இடுகைகள்

சோகத்தோடு வாழுகிறாய் ....?

படம்
உன்னை காதலித்தேன்  தேறியது கவலை ....!!! நீ சிரிக்கிறாய்  நானும் சிரிக்கிறேன்  கவிதை அழுகிறது ....!!! நான் உன் நினையோடு  வாழுகிறேன்  நீ ஏன் சோகத்தோடு  வாழுகிறாய் ....? கஸல் ;345                 

உன் பார்வை காதலா ...?

படம்
கண்ணில் பட்ட உன்  பார்வை காதலா ...? காரியமா ...? உன்னோடு வாழ்வதற்கு  பாடுபட்டேன் முடியவில்லை  இன்னும்  காத்துக்கொண்டிருக்கிறேன் ...!!! காதல் ரோஜா சிவப்பு  நீ  கறுப்பு ரோஜா  கேட்கிறாய் ....!!! கஸல் 344 

வாளாய் வருகிறதே ...!!!

படம்
காதலுக்காக  உறவை மறக்கிறேன்  நீ என்னை  மறக்கிறாய் ....!!! நிலாவில் இருக்கும்  பாட்டி உருவம் போல்  உன் உருவம் ....!!! உன் நினைவுகள்  வானவில்லாய  வரவேண்டும்  வாளாய் வருகிறதே ...!!! கஸல் ;343    

உள்ளத்தை கிள்ளுகிறதே ....!!!

படம்
கண்ணாடியில்  முகத்தை பார்ப்பதில் கண்ட  சந்தோஷம் நேரில் இருக்கவில்லை ....!!! காதல் உள்ளத்தை  தொடவேண்டும்  இங்கு உள்ளத்தை  கிள்ளுகிறதே ....!!! வானத்தில் முகில் அசைவது  போல் உன் எண்ணம்  அசையவேண்டும்  உன் எண்ணம் சூரியனை  போல் நிலையாக உள்ளதே ...!!! கஸல் ;341     

உள்ளத்தால் உருவான காதல் ...!!!

படம்
உறவுகளை மறந்தேன்   உணர்வுகளை துறந்தேன்  உடமைகளை இழந்தேன்  உண்மைகளை மறைத்தேன்  உலகை நேசித்தேன்  உள்ளத்தை விரும்பினேன்  உயிராக மதித்தேன்  உத்தமனாக இருந்தேன்  உன்னையே நினைத்தேன் உள்ளதெல்லாம் சொன்னேன்  உருகியே காதலித்தேன்  உன் உண்மையான அன்பை  உணர்வோடு எதிர்பார்த்தேன்  உயிரே ஏன் என்னை வெறுத்தாய்  உண்மையை சொல்  உனக்கு நான் செய்த வலிதான் என்ன ...? உள்ளம் மட்டுமல்ல  உயிரும் வலிக்கிறது  உன் பிரிவை ஏற்க மறுக்கிறது மனம்  உண்மையொன்றை சொல்கிறேன்  உனக்கு இனி என்னைப்போல் ஒருவன்  உன் உயிர் இருக்கும் வரை கிடைக்காது  உன்னதமான என் காதல்  உள்ளத்தால் உருவான காதல்  உலகம் இருக்கும் வரை தொடரும் .....!!!   

முடிந்தால் தடுத்துப்பார் ....!!!

படம்
நீ மனையாக  வருவாய் என்றுதான்  காதலித்தேன் ....!!! உன் சந்தேகம்  நான் காதலன் தகுதியை  இழந்துவிட்டேன் ....!!! நான் நிச்சயம் உன்னை  மனைவியாக்குவேன் ...!!! கவிதையாலும்  கற்பனையாலும்  கனவாலும் .....!!!! முடிந்தால் தடுத்துப்பார் ....!!! 

