இடுகைகள்

ஈகோ காதல் கவிதை

எனக்கும் அவளுக்கும் .... உயிர் பிரியும்வரை .... காதல் பிரியாத காதல் .... இருக்கிறது .....!!! அவளூக்கு ஏதும் நடந்தால் .... நான் இறந்து பிறப்பேன் .... எனக்கு ஒன்றென்றால்.... அவளும் இறந்து பிறப்பாள்.....!!! நாம் ஒருவரை ஒருவர் .... சந்திக்கும்போது ..... கீறியும் பாம்புமாய் .... இருப்போம் -காதல் நகமும் சதையும்போல் இனிமையாய் இருக்கும் ....!!! + கே இனியவன் ஈகோ காதல் கவிதை 

எந்த மாலையாக்குவாய் ,,,,?

உன் மீது காதலை .... நிறுத்துவதென்றால் .... வீசும் காற்றை  நிறுத்து .... நானும் நிறுத்துகிறேன் ......!!! புரிகிறதா ....? என்னில் காற்று இருக்கும்.... காலம் வரை உன் மீது ... காதல் இருந்தே தீரும் ..... நீ என்னை பார்த்த ஒவ்வொரு ... பார்வையும் மாலையாய் .... கோர்த்துவைதிருகிறேன்.... எந்த மாலையாக்குவாய் ,,,,? + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

என் இதயம் பட்டினியால் ...

பசிக்கும் போது ஏதோ.... கிடைப்பெதேல்லாம் .... வயிற்றுக்குள் போட்டு ..... தணிக்கமுடியும் உயிரே ....!!! காதல் இதயத்தில் .... பூக்கிறது  உன்னைத்தவிர ... அதற்குள் யாரையும் ... திணிக்கமுடியாது ..... உன் பதில் கிடைக்கும்வரை .... என் இதயம் பட்டினியால் ... வாடும்  மறந்துடாதே ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

இனிய வரவேற்பு கவிதை

ஆ தவன் துயில் எழமுன் .... ஆ ராவாரத்துடன் எழுந்த ..... ஆ ருயிர் நண்பர்களே .... ஆ ண்டவன் கிருபையால் ..... ஆ சீர் வதிக்கப்படுகிறோம்.....!!! ஆ னந்தம் பொங்கிட .... ஆ த்மா திருப்தியுடன் .... ஆ ரம்பிப்போம் பணிகளை .... ஆ யிரம் பணிவந்தாலும் .... ஆ ர்வத்துடன் பணிசெய்வோம் ....!!! ஆ ரம்பிக்கும் வாழ்க்கை ... ஆ லயத்துக்கு சமனாகட்டும்.... ஆ ண்டவன் வீட்டில் குடிகொள்ளடும் .... ஆ னந்தத்தால் பொங்கி வழியட்டும் ... ஆ ருயிர் உறவுகளே வாழ்க வளமுடன் ......!!! ஆ த்திரமே பகையின் சூத்திரவாதி .... ஆ த்திரத்தை வென்றவன் ... ஆ ண்டவனை வெல்கிறான் .... ஆ ண்டாண்டுகாலம் நட்புடன் .... ஆ ட்சி செய்கிறான் உலகை .....!!! ஆ தியும் அந்தமும் இல்லாத .... ஆ ண்டவனை தினமும் தொழு .... ஆ யிரமளவு அதிஷ்டம் குவியும் .... ஆ ருயிர் குடும்பத்துடன் .... ஆ னந்தமாய் வாழ்ந்திடுவோம் ....!!!

நகை சுவை கவிதைவரிகள்....!!!

நகை சுவை கவிதைவரிகள்....!!! ----------- புஷ்பத்தை உச்சரித்தார் தாத்தா பல் ஷெட் பறந்தது  ------------ உறக்கத்தில் உண்மைசொன்னார் அரசியல் வாதி  ----------- வளர்ந்த குழந்தை விசில் ஊதுது பஸ் நடத்துனர்  ----------- இல்லத்தில் தாக்குதல் குழந்தையும் கணவனும் அழுகை 

