கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா

----------------
கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா
----------------
உனக்குள்ளே நானிருப்பதால் ,இங்கு
எனக்குள்ளே மூச்சு வெந்து துடிக்குதடி
தனியாக பேசி இன்பம் காணாமல்
துணையாக பேசி இன்பம் காண்போம் வா
-------------------------------------!
வரைந்தேன் கண்ணால் உருவத்தை நானே
கரைந்தேன் அவள் நினைவுக்குள் தானே
துடி துடிக்குது ஏக்கத்தோடு இதயம்
அடிக்கடி சமாதானம் சொல்லுது மனம்
-------------------------------------!
எனக்குள்ளே உயிராய் கலந்திருப்பதால்,இதயம்
தனக்குள்ளே பேசி இன்பம் காண்கிறது
யாமிருக்க பயமேன் என்கிறார் இறைவன்
நானிருக்க பயமேன் நம்காதலுக்குயிரே
------------------------------------!
தேடினேன் நீ வரும் வழினெடுகிலும்
வாடினேன் உன் நிழல்கூட தெரியாததால்
துடிக்கின்ற இதயம் துடிக்க மறந்து
வடிக்கின்ற கண்களாய் மாறிவிட்டதடி
-----------------------------------!
&
காதல் வெண்பா
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்