காதலிக்காவிட்டால்

படம்
மலராவிட்டால்  மலருக்கு அழகில்லை  மின்னாமல் விட்டால்  விண்மீணுக்கு அழகில்லை  கூவாவிட்டால்  குயிலுக்கு அழகில்லை  ஆடாவிட்டால்  மயிலுக்கு அழகில்லை  சிரிக்காது விட்டால்  மழலைக்கு அழகில்லை  காதலிக்காவிட்டால்  மங்கையே உனக்கழகில்லை....!!!                                                                                

நீ கவிதையை ரசிக்கவில்லை .....!!!

படம்
கவிதை எழுதிய போது  காதல் இருக்கவில்லை  காதல் இருக்கும் போது  காதலி நீ கவிதையை  ரசிக்கவில்லை .....!!! நீ தந்த நினைவுகள்  கவிதையாக வரும் போது  கவிதை அழகாக உள்ளது  காதலியே நீ எங்கிருக்கிறாய்  கவிதை என்பது  எண்ணாத்தால் வரும்  கலைப்படைப்பு காதால் என்பது பருவத்தால்  வரும் மனப்படைப்பு .....!!!    

நீ ஒரு புள்ளியில் கோடு ...?

படம்
கற்பூரம் போல்  வாசமாக இருக்கிறாய்  விரைவாக எரிகிறாயில்லை ...!!! கடலில்  உப்புத்தான் விளையும்  நீ சக்கரையை  உருவாக்கா சொல்கிறாய் ...!!! இரு புள்ளி வேண்டும்  கோடு வரைய  நீ ஒரு புள்ளியில்  கோடு வரையச்சொல்கிறாய்  கஸல் 340                     

காதலுக்காய் காத்திருக்கிறாய் ...!!!

படம்
அழிக்க முடியாத  வலி காதல்  நீ அழிக்க சொல்கிறாய் ....!!! காதலில் உவமை அழகு  உபத்திரம் எப்படி ...? அழகு ....? நான் உன்னுடன்  வாழ்கிறேன் -நீ  காதலுக்காய்  காத்திருக்கிறாய் ...!!! கஸல் ;339                

நீ நெருப்பாய் வருகிறாய் ....!!!

படம்
வானமும்  காதலும்  ஒன்றுதான்  எல்லையில் ....!!! நடுக்காட்டில்  கண்ணை கட்டி  விட்டதுபோல்  உன் காதல்  காட்டில் நான் ...!!! மூச்சு விட்டால்  காற்றுத்தான் வரவேண்டும்  நீ நெருப்பாய் வருகிறாய் ....!!! கஸல் 338                     

நிழலாய் வருகிறாய் ....!!!

படம்
காதலில்  வலி  சிரிப்பு  சோகம்  தருபவள் நீ  கடலில் மீன்  மீண்டும் மீண்டும்  மேலே வந்து சுவாசிப்பது  போல் -உன்னை சுவாசிக்கிறேன்  கண்ணாடியில்  உன் முகத்தை தேடினேன்  நிழலாய் வருகிறாய் ....!!! கஸல் 337                   

நீயோ முள்ளால் போடுகிறாய் ....!!!

படம்
காதல்  உன்னையும் விடாது  என்னையும் விடாது  யாரையும் விடாது  விடாது கறுப்பு .....!!! நீ  வலியை தொடர்ந்து  தருகிறாய் அப்போ  பிரியப்போகிறாய் ....!!! காதல் விலங்கு  பூவால் போடணும்  நீயோ முள்ளால்  போடுகிறாய் ....!!! கஸல் 336              

அதுதான் முடியவில்லை ....!!!

படம்
நீ பேசினாய்  நானும் பேசினேன்  நீ சிரித்தாய்  நானும் சிரித்தேன்  நீ அழுதாய்  நானும் அழுதேன்  நீ பிரிந்தாய்  என்னால் அதுதான்  முடியவில்லை ....!!!                                                   

நீ தந்த வலி

படம்
எப்படி காதலிப்பது என்பதை ... கற்றுக்கொண்ட நான்  உன்னிடமிருந்து எப்படி  விலகுவது என்பதை  கற்றிருந்தால்  நீ தந்த வலி  தெரிந்திருக்காது ....!!!