என் கவிதை வடிப்புகள்

காதல் கவிதைகள் ----------------------------- 01) கே இனியவன் கஸல் கவிதைகள் 02) வலிக்கும் இதயத்தின் கவிதைகள் 03) காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் 04) விஞ்ஞானமும் காதல் கவிதையும் 05) உதிர்ந்து கொண்டிருக்கும் காதல் 06) காதல் பிரிவு 07) தேவதாஸை காணவில்லை....? 08) கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! 09) நீ போகும் பாதை உன் பாதை ....!!! 10) வலிக்கும் கவிதைகள் 11) என்னவளே என் காதல் பூக்கள் 12) என் காதலும் நீ என் கவிதையும் நீ 13) உயிரான காதலை உணர்வோம் காதலரே ....!!! 14) உயிர் எழுத்தும் நீதான் உயிரே ....!!! 15) காதலால் காதல் செய் 16) கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம் 17) அன்புள்ள காதலே .....!!! 18) இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை 19) கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை 20) அன்பே கவிதையோடு வாழ்வோம் 21) உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!! 22) காதல் வலிக்குது 23) இதயம் தொடும்காதல் கவிதை 24) காட்சியும் கவிதையும் 25) காதல் இருக்க பயமேன் ...? 26) என் இதயத்தில் வாழ்பவளே .....!!! 27)  காதலில் வென்றுபார் வேதனை புரியும் ....!!! 28) என்னவளே... என்னவளே ...!!! 29) பட்டது மனதில்..! எட்டியது கவிதை......

என் கவிதை வடிப்புகள்

சமுதாய வாழ்க்கை கவிதைக்ள் ------------------------------------------------- 01) இரக்கப்பட்டு கவிதை எழுதவில்லை 02) தத்துவ சிதறல்கள் 03) நான் சொல்லும் தீர்ப்பு ....!!! 04) தொழிலாளர் தினம் ......!!! 05) நன்றாக நடிக்கிறோம்..!!! நல்லவனாக நடிக்கிறோம் ....!!! 06) தொழிலாளர் தின வாழ்த்துக்கள் 07) நடுவரின் தீர்ப்பே இறுதி 08) சாதி... சாதி...சாதி .....!!! 09)  நாக தோஷம் 09) கடவுளும் கவிதையும் ....!!! 10) புதுக்கவிதை 11) கே இனியவன் தத்துவங்கள் 12) இனிய வரவேற்பு கவிதைகள் 13) தொடரும் ஏக்கங்கள் 14) அறிவுரை காதல் கவிதைகள் 15) புதுக்கவிதையில் பொதுக்கவிதை 16) குடும்ப கவிதைகள் 17) எமக்காக சுமப்பவரே ....!!! 18) நினைவெல்லாம் அம்மா ....!!! 19) கே இனியவன்- இல்லறக்கவிதைகள் 20) கவிதை தாய்க்கு கவிதை 21)அகராதி தமிழில் கவிதை 22) தேர்திருவிழா 23) யாருக்கு வரும் இந்த தைரியம் ..?

என் கவிதை வடிப்புகள்

என் கவிதை வடிப்புகள் ------------------------------------ திருக்குறள் கவிதைகள் ------------------------------------- 01) திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 02) திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 03) இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள் ஹைக்கூ கவிதைகள் ----------------------------------- 01) மனித உறுப்புக்கள் ஹைக்கூக்கள் 02) கே இனியவன் ஹைக்கூக்கள் 03) கே இனியவன் சென்ரியூக்கள் 04) கே இனியவன் தாவரம் ஹைக்கூகள் சிறு கவிதைகள் -------------------------- 01) கே இனியவன் - கடுகு கதைகள் 02) இனியவன் மூன்று வரிக்கவிதை 03) குறுஞ்செய்திக்கு கவிதை 04) அம்மா -கடுகு கவிதை 05) அணு அணுவாய் காதல் கவிதை 06) எனது சிந்தனையில் உதிர்த்தவை 07) கே இனியவன் - சிந்தனை கிறுக்கல்கள் 08) முத்தான மூன்று வரி கவிதைகள் 09) சிறு வரியில் சமுதாய கவிதை 10) குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை 11) கே இனியவனின் பல் சுவை கவிதைகள் 12) குறட்கூ கவிதைகள் நட்புகவிதைகள்  -------------------------- 01) நட்பு சிதறல்கள் 02) கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

மனிதஉறுப்புக்கள் ஹைக்கூக்கள் (இதயம் )

மனிதஉறுப்புக்கள் ஹைக்கூக்கள் (இதயம் ) --- முழுநேர உழைப்பாளி  மறைமுக தொழிலாளி  " இதயம் " --- காதல் மன்னன்  காதலின் சின்னம்  " இதயம் " --- நல்லவன் மனசாட்சி  கெட்டவன் மனசாட்சி  " இதயம் " --- நன்னீர் வாய்க்கால்  கெட்டநீர் வாய்க்கால்  " இதயம் " --- அறுவை சிகிச்சை  மரணம் தப்பியது  " இதயம் "

