையில் செல்லிடப்பேசி தருமம் தோற்றது @ அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு நஞ்சாக இருந்தும் அளவு மீறுகிறான் குடிகாரன் @ ஆழம் அறியாமல் காலை விடாதே அண்டம் அழிந்தாலும் ஆழம் தெரியாது காதல் @ ஆனைக்கு காலம் வந்தால் பூனைக்கும் காலம் வரும் காலம் மாறிக்கொண்டே போகிறது ஆட்சி மாறவில்லை குடும்ப ஆட்சி @ இட்டு கெட்டார் எவருமில்லை அன்னதானமடம் மூடப்பட்டுள்ளது நிதி மோசடி @ உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது பள்ளி செல்லாமலே நாட்டை ஆழுகிறார் அரசியல் வாதி @ கடுகு சிறிதாயினும் காரம் பெரிது அணுவாயுதத்தால் உலகை ஆள்கிறது வல்லரசுகள் @ ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் இன மத கலவரம் சாதிக்கட்சிகள் சந்தோசம் @ கவிப்புயல் இனியவன் பழமொன்ரியு 10

கவிப்புயல் இனியவன் பழமொன்ரியு

பொய் சொன்னால் பொரிகிடைக்காது பொய் சொல்லியே மாளிகை கட்டினார் அரசியல் வாதி @ கவிப்புயல் இனியவன் பழமொன்ரியு 02 @ பாத்திரம் அறிந்து பிச்சை போடு பிச்சைகாரன் கையில் செல்லிடப்பேசி தருமம் தோற்றது @ கவிப்புயல் இனியவன் பழமொன்ரியு 03

கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு

ஐம்பதில் வளையாது ஐம்பதிலும் வளைந்திருகிறது முதுகு @ கவிப்புயல் இனியவன் பழமொன்ரியு  01

கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள்

தெருவின் உடல் குளிர்மையானது தாகத்தோடு காத்திருகிறது குடம் குடிநீர் வண்டி @ கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள் 15 @ வாழ்க்கை நெளிவும் சுழிவும் ஓயாமல் போராட அறிவுரை கூறுகிறது நதிகள் @ கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள் 16 @ சாதிகள் வேறுபட்டவை  கூட்டு குடும்பமாய் வாழ்கிறார்கள்  பூமாலை  @ கவிப்புயல் இனியவன்  ஹைகூக்கள் 17

அதிசயக்குழந்தை - முதுமை

அதிசயக்குழந்தை - முதுமை ---------- பக்கத்து வீட்டில் தாத்தா .... பேரனை திட்டியபடி இருந்தார் .... தனது அனுபவத்தையெல்லாம் .... அறிவுரையாக கொட்டி கொண்டிருந்தார் ..... பேரனோ காதில் விழுத்தாமல் .... எங்கேயோ பார்த்துகொண்டிருந்தான் ... கோபமடைந்த தாத்தா அடிக்க கை .... ஓங்கினார்................................................. அப்போது அதிசய குழந்தை ....!!! தாத்தா நிறுத்துங்க...  நிறுத்துங்க .... உங்களுக்கு அறிவுரை செய்ய ... நான் பெரும் அறிவானவன் இல்லை ... என்றாலும் கூறதொடங்கினான்.....!!! முதுமையில் எல்லோரும் -தம் .... அனுபவத்தை அறிவாக நினைத்து .... அறிவுரை சொல்கிறார்கள் -தப்பு ... அனுபவம் வேறு அறிவு வேறு .....! உங்களது அனுபவம் மற்றவனுக்கு .... தேவைப்படாது ,பொருத்தமற்றது .... முதுமையில் அதை நீங்கள் பிறர் .... மீது திணிக்கிறீர்கள் தப்பு தாத்தா ...!!! வயது கூடியவர்கள் அறிவாளிகள் .... வயது குறைந்தவர்கள் அறிவற்றவர்கள் .... நாங்களே அனுபவசாலிகள் ... உங்களுக்கு அனுபவம் போதாது .... என்றெல்லாம் முதியோர் நினைப்பது .... தப்பு தாத்தா தப்பு .....!!! முதுமையின் ஒத்தகருத்...

நினைத்தால் மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!

மனசு கொஞ்சம் வலிக்குது .....!!! -------- பச்சை நிற உடலழகியின்... வண்ண வண்ண பூக்கள் .... அங்காங்கே அழகுபடுத்தும் .... பச்சை நிற அழகியின் வதனம் .... சுற்றும் முற்றும் பார்த்தேன் ... தூரத்தில் யாரும் இல்லை ... தடுப்பாரும் யாருமில்லை ....!!! கிள்ளி எடுத்தேன் பூவை .... தள்ளி போகமுடியாமல் .. தன் வதனத்தை இழந்து ... தவிர்த்த செடியின் சோகத்தை ... இப்போ நினைத்தால் ..... மனசு கொஞ்சம் வலிக்குது .....!!! ஆற்றங்கரைக்கு போனேன் ..... அழகான ஆற்று நீரில் கால் .... பதித்தேன் தட்டி சென்றது மீன் ... கூட்டம் கூட்டமாய் குடும்பத்தோடு .... ஒற்றுமையாய் வந்தபடியிருந்தன ....!!! என்னை மறந்தேன் -தூண்டிலில் ... புழுவை செருகி  துடிக்க துடிக்க .... மீன் ஒன்றை பிடித்தேன் .... இரண்டு உயிரை கொன்று ... அன்று இன்பமடைந்தேன் ..... இப்போ நினைத்தால் ..... மனசு கொஞ்சம் வலிக்குது .....!!! புல்வெளிக்கு விளையாட சென்றேன்..... வண்ணமாய் பட்டாம் பூச்சிகள் ... மனசு பட்டாம் பூச்சியாய் பறக்கவே ..... ஒரு பட்டாம் பூச்சியை பிடிக்க மனசு .... படபடத்தது கலைத்து களைத்து .... போராட்டத்தின் மத்தியில் பிடி...