மனித உறுப்புக்கள் ஹைக்கூக்கள்

மனிதஉறுப்புக்கள் ஹைக்கூக்கள் (விரல்கள் ) ------ வலது கை விரல்கள்  மெருமை காட்டியது  " மோதிரவிரல் " ----- கும்பிடுகிறேன்  பெருமை படுகிறது  "சின்ன விரல்கள் " ---- கோபத்தின் தொடக்கி  சண்டையில் தொடக்கி  "சுட்டுவிரல் " ---- குட்டை கவலையில்லை  அம்பு எய்வேன்  "கட்டை விரல் " --- நான் தான் வீமன்  உயரமானவனும்  "நடுவிரல் "

இனிய வரவேற்பு கவிதைகள் ( தொடர் 02 )

அ  ன்பு உள்ளங்களே.....  அ  ன்பு காலை வணக்கம் ..... அ  திகாலை எழுத்தவன் ...... அ  திசக்தி ஆதவ்னையே..... அ  ருகில் வரவைப்பான்......!!! அ  ன்பினால் ... அ  கிலத்தையே வெல்லலாம் .... அ  ங்கிகள் தொடக்கம் ... அ  ருகில் உள்ள உயிர்வரை ... அ  ன்பு செலுத்துங்கள் .....!!! அ  ற்புதங்கள் என்பது .... அ  திசயம் செய்வதல்ல ... அ  ன்புக்கு கட்டுபட்டு ... அ  ண்ட சராசரத்தோடு .... அ  டக்கமாவதே .........!!! அ  ன்று சொன்னதை செய்ததை .... அ  ன்றே மறப்பவனே .... அ  தி உயர் மனிதன் .... அ  தையே நினைத்துகொண்டிருந்தால் ... அ  ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!!! அ  ந்தி சாயும் நேரம் .... அ  ன்றைய நிகழ்சிகளை ... அ  சைபோட்டுபாருங்கள் .... அ  ருவருப்பான செயல் எது ...? அ  ரவணைப்பு செயல் எதுவென .....!!!

மறந்துபோய் நினைத்துவிட்டேன் ...

சுடராக இருந்த நம் காதல் ..... நிழலாக மாறியதேன் ...? நீ நிழலாக என்னை தொடர் .... நான் வெளிச்சாக வருகிறேன் ....!!! நம் காதல் பூமாலையில் .... நார் உள்ளது பூவை யார் .... யார் கோர்ப்பது ....? மறந்துவிட்டேன் - நீ என்னை மறக்கசொன்னதை ..... மறந்துபோய் நினைத்துவிட்டேன் .... மன்னித்துவிடு .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;816

நினைவுகள் இறக்காது உயிரே .....!!!

இத்தனை நாள் வரையும்.... எத்தனையோ உறவுகள் ... என்னை தூக்கி எறிந்தபோது .... இதயம் வலிக்கவில்லை  ....!!! ஒரு நொடியில் என்னை .... மறுத்துவிட்டாய் தூக்கி .... எறிந்து விட்டாய் .... வலிக்கவில்லை இதயம் .... இறந்துகொண்டிருக்கிறது ....!!! என்றோ ஒருநாள் ..... என்னை திரும்பி பார்ப்பாய் .... என் உடல் வலுவிழந்தாலும் .... நினைவுகள் இறக்காது உயிரே .....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

இனிய வரவேற்பு கவிதை

இ னிய  இ னிமையான  இ ன்பமான  இ ல்லத்தில்  இ றையருள்மிக்க  இ ல்லறவாழ்க்கை  இ ன்றும் என்றும்  இ றையருளால்  இ டையூறுகள் நீங்கி  இ ன்பமே  இ டைவிடாமல் கிடைக்க  இ ந்தநாள் மட்டுமல்ல  இ தயத்துடிப்பு உள்ளவரை  இ ன்பலோகத்தில் வாழ  இ ந்த  இனியவனில்  இ தயம் கனிந்த  இ னிய வணக்கம்  இ யன்றவரை அயலவரையும் இ ன்பமாய் வைத்திருங்கள்  இ றைவன் விரும்புவதும்  இ வ்வுலகில் எல்லோரும்  இ ன்பமாய் வாழவைக்கும்  இயல்புடைய மனிதனை தான் ....!!!

தனிமை இனிக்கிறது ....!!!

காதலே உலகம் .... வாழ்ந்துவிடாதீர் .... கடலால் சூழப்பட்ட .... தீவுப்போல்   .... கண்ணீரால் சூழப்பட்ட ..... இதயமாக வாழ்வீர்கள்......!!! தனிமையில் இருந்து .... சிந்தித்தேன் காதல் இனித்தது .... காதலோடு இருந்து சிந்தித்தேன் ... தனிமை இனிக்கிறது ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை